Thursday, July 23, 2009

பெண்ணியம் 2


6. இந்தக் கால கட்டங்களில் ஆசியாவில் பெண்கள் உரிமைக்காகப போராடிய பெண்கள் எவருமே இருக்கவில்லையா?

இருந்தனர், 19ஆம் நூற்றாண்டில் கூடப் பலர் இருந்தனர். இந்தியாவில் 1880 களிலேயே பண்டித ராமாபாய் (1885-1922) என்ற பெண் பெண்களின் சுதந்திரம் பற்றிப் பேசியவராவார். இவரைப்பற்றி உலகம் அதிகம் அறியவில்லை. பெண்கள் சுதந்திரம் பற்றிக் குரல் கொடுத்ததோடு இந்து சமய பழமை வாதத்தை எதிர்த்து சுதந்திரமான வாழ்க்;கையும் நடத்தினார். கார்த்தினி (Karthini 1879 - 1904) என்பவர் இந்தோனேஷியாவில் பெண்கள் கல்விக்காகவும் பெண் ‘தளைகளை நீக்குவதற்காகவும் போராடினார். அவர் பெண்களுக்குத் தனியான கல்விக்கூடங்களை அமைப்பதற்கு எதிராகத தீவிரமாகப் போராடினார் ஈரான் நாட்டு பாபி (Babi) இனத்தைச் சேர்ந்த குவாரத் உல் அயின் (Qurrat Ul Ayin 1815 - 51) என்ற பெண்துறவி குடும்பத்தை விட்டு வெளியேறியதோடு தாமே முகத்திரையிடலைக் கைவிட்டதோடு, முகத்திரையின்றிப் பகிரங்கமாகப் பிரசாரம் செய்தார். இவர் போர்க்களத்திலேயே இறந்தார். ஜியு - ஜின் (Jiu jin 1875 - 1907) என்ற சீனப்பெண் வீட்டை விட்டு வெளியேறி ரோக்கியோ சென்று கல்விகற்றார். அங்கு அவர் புரட்சிகர அரசியல் விடயங்களில் ஈடுபட்டதுடன், பெண்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டார். ஆனால் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை பெற்றார். பெண்களுக்கான சமத்துவ உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் புரட்சியானது எங்கள் வீடுகளிலேயே ஆரம்பமாதல் வேண்டும் என இவர் கூறினார்.

7. இவை யாவும் இலங்கையரல்லாதவர் பற்றிய விடயங்கள். இலங்கையின் நிலை எவ்வாறிருந்தது?

சுகலா, கஜமன் நோனா ஆகிய இரு பெண்களும் பெண்களின் தனித்துவங்களுக்காகப் போராடினர். சுகலா (மகாவம்சத்தில் குறிப்பிடப்படும்) தன் நாட்;டைப் காப்பதற்காக முதலாம் பராக்கிரமபாகுவுடன் போராடினாள். கஜமன் நோனா பெண்கள் வாசிப்பதற்கு அனுமதிக்கப்படக் கூடாக கவிதைகள் என ஆண்களால் கருதப்பட்ட பல கவிதைகளை எழுதினாள்.

8. ஆனால் இந்தப் போராட்டம் இன்று பொருத்தமானதா? ஏனெனில் பெண்களுக்குப் பல ஜனநாயக உரிமைகள்-கல்வி, தொழில் வாய்ப்பு, வாக்குரிமை போன்றவற்றுடன் உடல் ரீதியான தரமான வாழ்க்;கை என்பன ஆசியாவிலேயே உடல் ரீதியான தரமான வாழ்க்கை என்பன ஆசியாவிலேயே உயர்ந்த அளவில் இலங்கையில் காணப்படுகின்றன.

• பெண்களின் ஆயுட்காலம் : 67 வருடங்கள் (ஆண்கள்: 65)
• பெண்களில் எழுதவாசிக்கத் தெரிந்தோர் : 83மூ
• பிரசவத்தின்போது இறப்பு வீதம்: 1000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளுக்கு 1.2
• சிசு இறப்பு வீதம் 1000ற்கு 40

இத்;துடன்
• முதல் பெண் பிரதமரை நாங்கள் கொண்டிருந்தமை
• 1893 இல் முதலாவது மாணவி மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி பெற்றமை
• நாங்கள் பல தொழிற்துறைகளில் பெண்களைக் கொண்டுள்ளமை
• மற்றும் பெண் ராஜதந்திரிகள், மருத்துவர், பொறியியலாளர், வழக்கறிஞர், போராசிரியர்கள் என்போரைக் கொண்டுள்ளமை உண்மை இல்;லையா?

அப்படியானால் பிரச்சனை என்ன?
பெண் நிலைவாதம் எமக்குத் தேவையா?

பெண்கள் தரமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்த போதும் ஆண் தலைமை நடைமுறையில் இருக்கும் நாட்டிற்கு இலங்கை ஒரு உதாரணமாகும். சில விடயங்களைத் தனித்தனியாக எடுப்போம். முதலில் அரசியல், அரசியலில் பெண்கள் பங்குபற்றியமை தொடர்பான புள்ளி விபரங்கள் வியப்பூட்டுபவையாக உள்ளன. இந்த உண்மையை வைத்துப் பார்க்கும்போது உலக நாடுகள்யாவும் பெருமைப்படக்கூடிய அளவு பெண்கள் ஆண்களுடன் வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்திலும் பங்கு கொண்டவர்கள் என நாம் பெருமை பேசலாம். சுதந்திரம் கிடைத்ததிலிருந்து (1948) இன்று வரை பாராளுமன்றத்தில் 20 பெண் உறுப்பினர்களே இருந்துள்ளனர்.

9. ஆனால் பெண்கள் எமது உழைப்பாளர்களிடையே செயலூக்கம் வாய்ந்த பங்கு வகிப்பதுடன் பொருளாதார ரீதியிலும் வலுவடைந்துள்ளனர். அதே நேரம் தொடர்ச்சியாகப் பெரிய எண்ணிக்கையில் உழைப்பாளர்களாகவும் மாறிவருகின்றனர். ஆனால்; உண்மையில் அவர்கள் என்ன வகையான செல்வாக்கைக் கொண்டுள்ளனர்?

தொழில் செய்வோர் விபரம் (1982 குடிசன மதிப்பீடு)
பெண்களின் வீதம்

உயர் தொழில் நுட்பம் 14.1
நிர்வாக முகாமைத்துவம் 0.4
எழுதுவினை 6.0
விற்பனைப் பணியாளர் 3.0
சேவைத்துறைப் பணியாளர் 4.3
விவசாயம், மிருகவளர்ப்பு, காட்டுத்தொழில், மீன்பிடி 52.1
உற்பத்தி. உற்பத்திசார் தொழிலாளர், போக்குவரத்து
எந்திர இயக்குனரும் தொழிலாளரும் 16.8
தொழில் குறிப்பிடப்படாதோர் 2.0
தொழில் செய்வோரின் மொத்த விகிதாசாரம் 24.9

இத்தோடு 13.2மூ ஆண்கள் வேலையில்லாது இருக்கின்றனர். 31.8மூ பெண்களும் வேலையற்று இருக்கின்றனர்.

10. நிச்சயமாகப் சமீபகாலக் கொள்கைகள் பெண்களின் விடுதலைக்கு வழி வகுத்திருக்கின்றன. சுதந்திர வர்த்தக வலயம், மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு, உல்லாசப் பிரயாணத்துறை ஆகியன பெண்களை வீடுகளில் இருந்து விடுபடச் செய்து உழைப்பாளர் ஆக்கியதுடன் அவர்களுக்குப் பொருளாதார ரீதியான சுதந்திரத்தையும் அளித்துள்ளன.

பெண்கள் வீடுகளில் இருந்து விடுபட்டு உழைப்பாளராவதற்கு நாம் ஆதரவளிக்கிறோம். ஆனால் பெண்களின் உழைப்பைச் சுரண்டும் அதாவது பெண்களுக்குத் குறைந்த கூலி வழங்கல், சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் வேலை செய்தல், மேலதிக வேலை, எழுந்தமானத்தில் வேலைக்குச் சேர்த்தலும் விலக்கலும், பெண்கள் ஓர் அமைப்பாக இணையும் சுதந்திரத்தைத் தடுத்தல், பாலியல் சுரண்டல் போன்றவற்றை அனுமதிக்கும் கொள்கைக்குநாம் எதிரானவர்களாவோம்.

11. நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். உதாரணமாக சுதந்திர வர்த்தக வலயங்கள் பெண்களை இரவில் வேலைசெய்ய அனுமதிக்கின்றன. அதன் விளைவாக அவர்கள் ஒழுக்கத்தில் தவற இடமுண்டுடாவதுடன் குடும்பக் கடமைகளைக் கவனிக்க முடியாமலும் போகும்.

பெண்கள், ஆண்கள்-எவராவது இரவு வேலை செய்வதை நாம் எதிர்க்கிறோம் இது கலாசார அல்லது ஒழுக்கரீதியான காரணங்களுக்காக அல்ல. ஆனால் அவர்களின் உடல்நிலை கெட்டுப்போவதுடன் வாழ்வே நாசமாகி விடும் என்பதால். அத்;துடன் அவர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போக்குவரத்து, ஓய்வு வசதிகள் போன்ற அனுகூலங்களும் வழங்கப்படவில்லை. வேலை பார்க்கும் பெண் ~ஒழுக்கத்தில் தளர்ந்தவன்| என்ற வகைமாதிரி எண்ணக்கரவானது சமூகத்தால் நிச்சயமாகக் கைவிடப்பட வேண்டியதாகும். உண்மை என்னவெனில் இரவில் பெண்கள் பார்ப்பதால் ஒழுக்கரீதியான தவறு ஏற்படுவதிலும் பாhக்க பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு அவர்கள் ஆளாவதற்கே அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.

12. ஆனால் இலங்கை தனது சமூக நலக் கொள்கைகளுக்காக உலகில் பிரசித்தி பெற்ற நாடாகும். இங்கு வேறெந்த சமூகத்திலும் பெற முடியாத சமூக நலவுரிமைகளைப் பெண்கள் அனுபவிக்கின்றனர்.

(அ) பிரசவ விடுமுறை: சர்வதேச தொழில் மரபின் 3-ம் பிரிவின்படி பெண் தொழிலாளர்களுக்குக் குறைந்தது 12 வாரங்களாவது பிரசவ கால விடுமுறை வழங்கப்பட வேண்டும். எமது அயல் நாடுகள் உட்பட அநேக நாடுகள் இந்தத் தரங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அத்துடன் சோஷலிச நாடுகள் இதற்கு மேலாகப் பெண்களுக்கு 15 வாரங்கள் பிரசவ விடுமுறை வழங்குகின்றன. எனினும் இலங்;கைப் பெண்கள் 6 வாரங்கள் மட்டுமே பிரசவ விடுமுறை பெறுவதற்கு உரிமை உடையவர்கள். இதற்கு மேலாக தந்தைக்குரிய லீவு பற்றிய எண்ணக்கரு இது இருபாலருமே தொழில் செய்பவராக இருந்தபோதும் வளர்ப்பு பெண்ணின் கடமை என்றே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

(ஆ) பிரசவத்தின் பின் கவனிப்பு: வேறு நாடுகளில் கொடுக்கப்படுவது போன்று எமது நாட்டில் குழந்தை பிறந்தபின்னர் உடனடியான கவனிப்புகளுக்கு ஓர் குடும்பத்திற்கு அரசு எந்த வித ஆதாரமும் வழங்கவில்லை. பிரசவநலச் சட்டத்தில் குழந்;தை பராமரிப்பு நிலையங்கள், பாலூட்டும் நேர இடைவேளை போன்றவற்றிற்கான திருத்தங்கள் சேர்க்கப்பட்டபோதும் இந்த ஏற்பாடுகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

(இ) குடும்பத்தலைமை: அபிவிருத்தித் திட்டத்தின் கீழான அநேக சமூக நல நன்மைகள் (உதாரணமாக மகாவலித் திட்டம் போன்றவற்றில்) ~குடும்பத்தின் தலைவனுக்கே| கொடுக்கப்படுகின்றன. அத்;தலைவன் இலங்கைச் சட்டப்படி வழமையாக ஆணாகவே உள்ளான். கணவன் இல்லாதிருந்தால் மட்டுமே பெண்கள் இந்த உரிமைகளை அனுபவிக்கின்றனர். கணவன் குடும்பத்தில் இருந்து விலகினால் சகல சமூக நலன்புரித் திட்டங்களிலும் ஆணே குடும்;பத் தலைவனாக ஏற்றுகொள்ளப்படுகின்றான். பெண் இரண்டாம் தரநிலை மட்டுமே வகிப்பதாக இவை கருதுகின்றன. இதன்விளைவாக ஆண்கள் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் பெறாத உரிமைகளுக்கு உரித்தாகுகின்றனர். பெண், தானே குடும்பத்தின் பிரதான உழைப்பாளி என்பதை நிரூபித்தால் மட்டுமே இந்த நன்;மைகள் பெண்களுக்கு உரித்தாகும். அநேக இலங்கைப் பெண்கள் இந்த நடைமுறை பற்றிய பிரக்;ஞை அற்று இருக்கின்றனர். பெண்களே பெருமளவில் தொழில் புரியும் சுதந்திர வர்த்தக வலயம் பெருந்தோட்டங்கள், தனியே பெண்களின் தலைமையைக் கொண்ட குடும்பங்கள், நகர்ப்பகுதிகளில் 40மூ பெண்கள் தொழில் செய்தல் ஆகிய நிலைமைகளைக் கொண்ட எமது சமூகத்தில் குடும்பத்தில் பெண்கள் இரண்டாம்தர நிலையே வகிக்கின்றனர் என்று சமூக நலப் பகுதியினர் கருதுவது பொருத்தமற்றதாகும்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...