Monday, March 02, 2009

தெரசா என்று கத்திய மனிதன்


தெரசா என்று கத்திய மனிதன்
இடாலோ கால்வினோ

நான் நடைபாதையை விட்டிறங்கி, பின் பக்கமாக நடந்து சில தப்படிகள் முன்னோக்கி, தெருவின் மையத்தில் இருந்து, என் கைகளை ஒரு மெகாஃபோன் மாதிரி குவித்து, அங்கிருந்த கட்டிடத்தின் மேல் மாடிகளை நோக்கி உரக்கக் கத்தினேன் : 'தெரசா!'

நிலவைப் பார்த்து பயமுற்ற என் நிழல் என் இரண்டு கால்களுக்கிடையில் பயந்து ஒடுங்கிக் கொண்டது.

யாரோ ஒருவர் இந்தப் பக்கமாக நடந்து வந்தார். மீண்டும் நான் உரக்கக் கத்தினேன்: 'தெரசா!' அந்த மனிதன் என்னருகில் வந்து இவ்வாறு கூறினான்: நீங்கள் இன்னும் உரக்கக் கத்தவில்லை என்றால் அவளுக்கு உங்கள் குரல் கேட்காது. நாம் இருவரும் சேர்ந்து முயல்வோம். ஆக மூன்று வரை எண்ணி விட்டு நாம் இருவரும் சேர்ந்து கத்துவோம். 'ஒன்று இரண்டு மூன்று'. நாங்கள் இருவரும் கூவினோம்: 'தெ--ரெ--சா'

சினிமாக் கொட்டகைகளிலிருந்தோ காப்பி விடுதியிலிருந்தோ திரும்பிக் கொண்டிருந்த நண்பர்களின் சிறு குழு ஒன்று நாங்கள் கத்துவதை கவனித்தது. அவர்கள் சொன்னார்கள் : 'சரி நாங்கள் கூட உங்களுக்காக ஒரு முறை சப்தம் கொடுப்போம்'. அவர்கள் தெருவின் நடுவில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். முதல் மனிதன் ஒன்று இரண்டு மூன்று என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து கத்தினோம் : 'தெ--ரெ--சா'.

வேறு யாரோ அந்தப் பக்கம் வந்தவர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். கால்மணி நேரத்திற்கு பிறகு நாங்கள் ஒரு கூட்டமாக ஏறத்தாழ இருபது பேர்கள் இருந்தோம். அவ்வப்போது யாராவது புதிதாக அந்தப் பக்கமாக வந்தார்கள்.

ஒரே சமயத்தில் ஒரு நல்ல சத்தம் கொடுப்பதற்கு ஒருங்கிணைத்துக் கொள்வது எளிமையாக இருக்கவில்லை. எப்பொழுதுமே யாராவது ஒருவர் மூன்று எண்ணுவதற்கு முன்பே தொடங்கி அல்லது அதற்கு பிறகு நீண்த நேரம் கத்தி விடுகிறார். ஆனால் இறுதியில் ஓரளவு திறமையான ஒன்றை நாங்கள் செய்து கொண்டிருந்தோம்.'தெ' என்பது நீச்சமாகவும், நீளமாகவும், 'சா' என்பது அமுங்கியும் குறுகியும், இருக்கவேண்டும் என்ற ஒப்புதலுக்கு வந்தோம். அது சிறப்பாகத் தோன்றியது. அப்போதைக்கப்போது யாரோ ஒருவர் வெளியேறும்போது கூச்சலும் குழப்பமுமான சச்சரவு உண்டாயிற்று.

எங்களுக்கு அது சரியாக வந்து கொண்டிருக்கும்போது, அந்தக் குரலை வைத்துச் சொல்வதாயிருந்தால், புள்ளிகள் கொண்ட முகத்தை உடையவர் என்று குஉறமுதியும் ஒருவர் கேட்டார்: 'ஆனால் உறுதியாக அவள் வீத்தில் இருக்கிறாளா என்பது தெரியுமா?'

'இல்லை'- நான் சொன்னேன்.


'இது சுத்த மோசம்', மற்றொருவர் சொன்னார். உங்கள் சாவியை மறந்து விட்டீர்களா? அப்படியா?
என் சாவி என்னிடம் உள்ளது'- நான் கூறினேன்.
'அப்படியானால் ஏன் நீங்கள் மேலே போகக் கூடாது?'
'நான் இங்கே வசிப்பவன் அல்ல. நான் நகரின் அந்தப் பக்கத்தில் வசிக்கிறேன்'
'சரி, அப்படியானால் பிறர் காரியங்களில் ஆர்வமுள்ள என் துடிப்பை மன்னியுங்கள்' புள்ளிகள் கொண்ட குரல்காரன் கவனமாகக் கேட்டான் 'யார்தான் இங்கு வசிக்கிறார்கள்?'
'எனக்கு நிஜமாகத் தெரியாது'

இவ்வாறு கூறியவுடன் அங்கிருந்தவர்கள் தொந்தரவான உணர்வடைந்தார்கள்

'எனவே தயவு செய்து நீங்கள் விளக்கம் தருவதற்கு முடியுமா? மிகவும் பல் சார்ந்த குரல் கொண்ட யாரோ ஒருவர் கேட்டார், 'ஏன் இங்கு நின்று கொண்டு தெரசாவைக் கத்தி அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?'

நான் சொன்னேன், : என்னைப் பொறுத்தவரையில், நாம் வேறு ஒரு பெயரைக் கூட கூப்பிடலாம் அல்லது வேறு எங்காவது முயற்சி செய்து பார்க்கலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

மற்றவர்கள் சிறிது தொந்தரவாக உணர்ந்தார்கள்

'நீங்கள் எங்களை ஏமாற்றவில்லை என்று நான் நம்புகிறேன்' புள்ளிகள் நிறைந்த முகத்துக்காரன் சந்தேகமாகக் கேட்டான்.

என்னது? நான் கேட்டேன் கோபமாக. மற்றவர்களிதம் திரும்பினேன் எனது நம்பிக்கையை உறுதி படுத்தும் பொருட்டு. மற்றவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. புள்ளிகள் உதைய முகத்துக்காரனின் தூண்டி விடும் முயற்சி தோல்வியடைந்தது.

ஒரு தர்ம சங்கடமான கணம் நிலவியது,.

'கவனியுங்கள்' யாரோ ஒருவர் நல்ல தன்மையுடன் கூறினார், ' ஏன் நாம் அனைவரும் ஒரு முறை தெரசாவை கூப்பிட்டு விட்டு வீட்டுக்கு செல்லக்கூடாது?

எனவே நாங்கள் மீண்டும் தொடங்கினோம், ஒன்று இரண்டு மூன்று 'தெரசா' ஆனால் இந்த முறை அது சரியாக வரவில்லை. பிறகு அங்கிருந்தவர்கள் வீட்டை நோக்கிச் சென்றார்கள். சிலர் ஒரே வழியிலும், பலர் வேறு வழியிலும்.

சதுக்கத்திற்குள் ஏற்கனவே நான் திரும்பி விட்டேன். அப்போது ஒரு குரல் தொடர்ந்து 'தெ--ரீ-சா!' என்று கூப்பிடுவதாக தோன்றியது.

யாரோ ஒருவர் கத்துவதற்காக நின்றிருக்க வேண்டும். மிகப்பிடிவாதமான ஒருவர்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...