Tuesday, April 21, 2009

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 7
பழங்குடி

இன்று உலகம் எவ்வாறு தேசிய அரசு (யேவழைn – ளுவயநள) களுக்குச் சொந்தமானதாக உள்ளதோ, அதே போல பல ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் இதற்குச் சமமான இவ்வுலகு பழங்குடிக்;குச் சொந்தமானதாக இருந்தது. (ளுயாடiளெ ஆயசளாயடடஇ 1968:195) நாகரிகம் தொடர்ந்து மாறிவரும் வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். பழங்குடி (வுசiடிந), நாகரிக உலகுக்கு வழிவகுத்த சமூக அமைப்பாகும். முன்னரிலும் பார்க்க உயர் கலாசாரத்தைக் கொண்ட சமூக அமைப்பு பழங்குடியிலிருந்தே உருவாகி வளர்ந்தது.


மனிதன் வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்த காலத்தைவிட புதிய கற்காலம் மாறுபட்டிருந்தது. புதிய கற்காலம் (நேழடiவாiஉ Pநசழைன) வழங்கிய விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற புதிய பொருளாதார முறைகளின் மூலம் உலக நிலப்பரப்பின் பெரும்பகுதியை பழங்குடிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பழங்குடி அமைப்பும் அவர்களின் பண்பாடும் புதிய கற்கால உற்பத்தித் தொழில் நுட்பங்களுடன் தொடர்புபட்டிருந்தது. சுற்றாடலை ஆக்க ப+ர்;வமாக மாற்றுவதற்கான தொழில் நுட்ப முறைகளையும் இப்பழங்குடியினர் நன்கறிந்திருந்தனர். (1968 : 197)

தாவரங்களையும் மிருகங்களையும் வீட்டுச் சூழலுக்குரியதாக மனிதன் மாற்றியதிலிருந்தே புதிய கற்காலத்தின் புரட்சி ஆரம்பமாகின்றது. இதன் மூலம் புதிய கற்காலத்து மக்கள் வேட்டையாடி வாழ்ந்த சமூகத்தைவிட உயர்ந்த சமூக ஒழுங்கமைப்பையும் பண்பாட்டையும் பெற்றவர்களாக நாகரிக வளர்ச்சி நிலையில் காணப்பட்டனர்.

பயிர்ச் செய்கையும் வீட்டுத் தேவைக்கான மிருகங்கள் பழக்கப்பட்டமையும் உயர்தரப் பொருளாதார உற்பத்தியையும் அதற்கும் மேலாக உறுதியானதும் நிலையானதுமான உற்பத்தியையும் ஊக்குவித்தன. எங்கெல்ஸின் வார்த்தைகளில் கூறுவதாயின் :

மிருகங்களைப் பழக்குவதும் மந்தைப் பெருக்குவதும்
இது வரை கேட்டறியாத மூலதாரங்களிலிருந்து பெற்ற
செல்வமாக முற்றிலும் புதிய சமூக உறவுகளைத்
தோற்றுவித்தன……. இப்பொழுது கதிரைகள், ஓட்டகைகள்,
கழுதைகள், எருதுகள், ஆடுகள், பன்றிகள் முதலிய மந்தைக்
கூட்டங்களும் மேய்ச்சல் தொழில் புரிந்த மக்கள் சமூகங்களும்
உருவாகின. இவற்றினூடாக மக்கள் செல்வப்
பெருக்கத்தையும் பெற்றனர். இந்தியாவில் கங்கை, சிந்து
சமவெளியிலும் ய+ப்ரடீஸ், தைகிரிஸ் நதிக்கரை அருகே
வாழ்ந்த செமிட்டியர்களிடையேயும் இதுவே நடைபெற்றது.
(நுபெநடளஇ197 : 54)

சமுதாயப் படிமுறை வளர்ச்சியில் மூன்று சமுதாய நிலைகளை மானிடவியலாளர் எடுத்துரைப்பர். அவை (1) சமத்துவ சமுதாயங்கள் (நுபயடவைநசயைn ளுழஉநைவநைள) (2) தரநிலைச் சமுதாயங்கள் (சுயமெ ளுழஉவைநைள ) (3) வர்க்க, சாதி சமுதாயங்கள் (ஊடயளளஇ ஊயளவந ளுழஉநைவரநள) என வகையீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நாம் அவதானித்த ஆதி சமுதாய அமைப்புக்கள் சமத்துவ சமுதாயப்படி நிலைக்குரியனவாகும். (சீ. பக்தவத்சல பாரதி, 1990 : 291)

சமத்துவ சமுதாய அமைப்பில் முதலில் குரக்குழு (டீயனெ) வும் அடுத்த நிலையில் பழங்குடியும் இடம் பெறுகின்றன. வேளாண்மை தோன்றிய காலம் வரை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் - ஏறக்குறைய அனைத்து சமுதாயங்களும் குலக். குழுக்களாகவே வாழந்தனரென மானி;டவியல் கூறுகிறது.

சமத்துவ சமுதாயங்களில் வளங்கள் சமமாகப் பகிரப்பட்டன. சமுதாயத் தகுதியிலும் வேறுபாடிருக்கவில்லை. குலக்குழுவை அடுத்துத் தோன்றிய பழங்குடியில் அதிக அங்கத்தவர்கள் அல்லது குடும்பங்கள் காணப்பட்டன. பழங்குடிச் சமுதாயம் குடும்பங்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் முக்கியத்துவமளித்தது. “ஒவ்வொரு குழுவும் நிலப்பகுதியை வரையறுத்துக் கொண்டனர். (1990 : 294) வர்க்க வேறுபாட்டிற்கு இடமளிக்கும் தனி உடைமைப் பொருளாதாரம் வளரும் வரை பழங்குடியிலும் பெரும்பாலும் சமத்துவ நிலையே காணப்பட்டது.

குலக்குழுவை விடப் பழங்குடி இரத்த உறவுத் தொகுதிகளை அதிக அளவில் பெற்றிருந்தது. இன்னொரு வகையில் பல இனக்குழுக்களின் தொகுதியாகவும் பழங்குடி அமைந்திருந்தது எனக் கூறலாம். பழங்குடி குழுக்குழுவை விட அளவிற் பெரிதாக இருந்தமையால் அது ஐக்கியமின்மைக்கு இட்டு செல்வது இலகுவாயிற்று. எனவே பழங்குடிகளிடையே இயங்கும் சமதரத்தையுடைய கூறுகளிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்குரிய புதிய ஒழுங்கு முறைகளும் உருவாகின.

அறேபியாவில் பழங்குடி

இஸ்லாத்தின் தோற்றத்தின் போது அறேபியா பழங்குடி சமூக அமைப்பில் இருந்தது. பேராசிரியர் மொண்ட் கொமறி வொட் கூறுவது போல பழங்குடி என்பதைவிட நபிகள் காலத்தில் ஒரே சமுகமக ஒரே பொது வாழ்க்கையைப் பெற்றிருந்தனர் என்று ஒரு மக்கள் குழுவினரைக் குறிக்கும் வேறொரு பொருத்தமான எண்ணக்கருவை முன்வைப்பது கடினம்.

தொன்மை அறேபியரை நாடோடிகள், ஓரிடத்தில் தரித்து வாழ்ந்த விவசாயிகள், வணிகர்கள் என்று மூன்று பிரிவினராக வகுக்கமுடியும். எனி;னும் பழங்குடியே இவ்வலகுகள் அனைத்தினதும் பொதுச் சமூக அமைப்பாக இருந்தது.

இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில் நாடோடிகளே (ழேஅயனள) பெரும்பான்மையோராக இருந்தனர். இவர்கள் “பதவி’’ (டீயனயற) எனப்பட்டன. பாலைவன நாடோடிகளைக் குறிக்கும் விஷேட பதம் இதுவாகும். சுதப்பிகளிலும் (ளுவநிpநள) அரைப் பாலைவனங்களினதும் பதவிகள் பரந்து வாழ்ந்து வந்தனர். நபிகள் நாயகம் பிறந்த அறேபிய, மத்திய பாகங்களில் பதவிகள் அதிகளவிலேயே காணப்பட்டனர்.

பதவி, நாடோடி வாழ்க்கையில் இருந்தான். பாலைவனப் பிரதேசங்களின் ப+ர்வீக வாழ்க்கை முறை அதுவென இப்னு கல்தூன் கூறுவர் நாடோடிகள் எனப்படுவோர் அர்த்தமற்று அலைந்து திரியும் கூட்டத்தினர் அல்ல. “ஒரு குறிப்பிட்ட வாழிடத்தைக் கொண்டு நிலையான வாழாமல் பருவ காலத்திற்கேற்ப தொடர்ச்சியாக இடம் விட்டு இடம் சென்று வாழும் மக்களே நாடோடிகளாவர். இவர்கள் இடம் பெயர்ந்து வாழும் முறை ஒரு முறைப்படுத்தப்ட்ட சுழற்சியான இருக்கும். இதனாலேயே இவர்கள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் என்று குறிப்பிடப்படுவதில்லை. (1990 : 470)

விவசாயத்தில் ஈடுபடுவோர், கால்நடை வளர்ப்போர் எனப் பாலைவன நாடோடிகளை இரு பிரிவில் அடங்குவர். கால்நடை வளர்ப்போரையும் இரு பிரிவினராகக் கொள்ளலாம். இதில் முதல் நிலை ஒட்டக வளர்ச்சிக்குரியதாகும். அறேபியாவின் முழுமையான நாடோடித்துவம் ஒட்டக நாடோடிகளையே சார்ந்திருந்தது. இவர்கள் முழு நாடோடிகளாவர். முழு நாடோடிகளே பாலைவனத்தில் உட்பிரதேசத்துள் சென்றனர். ஆடு வளர்ப்பில் ஈடுபட்டிருந்த நாடோடிகள் அரைநாடோடிகளாவர். பாலைவனத்தின் ஓரப்பகுதிகளில் மட்டும் இவர்கள் சஞ்சரித்தனர்.

ஒட்டக நாடோடிகள்

ஒட்டகமோட்டிகள் பாலைவனத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டனர். ஒட்டகத்திற்குத் தேவையான உணவு, நீர், வெப்பம் முதலியவற்றைத் தேடி ஒட்டக நாடோடிகள் பாலைவனத்தின் மத்திய பகுதிகளிலும் ஆழ்ந்த உட்பிரதேசங்களிலும் பிரவேசித்தனர். ஒட்டக நாடோடி தரித்து ஓரிடத்தில் வாழும் மக்கள் கூட்டத்திலிருந்து பிரிந்து தனித்துவமானவனாக நின்றான். பாலைவனமும் ஒட்டகமும் அவனது வாழ்க்கைத் தீர்மானித்தன.

பாலைவன வாழ்க்கைக்கு பதவிகள் ஒட்டகத்தை நம்பியிருந்தனர். மறுபுறத்தில் ஒட்டகங்களில் வாழ்க்கைகாகவும் பதவிகள் பாலைவன வாழ்க்கையை நாடினர். சுதப்பியிலும் வரண்ட பாலைவனத்திலும் வாழக்கூடிய ஒட்டகம் பதவியின் உற்றதுணையாகியது வியப்புக்குரியதன்று.

கி.மு. 2000 ம் ஆண்டளவிலேயே ஒட்டகம் வீட்டு மிருகமாக அறிமுகமாகியது. பாலைவன வாழ்க்கைக்குப் பயனுள்ள மிருகமாக ஒட்டகம் அறிமுகமானதன் பின்னர் பதவி தனது வாழ்க்கையை அதனோடு மாற்றிக் கொண்டான். ஒட்டகத்திற்குப் பாலைவன உட்பகுதியில் உள்ள புதர்களும், உவர் நீரும், பாலை மணலும், வெப்பக் காற்றும் இன்றியமையாத வையாகும். எனவே ஒட்டகப் பராமரிப்பு அவனைப் பாலைவனத்தின் ஆழமான உட்பகுதிகளுக்கு இட்டுச் சென்றது.

பதவிகளைப் பொறுத்தவரை ஒட்டகம் வெறும் பாலைவனக்கப்பல் என்பதற்கும் மேலானதாகும். பதவி தனது பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒட்டகத்தையே நம்பி வாழ்ந்தான். ஒட்டகம் அவனது வர்த்தக்காவரன், மணமகளுக்கான சீதனம், கொலைக் குற்றத்திற்கான இரத்த வெகுமதி, சூதாட்டத்தில் இலாபம், பணம், கூடாராம், பாதணி, மருந்து, வாசனைத்திரவியம். இவ்வாறு ஒட்டகத்திலிருந்து அவன் நேராகவும் மறைமுகமாகவும் பெற்ற பலன்கள் பல. எலொய் ஸ்ப்ப்ரெஞ்சர் (யுடழளை ளுpசநபெநச) “அறேபியரை ஒட்டக ஒட்டுப்பண்ணிகள்’’ என்று குறிப்பிட்டார். பதவிக்கு ஒட்டகம் அழகிய பிராணி. ஒட்டகத்தை உவமித்துப் பெண்களின் அங்கங்களை அவன் வர்ணித்தான். அதன் குளம்பொலிகளின் தான். அதன் குளம்பொலிகளின் தாளத்திற்கிசைவாக இனிய ராகங்களை அவன் உருவாக்கினான்.

பதவிக்கு வாழிடமும் நிரந்தரமற்றது பாலைவனப் பசுமையும் தோன்றி மறைவது. ஒரு பசுந்தரையின் வரட்சி மற்றொரு பசிய நிலத்தை நோக்கி அவனை விரட்டியது. மேய்ச்சல் நிலத்தையும் நீரையும் தேடிச் செல்வது அவனது வாழ்க்கையின் விதி. ஒரேவிதமான சுழற்சி வாழ்க்கையில் அவன் இருந்தான். மாற்றத்தை அவன் விரும்பாமைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். தனிமையும் பட்டினியும் தொடர்ச்சியான பயணங்களும் எதிரிகளின் அச்சமும், இயற்கை உபாதைகளும், அவனைக் கடின குணமுள்ளவனாக்குகின்றன. ஆனால் இந்த அனுகூலமற்ற நிலைமைகள் எதுவுமே அவனது முயற்சிகளுக்குத் தடையாயிருக்கவில்லை. இவற்றை எதிர்கொள்ள அவன் தயராக இருந்தான். ஒட்டகமும் துணிவும் அவனது இப்பிரயத்தனத்திற்கு பெரும் துணையாக விளங்கின.

நாடோடிகள் தமது வாழ்க்கைக்குரிய கட்டாயமான, வெளிப்படை நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. அதனை அவர்கள் கடந்து செல்வது கடினம். அதனால் அவர்கள் பாலைவனத் தேவைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் தம்மை வரையறுத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர் (ஐடிரn முhயடனரஅ. 1958 : 249).

பாலைவனப் பசுந்தரைகளில் விவசாயம் நடைபெற்றது. பேரீச்சைச் செய்கைக்கு இவை பிரச்சித்தி பெற்றிருந்தன. மலைப் பிரதேசங்களில் உணவுத் தானியங்கள் பயிரிடப்பட்டன. இவ்வகைச் செழிப்பான பகுதிகள் மக்களின் வாழிடங்களாயின. நபிகள் காலத்தில் மக்கள் தரித்து வாழ்ந்த யத்ரிப் (மதீனா) சிறப்பான பசுந்தரைப் பொருளாதாரத்தைப் பெற்றிருந்தது. இவ்வாறு ஓரிடத்தில் தரித்து வாழ்ந்தோரின் வாழ்வுக்கும் நாடோடிகளின் வாழ்வுக்குமிடையில் இயற்கை ரீதியாகவே வேறுபாடுகள் காணப்பட்டன. தரித்து வாழ்வோரோடு ஒப்பிடுகையில் நாடோடிகளின் வாழ்க்கை நாகரிகமற்றதாகும். தரித்து வாழ்வோரின் சௌகரியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் இது முற்பட்ட வாழ்க்கையாகும்.

சுற்றாடல் வேறுபாடுகள் தான் மக்கள் தமது வாழ்வை வௌ;வேறு வழிகளில் உருவாக்கி கொள்ளக் காரணமாகிறது. தரித்து வாழ்வோரும் நாடோடிகளும் தேவைகளின் அடிப்படையில் அமைந்த இரு இயற்கைக் குழுக்களாகும் (இப்ன் கல்தூன்).

சமூக அமைப்பு

பதவியின் சமூக பழங்குடியாகும். ஒரு பழங்குடி பல குலங்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பழங்குடியும் ஒரு முகாமையும் குடும்;பங்களுக்கென தனித்தனி கூடாரங்களையும் பெற்றிருந்தன. ஒவ்வொரு குலமும் அல்லது பழங்குடியும் அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன.

பழங்குடியின் இரத்த உறவு வம்சாவழித் தொடர்ச்சி, தாயிலிருந்து அல்லது தந்தையிலிருந்து கணக்கிடப்பட்டது. உலகின் ஆரம்பக் குல அமைப்பு தாய்வழிக் (ஆயவசடைநnயைட) குரியதென்பது பொதுவான கருத்து. தாய்வழி மரபு ப+ர்வீக மனித குலத்தின் ஒழுங்கமைப்பின் ஆரம்ப வடிவமென எல். எச். மோர்கனும் (டுநறளை ஆழசபயn) எங்கெல்லாம் நிறுவ முயன்றனர். இவ்வமைப்பு பொருளாதார மாற்றங்களால் பின்னர் மாற்றமடைந்தன எனக்கருதுவர். தாய்வழி, குலச் சமுதாயத்தின் ஆரம்பக் கட்டமாகும். மரபு வழி பெண்ணிடமிருந்து கணக்கிடப்படுவதை இது குறிக்கிறது. பெண்கள் ஆண்களை அடக்கியாண்டனர் என்ற கருத்தில் இது கொள்ளப்படுவதில்லை. எனினும் பொருளாதார முக்கியத்துவமும் தாய்த் தலைமை மரபும் இதிற் காணப்பட்டது.

அறேபியப் பழங்குடி அமைப்பு, நபிகள் காலத்தில் தந்தைவழி மரபையே பெற்றிருந்தது. எனினும் தாய்வழி மரபை அறபுப் பழங்குடிகள் பெற்றிருந்தமைக்கு அடையாளங்களிருந்தன. (பார்க்க, துரசபi ணயலனயைnஇ 1987: 06) தாயின் கௌரவமிக்க இடம் இன்னும் மறைந்துவிடவில்லை, என்பதை அவர்களின் கலாசார மரபுகள் எடுத்துக் காட்டின. குலங்களைக் குறிக்கும் பெயர்களில் பெண்களின் பெயர்களும் காணப்பட்டன. (1937 : 26) இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் மனைவியை விடத் தாயைக் கௌரவிக்கும் வழக்கம் ஆழமாக வேரூன்றியிருந்தது. மனைவியைவிடத் தாயின் உறவு நிரந்தரமானதென மதிக்கப்பட்டது (1987 : 06)

அறேபியக் குல மரபில் தாய்வழி மாமனுக்கும் முக்கியத்துவமிருந்தது. இதற்குரிய உதாரணங்களில் நபிகளின் வாழ்வில் இடம் பெற்ற தாய் மாமன்களை நோக்கிப் பயணமான சம்பவங்கள் கவனத்திற்குரியதென ஜுர்ஜிஸெய்தான் விளக்குகிறார். (பார்க்க, குறிப்பு : 04).

தாயுரிமை மறைந்து தந்தை உரிமை நிலைபெறும் போது பெண்ணின் சமூக அந்தஸ்து பாதிக்கப்படுகிறது. பெண், அடிமையாகவும் வெறும் குழந்தைகள் பெறுபவளாகவும் ஒடுக்கப்படும் நிலை உருவாகிறது. நபிகளின் கால அறேபியாவின் நிலை இதுவாகவே இருந்தது. தந்தைவழிக் குடும்பத்தின் முக்கிய அடையாளமான பலதார மணம் தாரளமாகவே அறேபியப் பழங்குடி மரபில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. “செமித்திய வடிவத்தில் இந்தக் குடும்பத் தலைவன் பலதார மண முறையில் வாழ்கிறான்’’ என எங்கெல்ஸ் குறிப்பிடுவார்.

உண்மையில் பலதார மணமென்பது பணக்காரர்களுக்கும் பிரபுகளுக்குமுரிய சலுகையாகும். பிரதானமாகப் பெண் அடிமைகளை விலைக்கு வாங்குவதன் மூலம் இச்சலுகையை சேகரிக்கப்பட்டனர். செமித்திய வடிவத்தில் குடும்பத் தலைவனே இச்சலுகைiயை அனுபவித்தான். அதாவது பலதார மணமென்பது எல்லோருக்குமுரியதாக இருக்கவில்லை. இம்மணமுறையில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை நபிகளே முன்வைத்தனர்.

இது எவ்வாறெனினும் நபிகள் காலத்தில் குல உணர்ச்சியும் வம்ச வழித் தொடர்ச்சியும் ஒரு தந்தையிலிருந்தே தொடரும் முறை முதலிடத்தைப் பெற்றுவிட்டது. (1987 : 06)

இரத்த பந்தம் அல் அசபிய்யா

ஒரு பழங்குடிச் சமூகம் அதன் நேரடியான இரத்தக் கலப்பினாலேயே நிர்ணயிக்கப்பட்டது. குல அங்கத்தவர்களிடையே உறுதியான பிணைப்பினை ஏற்படுத்தும் முதற் சாதனமாக இரத்த உறவு விளங்கியது. உறவின் மறுபொருள் குல அங்கத்தவர்களின் பாதுகாப்பாகும். தந்தை வழியாயினும் தாய்வழியாயினும் குல அங்கத்தவர்கள் அனைவரினதும் நரம்புகளிலும் ஒரே இரத்தம் ஓடுவதாகவே அறேபியர் கருதினர்.

இரத்த பந்தம் என்பது பாசப்பிணைப்பு மட்டுமல்ல அது குலத்தின் வலுவுமாகும். கைமாறு கருதாத உதவியையும் பாதுகாப்பையும் அது குல அங்கத்தவர்க்கு வழங்குகிறது. பழங்குடிக் கலாசாரத்தில் ஒரு குழுவினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இதனை இப்னு கல்தூன் அல் அசபிய்யா எனக் கூறுகிறார்.

குழு உணர்வு இரத்த உறவினால் மட்;;டும் ஏற்படுவதாகும்.
அல்லது ஏதாவதொருவகையில் அதனோடு
தொடர்புடையதாகும். இரத்த பந்தத்தை மதிப்பது அற்ப
விதிவிலக்குகளைத் தவிர மனிதனின் பொதுவான
சுபாவமாகும் (1958 : 264).

பழங்குடி மக்களின் எளிய பொருளாதார நடவடிக்கைகளும், சமூக வாழ்வும், சுற்றாடல் பிரச்சினைகளும் அவர்களிடையே குறிப்பிட்ட வகையான லௌகீக, ஒழுக்க குணாம்சங்களைத் தோற்றுவிக்கின்றன. நாடோடிகளாயினும் தரித்;து வாழ்வோராயினும் அவர்கள் சிறு தொகையினராக இருந்தமையும் அவர்களது எளிய பொருளாதார முறையும் அவர்களைப் பெரிதும் சுதந்திரமானவர்களாக வாழ்வதற்கே இடமளிக்கின்ற.ன அரசு போன்ற ஆதிக்க நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையாயிருக்கவில்லை. எனினும் அவற்றின் இடத்திற்கு “சமூக ஒருமைப்பாடு (அசபிய்யா) என்ற எளிய வடிவத்தைப் பெற்றிருந்தனர்’ என்பார் இப்னு கல்தூன்.

இரத்த பந்தத்தின் அடிப்படையிலேயே அசபிய்யா என்ற எண்ணக்கருலை இப்னு கல்தூண் முன்வைத்தார். இரத்த உறவினருக்கு ஆபத்து நேராது பாதுகாப்பதும், தனது இரத்த உறவினர் நீதியற்ற முறையில் தாக்கப்பட்டால் அதற்காக வெட்கமடைவதோடு எந்த எதிர்ப்பு வரினும் உறவினருக்காக அப்பிரச்சினையில் தலையிடுவதும் மனிதனின் இயல்பான தூண்டுதல் என்று இப்னு கல்தூண் விளக்குகிறார். பழங்குடிச் சமூக அங்கத்தவர்களின் பாதுகாப்பிற்கென அன்;று மனிதனுக்கு இருந்த ஒரே வழி இவ்விரத்த பந்தமே என்பது அவரது கருத்தாகும். “இரத்த உறவினர்களை நேரடியாகப் பாதுகாப்பது என்ற உணர்விலிருந்தே அசபிய்யா தோற்றம் பெறுகிறது. இது குடும்பத்தையும் குலத்தையும் பாதுகாக்கும் வடிவமாகவும் அக்காலத் தேவைகளுக்கேற்ப இந்த இயல்பான உணர்வு திடமான சமூக வடிவமாகவும் வளர்ச்சியுறுகிறது.’’ (ஆராளin ஆயானiஇ 1957 : 196) என்ற முஹ்ஸின் மஹதியின் கருத்தையும் இங்கு நோக்கலாம்.
இரத்த பந்தத்திற்கு நபிகள் நாயகம் வழங்கிய முக்கியத்துவத்தையும் இப்னு கல்தூன் எடுத்துக் காட்டினார். தனது கருத்துக்கு ஆதாரவாக முடிந்த வரை உங்கள் இரத்த உறவை உறுதிப்படுத்துவதற்காக உங்கள் வம்சத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்’’ என்ற நபிகளின் வாக்கினை அவர் முன்வைத்தார். (பார்க்க, 1958 : 264) அல் குர் ஆனிலும் இரத்த பந்தத்திற்கு முக்கியத்துவம் தரும் கூற்றுக்கள் உள. (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக்கலப்புப் பந்துத்தவத்திற்கும் மதிப்பளியுங்கள்’. (அத், 4:1) என்பது அத்தகைய கூற்றுக்களில் ஒன்றாகும்.

பாலைவனப் பதவிகளின் இலட்சிய ஒழுக்கம் பாலைவன வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவனது இலட்சிய ஒழுக்கம் “வீர காவிய உணர்ச்சிவாதமாகும்.’’ அது “முர்ருஆ’’ (ஆரசர’யா) எனக் கூறப்பட்டது. வீரமரபும் பெருந்தன்மையும் இதன் இரு பிரதான பண்புகளாகும். அவனது சொல்லலங்காரத் திறனையும் இது குறித்தது. குடும்ப பந்தத்தோடு இணைந்திருந்த கடமைகள், பாதுகாப்பு, விருந்தோம்பல், இரத்தப்பழியை நிறைவேற்றும் பாரிய பொறுப்;பு என்பனவும் இதில் அடங்கியிருந்தன. (1967 : 22) யுத்தத்தில் தீரம், துயரத்தில் பொறுமை, பழிவாங்குவதில் தீவிரம், பலவீனருக்கக் கருணை எனப் பாலைவனப் பதவிகளின் “முர்ருஆ’’ வை ஆர். எ. நிக்கல்ஸன் குறிப்பிடுவார்.

அடிப்படையில் “முர்ருஆ’’ தனி நபருக்குரியதாயினும் சமூக உணர்விலும் அதற்குப் பங்கிருந்தது. பழங்குடிகளின் ஐக்கியம் நிலைபெற அதன் துணை பெரிதும் உதவியது. (1986 : 63) “முர்ருஆ’’ வின் ஒழுக்கப் பண்புகள் பாலைவனத்தின் கடின வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கக் கூடிய இயற்கையின் ஆற்றல்களுக்கு எதிரான மானிடக் கூட்டுறவென பேராசிரியர் மொண்ட் கொமறிவெட் குறிப்பிடுவார்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...