Tuesday, February 10, 2009

பின்னை தலித்தியம்




பின்னை தலித்தியம்
தமிழ்சூழலில் தலித்தியம் ஏற்படுத்திய அதிர்வுகள் சாதரணமானவை இல்லை என்றபோதும் அதைவிட சற்று அதிகமாக பின்னை தலித்தியம் அதிர்வுகளை ஏற்படுத்த கூடும் என்பது அர்சால்களின் எழுச்சியில் இருந்து புரிய முடிகிறது.தலித்திய விசயங்கள் திரண்டவிதத்துக்கும் பின்னை தலித்திய விசயங்கள் திரளுகின்ற விதத்துக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.இஸ்லாமிய சூழலுடன் தலித்தியம் வேறு வகையில் உருகொண்டிருக்கிறது என்பதே இங்கு பிரதானமான விசயமாக இருக்கிறது.இஸ்லாத்தில் ஜாதிகளும்,ஜாதியமும்,ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை.இந்து சமூகங்களை போல இந்திய முஸ்லிம்கள் தன்னளவில் தீண்டாமையை கடைபிக்கின்றனர்.ஜாதீய ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு உரம் ஊட்டும் விதமாக திருமண உறவுகளிலும்,தொழில்சார் நடவடிக்கைகளிலும்,மதவிசங்களிலும் அதிகபடியான செயல்பாடுகள் நிறைந்திருக்கின்றன.குரானிய உன்னதம் பேசும் பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் சமூக தளத்தில் முஸ்லிம் அறிஞர்களின் உதவியுடன் ஜாதியத்தை தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இஸ்லாமிய புனித நூல்களை முன்னிறுத்தி சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு வியாக்கியானம் கற்பிக்கும் முயற்சிகளில் இஸ்லாமிய அறிஞர்கள் ஈடுபட்டிருந்தது தற்போது விவாத பொருளாக மாறியிருக்கிறது.
இந்தியஜாதியமைப்பு குறித்த பல ஆய்வுகளில் பிராமணிய பிரதிகளே மையமாக இருந்து ஜாதியத்துக்கு உதவிபுரிகின்றது என முன்வைக்கப்படுகிறது.இந்து சமூகங்கள் அல்லாத மற்ற சமூகங்களில் இந்து சமுக,பண்பாட்டுத் தாக்கங்களே பிரதான காரணியாக ஜாதியதுக்கு துணைபுரிகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இவ்வித ஊக கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாக பின்னாட்களில் முஸ்லிம் உன்னத அறிஞர்கள் இந்துயிசத்தின் தாக்கத்தின் காரணமாக ஜாதியம் இஸ்லாத்தில் கடைபிடிக்கபடுகிறது என்றும் சொல்லினர்.எதுஎப்படியாயினும் இஸ்லாதில் ஜாதியம் பற்றிய பல ஆய்வுகள் இந்து சமூக அமைப்புமுறை தான் இஸ்லமிய சமூக அமைப்புக்கும் ஜாதிய ரீதியாக உதவியுள்ளது என கூறுகின்றன.எனினும் இஸ்லாமிய புனித நூல்கள் எவ்வாறு ஜாதியத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளன என்றோ இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வாறு ஆதரவளித்துள்ளனர் என்றோ சரிவர ஆய்வுகள் நடத்தியதில்லை.இஸ்லாமிய சட்ட அறிஞர்களான உலாமாக்கள் சட்டரீதியாக ஜாதியத்துக்கு ஆதரவளித்து நிலைநிறுத்திய விசயம் இதுவரை கண்டு கொள்ளபடாமலே இருகக்கிறது.காபா எனும் கருத்தாக்கம் வழி ஜாதிய ஏற்றதாழ்வுகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ள நிலையை நாம் விமர்சனபடுத்த வேண்டிய நிலையிலுள்ளோம்.
இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து மதம் மாறிய சந்ததியினரவார்.தனிநபர் மதமாற்றங்களை விட ஒரு குறிப்பிட்ட ஜாதியோ அல்லது பிரிவோ முழுவதுமாக இஸ்லாமிய மயமாக்கப்பட்டு பின்னர் இஸ்லாமாக மாறுவது தான் பொதுவான நிலையாகும்.
தென்இந்தியாவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாத்தின் பரவல் மலபார் கேரள கடற்கரை வழியாக நடந்தேறியது. நபி முகம்மதுவிற்கு முன்பே அரபு வணிகர் தொடர்பு இருந்தபோதிலும் இஸ்லாம் அரபு வணிகர், சூபிகள் மூலமாகவே இங்கு பரவியது. இம்மண்ணின் பெண்களோடு அரபு வணிகர்கள் திருமண உறவுகள் கொண்டிருந்ததன் வழியாகவும் இது சாத்தியப்பட்டது. அடித்தள சமூகத்தைச் சார்ந்த மக்கள் சூபிகள் போதித்த மனித நேயம்,சமூக சமத்துவம், சகோதரத்துவக் கோட்பாடு, நடைமுறைகள் சார்ந்து இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டார்கள்.
வடஇந்தியப் பகுதியில் இஸ்லாத்தின் அறிமுகம் ஆட்சியதிகாரம், எல்லை விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் உருவானது. உமய்யாத் ஆட்சிக் காலத்தில் ஈராக் கவர்னர் யூசுப் பின் ஹஜ்ஜாஜ் படைத்தலைவர் முகமது பின்காசிமின் செயல்பாடு இதில் முக்கியமானது. தொடர்ந்து முகமது கோரி, முகமது கஜினி உள்ளிட்ட ஆட்சியாளர்களின் அதிகாரச் செல்வாக்கு மேலோங்கி நின்றது.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு முன்பும், பின்பும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களிடையே நிலவும் சமூகப் படிநிலை குறித்த பல சமூகவியல் ஆய்வுகள் நடந்தேறியுள்ளன. இந்து சாதியிமைப்பின் குணங்களான மேல்-கீழ் படிநிலை, சமூகக் குழுக்கள், அகமணமுறை, பாரம்பர்ய தொழில்முறை, இந்திய முஸ்லிம்களிடமும் வெளிப்பட்டுள்ளன. 1901 இந்திய கணக்கெடுப்புத்துறை முழுமையாகவோ அல்லது பகுதிநிலையிலோ 133 சமூகக் குழுக்கள் முஸ்லிம்களில் உள்ளதாக குறிப்பிடுகிறது.
சாஜிதா சுல்தானா ஆல்வி மற்றும் இம்தியாஸ் அகமது சமூகவியல் அறிஞர்கள் முஸ்லிம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வான படிநிலை கட்டமைப்பின் தோற்றுவாய் அடிப்படை நஸ்ப் கருத்தாக்கத்தில் உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர். அரபு சமூகத்தில் தோன்றிய நபி முகமது மற்றும் அவர்தம் குடும்ப, சமய வாரிசுகளின் தொடர்ச்சியாக மார்க்கப் பிரச்சாரகர்களாக இந்தியாவுக்கு வந்த வம்சாவழியினர் அஷ்ரபுகளாக குறிக்கப்படுகின்றனர். இந்திய வகைப்பட்ட இந்து சாதியமைப்புகளிலிருந்து மதம் மாறிய முஸ்லிம்கள் அஷ்ரப் அல்லாதவர்களாக கருதப்படுகின்றனர். அஷ்ரப் என்பதற்கு உயர்ந்தவர்கள், அரபு ரத்தம் ஓடும் முஸ்லிம்கள், உயர்சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
அஷ்ரபுகளின் கிளைப் பிரிவுகளாக சையதுகள், ஷேக்குகள், மொகல்கள், பதான்ஸ் அடையாளப்படுத்தப்படுகின்றனர். சையதுகள் நபிமுகமதுவின் வழித்தோன்றல்கள், ஷேக்குகள், அரபு, பாரசீக பூர்வீகத்தினர், மொகல்கள் துருக்கி, முகலாய ஆட்சிப் பரம்பரையினர், பதான்ஸ் ஆப்கானிஸ்தான், வடமேற்கு பகுதி பூர்வீகத்தினர் என்பதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அஷ்ரப் அல்லாதவர்களில் ஒரு பகுதியினர் அஜ்லபுகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்து இடைநிலை சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் பாரம்பர்ய மூதாதையர் தொழிலை செய்து வரும் சமூகங்கள் தாழ்ந்தவர்கள், புனிதமற்றவர்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளப்படுகிறது.
முஸ்லிம்களிடத்தில் நிலவும் மற்றுமொரு அடிநிலை சாதிப்பிரிவாக அர்சால்கள் உள்ளனர். தீண்டத்தகாத சாதிகளிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களாக கருதப்படுகின்றனர். பிற முஸ்லிம்களால் ஒன்றென கருதப்படாதவர்கள், பள்ளிவாசலுக்குள் நுழைய உரிமை மறுக்கப்பட்டவர்கள், பொதுமையவாடியை பயன்படுத்த தடை செய்யப்பட்டவர்களாக இவர்கள் இருக்கின்றனர். துப்புரவாளர்கள், உணர் மண்ணெடுக்கும் வண்ணார், நாவிதர், கழிவு சுத்தம் செய்பவர் உள்ளிட்ட அடிநிலை தொழில் செய்யும் தலித் முஸ்லிம்களாக அடையாளம் கொள்ளப்படுகின்றனர்.
இந்திய முஸ்லிம் பண்பாட்டு ஆய்வாளர் யோகிந்தர் சிக்கந்த் தெற்காசிய முஸ்லிம் சமூகங்களில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளிலும் சாதீய படிநிலை கட்டமைப்பு உள்ளதாக குறிப்பிடுகிறார். வங்காளப் பகுதியில் குவாகஸ் குலம் சடங்கியல் ரீதியாக கீழ் படிநிலை அமைப்பினை கொண்டுள்ளது. மனிதக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில் சார்ந்து நிறுவப்பட்ட சுத்தம் - அசுத்தம் கருத்தாகி அடிப்படையில் கீழ்நிலையினர்களாக சொல்லப்பட்டனர்.
ஒஞ்சிசாத் உயர்சாதி மற்றும் நீச்சிசாத் அடிநிலை சாதி உறவுகளும், இயங்கு முறைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவத்திலேயே உள்ளன. அதிகார உரிமை கொண்ட உயர்சாதிக்குழுக்கள் ஜஜ் மன்ஸ் சலுகை பெறும் அடிநிலை வர்க்க சாதிக்குழுக்கள் காமின் (எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். உயர்நிலை சாதியினரை அடிநிலை சாதியினர் தொட்டுவிட்டால் குளித்தல் சடங்கின் மூலம் அசுத்தம், சுத்தமாகிவிடுகிறது. இருபிவினருக்கும் மையவாடிகளும் தனித்தனியாகவே உள்ளன.
வங்காள முஸ்லிம்களிடையே நிலவும் பொதுஉணவு மறுப்பு, பொதுமையவாடி மறுப்பு, அகமணமுறை, தீட்டுக் கொள்கை கூறுகளை முஸ்லிம் ஆய்வாளர் எம்.கே.ஏ. சித்தீகு விளக்குகிறார். டபலிஸ் சாதியினர் லால்பெகிஸ் மக்களிடமிருந்து தண்ணீரோ உணவோ வாங்கிச் சாப்பிட மறுத்துவிடுவார்கள். சையதுகள் மற்றும் ஷேக்குகள் என்பதான உயர்சாதி முஸ்லிம் ஆண், அடிநிலை சாதியாக கருதப்படும் பிரிவின் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் அடிநிலைப் பிரிவு முஸ்லிம் ஆண் உயர்சாதி முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய முடியாது. முதல் நிலை பிரிவு கலப்பு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகள் சையது சாதா மற்றும் ஷேக்சாதா என்று குறிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் சூபி மரபுகளை தோற்றுவித்த ஞானிகள் பெரும்பான்மையும் அரபு பூர்வீக உரிச்மையைக் கோரும் சையதுகளாகவே இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். அரபு குறைஷி இனக்குழு தொடர்போ, அரபு பூர்வீகமும், நபிமுகமதுவின் வழித்தோன்றல் மரபோ அல்லது அரபு அல்லது பாரசீக பகுதியிலிருந்து வந்த அடையாளமோ, இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் ஆட்சியாளர் படைத்தலைவர் வாசுகளாகவோ சையதுகள், ஷேக்குகள், மொசல்கள், பதான்ஸ்கள் நால்வகை பிவினர்களும் அஷ்ரபுகளாக கருதப்படுகிறார்கள்.
ஷெரினாபட்டி மற்றும் இம்தியாஸ் அகமது ஆய்வொன்றில் அஷ்ரபு சாதியினர் தவிர்த்த அடித்தள முஸ்லிம்கள் பற்றி சுட்டிக்காட்டுகிறார். ஜ÷லாஹஸ் - நெசவாளர், தர்சிஸ் - தையலர், டோபிஸ் -வண்ணார் சாதியினர்களும் அடிநிலையில் நட்ஸ் எனப்படும் இறந்த மிருகங்களின் தோல்களிலிருந்து இசைக் கருவிகளை செய்பவர்களும் உள்ளனர்.
மேலும் இசைக் கலைஞர்களில் ஒரு பிவினரான மிராசிஸ் அஷ்ரபு உயர்சாதியினருக்காக, அவர்களைப்போல் உடையணிந்து பாவனை செய்து உருது மொழியில் கலைகளை நிகழ்த்தக் கூடியவர்களாகும். ஆனால் நட்ஸ் எனப்படுவோர் பொதுமக்கள் மத்தியிலும், வட்டார மொழி வழக்கிலும் இக்கலைகளை நிகழ்த்துகின்றனர்.
பஞ்சாபின் சிஸ்தி பாரம்பர்ய குலம் என்பதும் ஒரு வகையில் சாதியக் குழுவின் அடையாளமாகவே மாறியுள்ளது. இங்கு சூபி ஞானி பாபா பரீதுத்தீண்ட (1265) தர்காவை மட்டுமல்ல நிலங்கள் மற்றும் விவசாயத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர். சூபி சகோதரத்துவ உணர்வை இசையின் மூலம் பரப்பும் கவாலி இசைக் கலைஞர்கள் ஆன்மீகத் தன்மை கொண்ட அவர்களின் கவாலிப் பாடல்கள், இசைக்கருவிகளின் ஓசைகள் அனைத்தையும் இசைக்கும் இவர்கள் சூபிமரபின் தொடர்பை போற்றினாலும் உண்மையிலேயே தீண்டத்தகாத இசைக்கலைஞர்களாக கருதப்பட்டார்கள்.
உத்திரபிரதேசத்தில் முஸ்லிம் சாதி கலாச்சார தொடர்பு குறித்த தனது ஆய்வில் கெüஸ் அன்சா தீண்டத்தகாத சாதியாக கருதப்படும் பங்கிகள் கழிவு சத்தம் செய்பவர் பற்றி எழுதுகிறார். எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் பள்ளிவாசலுக்கு உள்ளோ, முஸ்லிம் ஞானிகளின் தர்காவிற்கு உள்ளோ பங்கிகளை நுழைய அனுமதிப்பதில்லை. முஸ்லிம் பங்கிகளுக்கு உள்ளே ஒரே உரிமை என்பது குர்ஆனை கற்றுக்கொள்ளலாம் என்பது மட்டுமே. ஆனால் அவர்கள் குர்ஆனை கற்றுக் கொடுப்பவர்கள் ஆக முடியாது. அஷ்ரபுகள், முஸ்லிம் ராஜபுத்திரர்களிடத்தில் பங்கிகள் தங்கள் பாத்திரத்திலேயே உணவு சாப்பிடவேண்டும். அது இல்லையெனில் மண்சட்டியில் மட்டுமே உணவு வழங்கப்படும். பங்கிகள் தண்ணீர் குடிக்கும்போதுகூட உதடுகள் ஜார்களில் பட்டுவிடக்கூடாது என்பதான வரைமுறைகளும் உண்டு.
லீலாடூப் கேரளாவை ஒட்டியுள்ள லட்சத்தீவுகளில் வாழும் மக்களின் சமூக படிநிலை குறித்த ஆய்வில் மூன்று விதமான அடுக்குகளை குறிப்பிடுகிறார். பழங்குடி முஸ்லிம்கள் 95 சதவிகிதத்திற்கு மேல் இங்குதான் வாழுகிறார்கள். நம்பூதிகள், நாயர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் காரணமானவர்களாக கோயாக்கள் உள்ளனர். சமயத் தூய்மையின் அடையாளமாக கருதப்படும் இவர்கள் நிலங்களின் ஏகபோக உமையும், போக்குவரத்து படகுகளின் உமையும் பொருளாதார வலிமை கொண்டதாக உள்ளது. அடுத்தப் பிவினராக உருக்கார்ஸ் மாலுமிகள் படிகோட்டி சாதியினராகவும், மிளசேரிஸ் மரம் ஏறும் தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.
கபோயவு) பவுத்தர், இந்துக்கள் அதிகமாக வாழும் நேபாளத்தில் நான்கு சதவிகிதமே வாழும் முஸ்லிம்கள் பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார். காஷ்மீரத்து முஸ்லிம்கள் உயர்குடி அஷ்ரபுகளாக வாழ்கின்றனர். நாவிதத் தொழில், சுன்னத் செய்வதற்கு இந்திய முஸ்லிம்களிலிருந்து செலவு செய்து அழைக்கின்றனர். செல்வ நிலை உயர்ந்ததும் வேறு தொழிலுக்கு பெயர்ந்து விடுவதால், மீண்டும் புதிய நாவிதர்களை அழைக்கிறார்கள்.
காட்மண்டுவில் வாழும் அஷ்ரபுகள், காஷ்மீரிகள், சூபிஞானிகளின் கலாச்சார சடங்குகளை பேணுகின்றனர். ஆனால் பள்ளத்தாக்கில் வாழும் அடிநிலை முஸ்லிம்களுடனான உறவுகளை மறுக்கிறார்கள். ஹிந்துஸ்தானி என அழைக்கப்படும் இந்த முஸ்லிம்கள் பல்வேறு கைவினைத் தொழில் சாதி குழுக்களிலிருந்து வந்தவர்களாகும். பொதுவான பள்ளிவாசல்கள், மையவாடி இந்த முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலும் சாதியபடி நிலை அமைப்பு இறுக்கமாகவே காணப்படுகிறது. வடபாகிஸ்தான் ஸ்வாட் பகுதியில் முஸ்லிம் சமூகம் குவாம்கள் குழுக்களாக தொழில் அடிப்படையில் பிரிந்துள்ளன. குழுக்களுக்கிடையிலான திருமணம், ஒன்றாக வாழ்தல் என்பவை மேல் - கீழ் பாகுபாடுகளால் பாதிப்படைந்தும் உள்ளன. மனிதக் கழிவுகளோடு தொடர்புடைய தொழில்களைச் செய்வோர் அடிநிலைப் பிவாகவே கருதப்படுகின்றனர். அடிநிலை சாதி முஸ்லிம்கள் உயர்சாதியினரால் உமைகள் மறுக்கப்படுபவர்களாகவும், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களாகவும் உள்ளனர்.
பாகிஸ்தானின் 1959, 1979 களில் இடம் பெற்ற நிலச்சீர்திருத்தச் சட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாமைக்கு காரணமாக நில உடைமைத்துவத்தை பாதுகாக்க நின்ற உலமாக்களை குறிப்பிடலாம். சிந்து மாகாணப்பகுதி முஸ்லிம் விவசாயிகள் தாழ்நிலை வாழ்வுக்கு காரணம் இறைவன் ஏற்படுத்திய தக்தீர் எனும் விதிக் கோட்பாடே என பிரச்சாரம் செய்யும் பீர் மற்றும் சீர்சாதாக்களின் கருத்தாளுமையாலும் ஒடுக்கப்பட்டே இருக்கிறார்கள். இந்த பீர் மற்றும் சீர்சாதாக்கள் கி.பி. 711ல் சிந்துவில் நுழைந்த அரபு பூர்வீகர்களின் வழித்தோன்றலில் உருவான இஸ்லாமிய சமயத் தலைவர்களாக இருக்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தில் நிலவும் இத்தகையதான சாதீய படிநிலை கட்டமைப்பை தத்துவரீதியாகவும், கோட்பாட்டு ரீதியான பார்வையிலும் அங்கீகக்கும் வகையில் திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துச் சொல்லி ஆதிக்க கருத்தியலை நிலைநாட்டத் தகுந்த விளக்கங்களை சில அறிஞர்கள் சொல்ல முற்படுகின்றனர்.
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறை அச்சம் கொண்டவர்கள் தான். (திருக்குர்ஆன் அத். 49 அல்ஹ÷ஜ÷ராத், வசனம் 13)
திருக்குர்ஆன் ஆண் / பெண் என்பதான பாலின வேறுபாட்டையும், பல்வேறு குலங்கள், கோத்திரங்கள் சமுதாயத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த மேல் கீழ் வேறுபாடுந்தன்மையை இறை அச்சுக் கோட்டின் அடிப்படை மூலமே கண்டடையமுடியும் என்பதான கருத்தியலை முன்வைக்கிறது. சமூக தன்மையை, ஆன்மீகத் தன்மையால் இடம் பெயரச் செய்கிறது.
மக்காவில் வாழ்ந்த அரபிகள் குறித்த பார்வையிலும் இறைவனையும் மறுமையையும் நம்பாத அரபிகள் குறித்து எதிர்மறைக் கருத்துக்களையே திருக்குர்ஆன் முன்வைக்கிறது. நாட்டுப்புறத்து அரபிகள் அல்லது காட்டரபிகள் குறித்த பல பதிவுகளில் கீழ்க்கண்டதும் ஒன்று. நிராகப்பிலும் வஞ்சகத்திலும் காட்டரபிகள், மிகக் கொடியவர்கள். அன்றி அல்லாஹ் தன் தூதர் மீது அருளியிருக்கும் வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். (அத்யாயம் 9: அத்தெüபா வச. 97)
நபிமுகமது வாழ்ந்த அரபுச் சமூகங்களில் இன, குல, கோத்திர வேறுபாடுகளும், ஒரு இனம் அல்லது குலத்தின் மேலாதிக்கமும் இருந்துள்ளது. ஹதீஸ்களின் மூலமாக தெயவருகிறது. அரேபிய சமூகத்தில் இன அடிப்படையில் மிகப்பிரதானமாக அரபுகள், பாரசீகர்கள், ரோமர் இனங்கள் வலுவாக இருந்துள்ளன. அரபு இனத்திற்குள்ளேயே குறைஷியர், தமீம், முளர், ரபீஅ உள்ளிட்ட பல கபாயில் குலங்களும் அஸ்ஸம், கிஃபார், முûஸனர் குலங்களும், பிறவகைகளான பனூதமீம், பனூஆமிர், பனூஅஸத், பனு சதப்பான், ஹவாசின், கஹ்தான் குலங்களும் வாழ்ந்து வந்தன.
நபி முகமது வாய்மொழி வரலாறுகளின் வழி குறைஷி குலமே மிகமுக்கியமாக அரபுச் சமூகத்தின் பின்பற்றத்தக்க குலமாகவும் ஆளும் தகுதி படைத்த உயர்குலமாகவும் கருதப்பட்டுள்ளது.
1. மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளை பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமிலிருப்பவர்கள் குறைஷிகளில் முஸ்லிமாயிருப்பவரை பின்பற்றுபவர் ஆவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறைமறுப்பாளரை பின்பற்றுபவர் ஆவார். (புகா, ஹதீஸ் 3495, அபுஹ÷ரைரா அறிவிப்பு)
2. இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும் அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. (புகா ஹதீஸ் 3501, இப்னு உமர் (ரலி) அறிவிப்பு) இஸ்லாத்திற்கு முன்பும் பின்பும் கபாவின் நிர்வாகமும், ஹாஜிகளுக்கு நீர், உணவு அளிக்கும் பொறுப்பும் குறைஷிகளுக்கே இருந்துள்ளது. ஆட்சியதிகாரம் மட்டுமல்ல, குறைஷி குலம் பேசிய வழக்கு மொழியில்தான் அமைந்துள்ளது குர்ஆன் கூட இறங்கப்பட்டது.
கிழக்கு திசையிலிருந்துதான் குழப்பங்கள் தோன்றும். ஒட்டகங்கள் மற்றும் மாடுகளின் வால்களைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருக்கும் ரபீஅ மற்றும் முஸர் குலங்களைச் சேர்ந்த கிராமவாசிகளான நாடோடிகளிடையேதான் கல்மனமும் கடின சித்தமும் காணப்படும். (புகா ஹதீஸ் 3498, அபூமஸ்ஊத் அல் அன்சா அறிவிப்பு)
ரபீஅ மற்றும் முஸர் குலாம்களைச் சார்ந்த கிராமப்புற மக்கள் முரட்டுத்தன்மையும், இறுகிய பிடிவாத குணமும் கொண்டுள்ளவர்கள் என்பதான குற்றச்சாட்டு ஆதிக்கத் தன்மை நோக்கிலான பிற குலங்களின் அணுகுமுறையாக அமைந்துள்ளதை கவனப்படுத்திக் கொள்ளலாம். இந்த வகை ஆதிக்க கருத்தியல் அணுகுமுறை இந்திய முஸ்லிம் அமைப்பின் சாதீய படிநிலைக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறதா என்பதான கேள்வியும் இங்கு எழுப்பப்படுகிறது.
இஸ்லாமியர் ஆட்சியின் மத்திய கால உலமாக்களின் நூல்களில் சாதீய படிநிலைக்கு ஆதரவான கருத்தியல்கள் பல இடம் பெற்றுள்ளன என்பதை நவீனகால இஸ்லாமிய ஆய்வாளர்களில் ஒரு சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். டெல்லி நேரு பல்கலைக்கழக அரபு மொழித்துறை முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் மசூத் ஆலம் பலா இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி þ தீண்டாமை குறித்த ஆய்வில் இதனை தெவித்துள்ளார்.
இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி அறிமுகப்படுத்தி எழுதியும் வரும் யோகிந்தர் சிக்கந்த் இந்திய முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமும் சாதிய வேறுபாடுகளும் ஆய்வின் வழியாகவும் இதனை நிறுவுகிறார். உலக முஸ்லிம்களின் இரு முக்கியப் பிவுகளாக சுன்னி மற்றும் ஷியாக்கள் உள்ளனர். திருக்குர்ஆன், ஹதீஸ் நபிமுகம்மதுவின் வழிகாட்டுதல்களோடு சுன்னிகளும், கூடவே நபிமுகமதுவின் மருமகனார் இமாம் அலி மற்றும் அவர் தம் மரபினர்களின் ஹதீதுகளோடும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களாக ஷியாக்களும் உள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தேவ்பந்த், பரெல்வி எனப்படும் தெற்காசிய முஸ்லிம்களில் சுன்னி பிவினர் இருபெரும் சட்டப் பள்ளிகளுக்குள் தங்களை வரையறுத்துக் கொள்கின்றனர். ஹனபி, ஷாபி, ஹன்பலி, மாலிகி என்பதான துணைப் பிவுகளான மத்ஹபுகளின் சிந்தனைகளும் இதில் உள்ளடங்கும்.
டெல்லியில் 1867ல் தேவ்பந்த் என்னுமிடத்தில் உருவாக்கப்பட்ட மதரஸô இஸ்லாமிய சமய நிறுவனத்திலிருந்து உருவாகி வரும் சமய அறிஞர்கள் தேவ்பந்த் அறிஞர்களாக கருதப்படுகின்றனர். இந்த தோற்றுவாயிலிருந்து ஜமாஅத்தே இஸ்லாமி, தலிபானியம், வகாபிய இயக்கங்களின் அறிஞர்களும் உருவாகி வந்துள்ளனர். ஹனபி மார்க்கச்சட்டப் பள்ளி சார்ந்த கருத்துக்களை, நூற்களை எழுதியுள்ளவர்களாகவும் இவர்கள் உள்ளனர். சவூதி ஹன்பலி மத்ஹபு சிந்தனைகளின் தாக்கமும் மிகுந்த அளவில் இதன் வழியாகவே உருவாகியுள்ளது. இப்பிவின் பெரும்பான்மையினர் சூபிச கோட்பாட்டிற்கு எதிராகவுமே இயங்கியுள்ளனர்.
இதற்கு மாற்றமாக பரெல்லி பிவினர் சூபிசம், சூபிஞானிகளின் தர்கா வழிபாடுகளில், தங்களை பழக்கப்படுத்திக் கொண்டவர்களாகவே உள்ளனர். பாகிஸ்தான் முஸ்லிம்களில் ஐம்பது சதவிகிதம் பரெல்லி, இருபது சதவிகிதம் தேவ்பந்த், விஷயாக்கள் பதினெட்டு சதவிகிதம் பரெல்லி இருபது சதவிகிதம், தேவ்பந்த், ஷியாக்கள் பதினெட்டு சதவிகிதம் அஹ்லெ ஹதீத் 4 சதவிகிதம், இஸ்மாயிலிகள், அகமதியாக்கள் இரண்டு சதவிகிதம், பிற சிறுபான்மையினர் நான்கு சதவிகிதம் என்பதான ஒரு கணக்கீடும் உள்ளது.
தேவ்பந்த், பரேல்வி, அஹ்லெஹதீத், ஜமாத்þ-இஸ்லாமி அறிஞர்களின் நூல்களை ஆய்வு செய்து மசூத் ஆலம் பலா சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். தேவ்பந்த் மதரசா கல்வி நிறுவனத்தில் பிறப்பு அடிப்படையிலான தகுதிக் கோட்பாடான காஃபாவை முன்வைத்து இஸ்லாத்தில் சாதித் தன்மையை வலியுறுத்தும் நடைமுறை இருப்பதுவும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது என்கிறார். மேலும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்தியாவின் சூபி அறிஞரான ஷாவலியுல்லாவும் பிறப்பு அடிப்படையிலான காஃபா கோட்பாட்டுக்கு வெளியே மணஉறவு கொள்வது கொலை செய்வதை விடவும் அபாயகரமானது எனக்கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
திருக்குர்ஆன் முஸ்லிம்களின் சமத்துவம் பற்றி பேசினாலும் சாதி இந்திய முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிறது. மேல் - கீழ் தன்மை வெளிப்படுகிறது. தொழில்வகை சாதிக் குழுக்கள் இந்து சமூக நிலையின் கூறுகள், பிராமணிய பிரதிகளில் உள்ள உயர்சாதி அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமிய நீதி வல்லுனர்கள் சாதியின் ஒப்புத் தன்மைக்கு, காபா என்னும் தகுதிக் கோட்பாட்டிற்கு சமயரீதியான விளக்கமும் அளிக்கிறார்கள். காபா, சாதி, சாதீய மேலாண்மை கொடை சமூக அடுக்குகள், உலமாக்களாலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆனால் திருக்குர்ஆனின் சமத்துவத்திற்கு எதிராகவே இது செயல்படுகிறது.
பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்துயிசமிருந்துதான் மதம் மாறியிருக்கிறார்கள். தனிநபர் மதமாற்றம் மத்தியகாலத்தில் மிகவும் குறைவு. மதமாற்றம் கூட்டு சமூக நடவடிக்கை. எனவே இம்மாற்றத்திற்கு பிறகு திருமணங்கள் உண்மையான சாதிக்குழுக்களிடையே நடைபெற்றது. மதமாற்றம் நிகழ்ந்தபோதும் உள்ளூர், இஸ்லாத்திற்கு முந்திய நம்பிக்கைகளும், நடவடிக்கைகளும் தொடர்ந்தன. இந்து கலாச்சார தாக்கமும், நம்பிக்கைகளும் சாதி கலந்த நடவடிக்கைகளும் முஸ்லிம் சமூகத்தில் நிலவின.
இந்திய முஸ்லிம்கள் பற்றிய எழுத்துக்களில் மேன்மைமிகு சாதியினர் அல்லது அஷ்ரப், கீழ்நிலையினர் அல்லது ரஸில், கமின் அல்லது அஜ்லப் ஆயினர். நவீன சமூக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பே இந்த அஷ்ரப் þ அஜ்லப் பிரிவினையாகும். இதனை மத்திய காலத்து அஷ்ரப் அறிஞர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி தங்கள் எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்கள்.
உள்ளூரில் மதம் மாறியவர்களைவிட அரபு மத்திய ஆசியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழித்தோன்றல்கள்தான் சமூக அந்தஸ்து மிக்கவர்களாக பாவிக்கின்றனர். இது இன வித்தியாசத்தையும் உள்ளடக்கியதாக குறிப்பாக அஜ்லவுகள் கறுத்த தோலுடையவர்களாகவும், அஷ்ரபுகள் வெள்ளை நிறம் சார்ந்ததும், அரசியல் ஆதிக்க படிப்பாளிகளாகவும் அதே சமயம் அஜ்லப்கள் முன்னோன் கைவினைத் தொழில், விவசாயம் உள்ளிட்ட உடல் உழைப்பு சார்ந்த அடித்தள தொழில்ககளை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர். குர்ஆனை தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு ஏற்ப பயன்படுத்தியும் கொண்டார்கள்.
டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் அரசவையில் இருந்த பழமை வாய்ந்த 14þம் நூற்றாண்டைச் சார்ந்த துருக்கிய அறிஞர் காபா தகுதிக் கோட்பாட்டின் அடிப்படையில் எழுதிய ஜியாவுத்தீன் பரணி பத்வா இ ஜஹாதையை குறிப்பிடலாம். அஜ்லப்களை விட அஷ்ரப் பிவினரை உயர்ந்தவர்களெனவும், குர்ஆன் முன்வைக்கும் இறைஅச்சம் என்பதுகூட பிறப்பின் கோட்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையதாக குறிப்பிடுகிறார்.
இந்நூல் அஷ்ரப் மேன்மையை அஜ்லபுகளை அடக்குவதற்கான கருவியாகவும், டெல்லி சுல்தான் ஆட்சியை பாதுகாக்கும் விதத்தில் அம்மக்களை அடக்கி ஆளவும் பயன்பட்டது. குர்ஆனிலிருந்து இதனை நியாயப்படுத்த விவாதங்கள் உருவாக்கினர். அந்த வகையில் முன்மாதியான ஒரு முஸ்லிம் ஆட்சியாளன் அஷ்ரபாக மட்டுமே இருக்கமுடியும் என்றார். உலமாக்கள் சூபிகளையும் இதில் ஈர்த்தார்.
சுல்தான் ஆட்சியாளர்களிடம் அஜ்லப்கள் கீழ்நிலை பிறப்பு மற்றும் கல்வி குறித்து அறிவுரை வழங்கினார். நபி முகமது ஏழை / பணக்காரன், ஆண் / பெண், அனைவருக்கும் கல்வியை பெறவேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு மாறாக, கல்வி, அறிவு அஜ்லபுகளுக்கு வழங்குவது கூடாது என்றார். அஜ்லபுகளுக்கு கல்வி வழங்குவது என்பது விலைஉயர்ந்த ரத்தினக் கற்களை நாய்களின் முன்னே பரப்பி வைப்பது போலவும் தங்க ஆபரணங்களை பன்றிகள், கரடிகளின் கழுத்தில் அணிவது போலவும் என்றார். எனவே தொழுகை, நோன்பு, ஹஜ்ஜ÷க்கு அப்பால் எந்த அறிவையும் அவர்களுக்கு வழங்கக்கூடாது என எழுதினார்.
கீழ்நிலைப் பிறப்பாளர்களான அஜ்லபுகளுக்கு கல்வி அளித்ததால் எழுதவோ, படிக்கவோ கற்பித்துக் கொடுத்தாக கண்டுபிடிக்கப்பட்டார். அந்த ஆசியர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஏனெனில் அக்கல்வி மூலம் அஜ்லபுகள் கவர்னர்களாகவோ வருவாய் சேகப்பாளராகவோ கணக்காய்வாளர்களோகவோ அலுவலர்களோகவோ ஆட்சியாளர்களோக வரக்கூடும். எனவே அஷ்ரபுகளுக்கு சேவை செய்வதற்கு மட்டுமே அஜ்லபுகள் / நஸில் சாதியினர் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மனிதனுக்குமான நற்குணங்கள், தீயகுணங்கள் ஆதியிலே ஆன்மாக்களில் எழுதப்பட்டுவிடுகின்றன. இது கடவுளின் புனித வழிகாட்டுதலைச் சார்ந்தது. கீழ்நிலைப் பிறப்பு, மிகமோசமான குரூரமான, நேர்மையற்ற, தவறான அநீதியான உமைகளை மதிக்காத, ரத்தம் சிந்தக்கூடிய, வெட்கப்படக்கூடிய, கடவுளற்ற குணங்களையும், தொழில்களையும் வத்துக் கொள்கின்றன. இவற்றை பாரம்பர்யங்களிலிருந்து வெளிப்படும் உணர்வு நிலைகளாகவும் கருதலாம். எனவே மதிப்புமிக்க தொழில்களான ஆட்சிசெய்தல், கல்வி கற்று கொடுத்தல், சமய உண்மைகளை பிரச்சாரம் செய்தல் ஆகியவை அஷ்ரபுகளுக்கு மட்டுமே உத்தானதாகும்.
சுல்தான் தனது அரசவையிலோ, அரசாங்கத்திலோ அஜ்லபு பிரிவைச் சார்ந்தவர்களுக்கு அரசாங்கப் பணிகள் ஏதும் வழங்கினால் மன்னனும், கடவுளும் அவமயாதைக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். அரசு தனது லட்சியங்களை எட்ட முடியாது, மறுமை நாளில் இதற்காக மன்னனுக்கு தண்டனை உண்டு எனவும் பரணி எழுதுகிறார். இறைவன் பிறப்பை பார்ப்பதில்லை இசை அச்சத்தை தான் பார்க்கிறான் என்பதற்கு பரணியின் புதுவிளக்கம் இறைஅச்சம் கீழ்நிலை பிறப்பாளர்களுக்கு கிடையாது என்பதே உண்மை என்கிறார் என்பதை யோகிந்தர் சிக்கந் விளக்குகிறார்.
மசூத் ஆலம் பலா இதுகுறித்து மேலும் விளக்கும்போது மொகலாயப் பேரரசர் அக்பர், ஒளரங்கசீப் ஆட்சிகாலத்தில் ரஸில் சாதியினருக்கு கல்வி அளிக்கப்பட்டால் பேரரசின் அடித்தளமே ஆட்டம் கண்டுவிடும் என்பதான வறை இருந்தது. பிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து ஐநூறு பேர் கொண்ட படையை கட்டியமைக்க பகதூர்ஷா ஆணையிட்டபோது அந்த படையில் அஷ்ரப் சாதியினர் மட்டுமே இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது. காஜி சஜ்ஜத் ஹ÷சைன் தனது சிராஜில் ஹதாப்பா நூலில், பிரபல சூபி அறிஞர் சையத் ஜலாலுதீன் புகா, மது அருந்துபவர், கந்து வட்டிக்காரர் மட்டுமின்றி நாவிதர், பிணம் கழுபுவர், சாயத் தொழிலில் ஈடுபடுபவர், தோல் பதனிடுபவர், செருப்பு தைப்பவர், வில் செய்பவர், சலவைத் தொழிலாளர்களுடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று எழுதியிருப்பதையும் மேற்கோள் காட்டுகிறார்.
திருக்குர்ஆனும், நபிமுகமதுவின் மரபுகளான ஹதீதுகளும், முஸ்லிம்களின் திருமணம் குறித்த கருத்தாக்கத்தில் சமூக முரண்களான பிறப்பு, பொருளாதார அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பாவிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதற்கு இரு முதன்மைகள் முன்வைக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று தக்வா என்னும் இறைஅச்சம். மற்றுமொன்று ஈமான் என்னும் இறைநம்பிக்கை.
அரபகத்தின் பூர்வீக இஸ்லாம் வழங்குடி மக்களின் சமத்துவ கோட்பாட்டை முன்னிறுத்தியே இயங்கியது. அரபு எல்லையைத் தாண்டி இஸ்லாம் புதிய வெளி நலிப்பரப்புகளில் பரவத் துவங்கியபோது அச்சமூகங்களின் மேலாண்மையை இஸ்லாம் உள்வாங்கிக் கொண்டது ஒரு துயரமான வரலாறாகும். உமய்யாத்துக்களின் நிலபிரபுத்துவ மன்னராட்சி, அரபு அல்லாத குலங்கள் பழங்குடி அரபுகளை ஆட்சி செய்தது, கிரேக்க, பாரசீக பண்பாடுகளில் நிலவியிருந்த சமூக மேலாண்மைகளின் சேர்மானம் சார்ந்து மேல்þகீழ் சமூக படிநிலைகள் இஸ்லாமிய சமூகங்களிலும் உருவானது. இக்கூறுகள் பின்னர் உருவான இஸ்லாமிய சட்டவியல் பள்ளிகளான மத்ஹபுகளிலும், அதன் கோட்பாடுகளை உருவாக்கிய பிக்ஹ÷ நூல்களிலும் முன்வைக்கப்பட்டன.
காபா என்னும் கோட்பாடு பிக்ஹ÷ நூல்களில் இஸ்லாமிய திருமணங்களில் பின்பற்றவேண்டிய விதிமுறைகளைக் கூறுகிறது. பிறப்பு, பொருளாதாரம், இனம் சார்ந்த அம்சங்களை திருமணத் தேர்வின்போது தகுதிகளாக கவனிக்க இது வற்புறுத்துகிறது. பாரம்பர்யமான தொழில் சார்ந்த கட்டமைப்பு பிறப்பு அடிப்படையில் முக்கியத்துவம் தரப்பட்டு இந்திய முஸ்லிம் உலமாக்களால் பேசப்பட்டது. முஸ்லிம் சமூகத்தில் சாதி, சாதியத் திருமணங்கள், சாதிகளுக்கிடையேயான உறவுகள் என்பதான விவாதங்களைச் செய்தது.
அப்துல் ஹமீது நுமானி தனது நூலொன்றில் (Masla – I kufw Aur Isha’at - Islam) ஹனபி மற்றும் ஹன்பலி மார்க்கச் சட்டப் பள்ளியைச் சார்ந்து கபா என்னும் திருமண தகுதிக்கு ஒரு மனிதனின் சட்ட இயல்பு நிலை, (அடிமையா, சுதந்திரமானவனா என்பது அஸôதி - Azadi) பொருளாதார நிலை (மால்த - maldari) தொழில் (பெஷா - Pesha) கல்வித்திறன் (அகல் - Aql) குடும்ப பூர்வீகம் (நஸ்ப் - Nasb) உடம்பில் குறைகளற்ற தன்மை இறுதியில் இறை அச்சம் (தக்வா - taqwa) என்பவை விதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
செல்வ பொருளாதார நிலையை கபாவின் தகுதிகளில் ஒன்றாக எடுக்கக்கூடாது என இமாம் ஷாபி குறிப்பிடுகிறார். இமாம் மாலிக் கபாவின் அடிப்படையாக இறை அச்சத்தை முன்னிறுத்துகிறார் என்பதை மட்டும் சுட்டிக்காட்டுகிறார் என்னும் இந்த வகையிலான திருமண தகுதிக் கோட்பாடு சாதீயத்தை முஸ்லிம் சமூகத்திற்குள் தக்க வைத்துக் கொள்ளவே பயன்பட்டன. இதனை தீவிரமாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் கருத்தினை வெளிப்படுத்தினர்.
தேவ்பந்த் அறிஞரான மெüலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்பி நெசவாள முஸ்லிம்களை கீழானவர்களாக கருதும் கருதுகோள்களை முன்வைத்து பேசுகிறார். நபி முகமதுவுக்கு மதினாவில் உதவி செய்த அன்சாகள் என்ற பெயல் ஜ÷லாஹா நெசவாளர் முஸ்லிம்கள் தாங்களுக்குள் அழைத்துக் கொள்வது தவறானதும், விலக்கப்பட்டதுமாகும். நெசவாளர் (ஜ÷லாஹாஸ்) நாவிதர்களை (நயிஸ்) உண்மையான முஸ்லிம்கள் தமது வீடுகளில் நுழைய அனுமதிக்கக்கூடாது. சையதுகள், ஷேக்குகள், மொகல்கள், பதான்கள் உயர்ந்த அந்தஸ்துமிக்க மேல்குடி அஷ்ரப் சாதியினர், நெசவாளர் (ஜ÷லாஹா) எண்ணெய் பிழிபவர் (டெல்) உள்ளிட்டோர் ரஸில் அக்வம் எனும் கீழ்நிலை சாதியினர் என்றும் இம்தாத் உல் பத்வா உள்ளிட்ட சில நூல்களில் குறிப்பிடுகின்றார்.
தப்லீக் ஜமாஅத்தின் தலைமை அறிஞரும் தேவ்பந்த் மரபின் மெüலவி முகம்மது சகாயா சித்திகி புனித கபா தசனத்திற்கு மக்களுக்கு ஹஜ் யாத்தியரை செய்யும் முஸ்லிம்களின் குழுவிற்கு வழிகாட்டும் தலைவரான அமிராக நியமிக்கும்போது அக்குழுவில் இருக்கும் குறைஷி மரபை சார்ந்த சையத் அல்லது ஷேக் சாதியை சேர்ந்தவருக்கே முன்னுமை என்பதாக எழுதுகிறார்.
தேவ்பந்த் முஸ்லிம் அறிஞர்களில் ஒருவரான ஷிப்லி நுமேனி இஸ்லாத்தின் சமத்துவ நோக்கினை குறிப்பிடும்போது இஸ்லாத்தின் அடிப்படை இறை நம்பிக்கை மட்டும்தான். எனவே தான் செருப்பு தைக்கும் தோல் தொழில் செய்யும் முஸ்லிம்கள், பள்ளிவாசலில் தொழுகைக்கு முன்வசையில் நிற்க முடியும். நாட்டை ஆளும் எந்த சுல்தானும் அவரை தள்ளி நிற்க சொல்ல முடியாது. இருவரும் சமம் தான் என்று வாதிடும்போது சமூகவியல் அறிஞர் கபோயேவ் இதற்கான பதிலைக் கூறுகிறார். நுமேனியின் லட்சியக் கனவு அடுத்த கணமே நடைமுறை யதார்த்த வாழ்வில் தோற்றுவிடுவதேன் என கேள்வி எழுப்புகிறார்.
ராஜ்புத்ரர், விவசாய சமூகப் பிriவினைச் சேர்ந்த உலக அளவில் பேரறிவு படைத்த அவர் அலிகார் மற்றும் லக்னோவின் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் தன்னை வெளிப்படுத்தி ஏன் பிரபலமாக முடியவில்லை. ஏனெனில் அவை சையதுகளால் அஷ்ரபு சமூகத்திற்காக உருவாக்கப்பட்டதே இதற்கு காரணமாகும் என்கிறார். இந்திய முஸ்லிம் அறிஞர்களில் முக்கியமானவராக கருதப்படும் சர்.சையத் அகமதுகான் அஷ்ரபு. சமூகத்தின் மேலாண்மைக்காகவே பங்களிப்பு செய்தார். அலிகார் கல்லூ நெசவாளர்களுக்கானது அல்ல என்பதை அவர் அடிக்கடி சொல்லியனுப்பியும் இன்று விவாதங்களில் மேலெழுந்து வருவதைக் காணலாம்.
அஷ்ரபு முஸ்லிம்கள் கீழானவர்காக கருதம் நெசவை பூர்வீக தொழிலாக கொண்ட அன்சா சமூகத்தைச் சேர்ந்த மெüலானா அப்துல் ஹமீது நுமானி தனது ஆய்வில் தீவிரமான சமூக சமத்துவம், மனித குலநேயம் சார்ந்த திருக்குர்ஆனிய கருத்தாக்கம், அடித்தள சாதி மக்களிடத்தில் சூபிகளின் பிரச்சாரம் என பல நிலைகளும், இரான், துருக்கி, மத்திய ஆசியாவிலிருந்து வந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் இங்கு வந்தபோது அச்சமூகங்களில் நிலவியிருந்த சமத்துவமின்மை கோட்பாடும் இந்திய மண்ணின் வேறுபாடுகளோடு இணைந்து செயல்பட ஆரம்பித்ததென விளக்குகிறார். பின்னை குர்ஆனிய வளர்ச்சியில் இடம் பெற்றிருக்கும் காபா கோட்பாட்டின் சாதி அடிப்படையிலான சமத்துவமின்மைக்கு மாற்றான மறுவாசிப்பை குர்ஆனின் இறை அச்சக் கோட்பாட்டின் அடிப்படையில் நுமானி நிகழ்த்துகிறார்.
இஸ்லாமிய வரலாறுகளில் நிகழ்ந்துள்ள ஓரு சம்பவங்கள் கபா கோட்பாட்டை ஆதப்பதுபோல் இருப்பினும் அதனையே இறுதித் தீர்வாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது என வாதிடுவதை லிôபர்க்கலாம். அரபுலகின் மூன்றாவது கலிபா உமர், ஒரு வசதி படைத்த குடும்பத்தின் பெண்ணை, அடிதள வறிய வகுப்பைச் சார்ந்த ஆண் திருமணம் புriவதற்கு மறுப்பினை தெவித்த ஹமுதீதினை விளக்கப்படுத்தும்போது திருமணத்திற்கு சம தகுதியிருப்பது குற்றமாக கருதமுடியாது. ஆனால் அது மட்டுமே தகுதி என்பதுதான் விமர்சனத்திற்குரியது என்கிறார்.
இந்திய சமூகத்தின் சாதியமைப்பு தொழில்சார்ந்து கட்டமைக்கப்பட்டிருப்பதுபோன்று முஸ்லிம் சமூகத்திலும் தொழில் அடிப்படையிலான பாகுபாட்டை திருமணக் கோட்பாட்டிலும் வலியுறுத்தும் நிலையை இந்திய அளவில் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் ஹனபி மத்ஹபு கோட்பாடாக பின்பற்றப்படுகிறது. இமாம் அபுஹனிபாவின் மாணவரான இமாம் அபுயூசுப் இதனை வலியுறுத்துகிறார்: பரேல்வி மார்க்கப் பிரிவின் தோற்றுவாய் அறிஞர் அகமது ரஸôகான் துணி தைக்கும் நெசவாளர், செருப்பு தைப்பவர் மற்றும் நாவிதர்கள் கல்வி கற்றிருந்தாலும்கூட கபா தகுதி கோட்பாட்டிற்கே இடம் பெற தகுதியற்றவர்களாக கருதுகிறார்.
முப்தி கிபாயத்துல்லா இந்திய தேவபந்த் அறிஞர் தொழில் அடிப்படையை திருமணத் தகுதிக்கு முன்வைக்கக்கூடாது என்றாலும் இதர தேவபந்த் அறிஞர்களான அஷ்ரப் அலி தன்பி மற்றும் முப்தி முகமது ஷாபி ஹனபி கருத்தாக்கத்தை ஏற்கின்றனர். தான்வி நெசவாளர்களையும் எண்ணெய் பிழியும் செக்காலர்களையும் கீழ்சாதிக் குழுக்களனவே விவக்கிறார். நுமேனியா கருத்துப்படி சாதியக் கூறுகள் கபா கோட்பாட்டின் ஊடுருவதற்கு காரணமான ஒன்றாக திட்டமிட்டோ அல்லது திட்டமிடாமலோ இந்திய பிராமணிய சாதீயத் தன்மைகள் பிரபலப்படுத்தப்பட்ட பொது மரபுகளாகி இஸ்லாத்திற்குள் வினை புரிந்திருக்கின்றன என்பதை குறிப்பிடலாம்.
இரண்டாவதாக நபி முகமதுவின் ஹதீதுகளில் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு குடும்பம், குலம், இனம் அடிப்படையில் குறைஷிகளிலிருந்து வேறுபட்டவர்களாக நெசவாளர்கள், நாவிர்களை குறிக்கும் நிகழ்வை சொல்லி இந்த ஏற்றத் தாழ்வை நியாயப்படுத்துவதாகும். நுமேனி அந்த ஹதீசுகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பலவீனமான ஹதீஸ்கள் என விமர்சித்துவிட்டு பல நபிமார்கள் அடித்தள மக்கள் சார்ந்த தொழில்களை செய்திருக்கிறார்கள். தாவூது நபி கைவினைத் தொழில் நபி முகமதுவின் பல தோழர்கள் நெசவாளர்களாகவும், தச்சர்களாகவும் இருந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.
இனமரபுகளுக்குள் மட்டுமே திருமண உறவு நிகழ்த்திக் கொள்ளுமாறு பிக்ஹ÷ச் சட்ட வல்லுனர்களின் கருத்து இருக்கும்போது நபிமுகமதுவின் காலகட்டத்திலேயே பலவேறு இனங்களுக்கிடையேயான திருமண உணவுகள் நிகழ்ந்துள்ளதை கவனப்படுத்துகிறார். நபிமுகமதுவின் நெருங்கிய தோழரான கறுப்பு அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட அபிசீனிய கறுப்பு இன பிலாலுக்கு மதிநாவில் அன்சா ஒருவர் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கிறார். முதல் கலீபாவான அபூபக்கர் தனது மகளை பாரசீன இனத்தைச் சேர்ந்த நபிமுகமதுவின் தோழரான சல்மான் பார்சிக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். இச்சம்பவங்கள் இனக் குழு மரபு எல்லைக்கு அப்பாலும் முஸ்லிம் திருமணங்கள் நிகழ்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. எனவே குடும்பம், பிறப்பு சார்ந்த அணுகுமுறையை கபா திருமண கோட்பாடாக எடுத்துக் கொள்வது தவறு என இமாம் மாலிக் மற்றும் சில இந்திய ஹனபி உலமாக்களின் கருத்தோடு சார்ந்து நின்று நுமேனி பேசுகிறார்.
இந்திய சூழலில் ஹனபி உலமாக்கள் முன்வைத்த கபா திருமண தகுதி கோபர்ட்டின் மற்றுமொரு அம்சம் பாரம்பர்ய முஸ்லிம் - புது முஸ்லிம் என்ற வேறுபாடாகும். இஸ்லாத்தை தழுவிய ஒருவன், பூர்வீகத்தில் முஸ்லிம் தந்தைக்கு பிறந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது எனவும் இஸ்லாத்திய தழுவிய ஒருவனுக்கு பிறந்த மகன், முஸ்லிம் குடும்ப பெண்ணை திருமணம் செய்யக்கூடாது. ஆனால் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவனின் பேரன் முஸ்லிம் குடும்ப பெண்ணை திருமணம் செய்யலாம் என இக்கருத்து நிலை முன்வைக்கப்படுகிறது.
பாரம்பய முஸ்லிம் - புது முஸ்லிம் கருத்தாக்கத்தின் விளைவாகத்தான் வடஇந்தியப் பகுதியில் இந்து தைகி சாதியினர் முஸ்லிமாக மதம் மாறும் திட்டத்தை கைவிட்டனர். முஸ்லிம் தயிகி சாதியினர் புது முஸ்லிம்களை ஏற்க மறுத்ததே இதற்கு காரணமாகும். டாக்டர் அம்பேத்கார் இஸ்லாத்தில் மதம் மாறுவதற்கு புத்தத்தை தேர்வு செய்ததற்கும் காரணம் முஸ்லிம் சமூகத்தில் நிலவிய இத்தகைய சாதீயக் கோட்பாடே ஆகும். இதற்கு குர்ஆனிய இசை அச்சக்கோட்பாட்டியை வைத்தாலும் வணக்கவழிபாடுகளின் செயல்வடிவத்தில் மட்டுமே துணை தீர்மானிக்க முடியாது. இது ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தின் அடியாழத்தின் உறைந்திருக்கும் நம்பிக்கைகளை உண்மைத்தன்மைகளை, நற்குணங்கள் சார்ந்தே விளங்குகிறது. மறைக்கப்பட்டுக கிடக்கும் இவை திருமண உறவின் முதன்மை தகுதியாக எவ்வாறு ஆகமுடியும். என்பதான விவாதங்களும் இதனூடே எழத்தான் செய்கின்றன.
இஸ்லாத்தின் மூலப்பிரதிகளான திருக்குர்ஆன், ஹதீஸ்களிலும், மத்திய கால மார்க்கச் சட்டப் பள்ளிகளின் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய பிக்ஹ÷ச் சட்ட நூற்களிலும், மக்காவின் பழங்குடி மக்களிலிருந்து துவங்கி இன்றைய நடைமுறை முஸ்லிம்களின் வாழ்வு சமூக படிநிலை அமைப்பு வரையிலும் தீவிரமாக மறுவாசிப்பு செய்வதே முஸ்லிம் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் ஒடுக்கப்பட்டு கிடக்கும் பன்முகப்பட்ட குல, இன அடித்தள சாதி முஸ்லிம்களின் விடுதலையை துதப்படுத்தும்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...