Friday, July 03, 2009

நட்சத்ரவாசியின் கவிதைகள்


உடைந்த நாற்காலி
*******

-- நட்சத்ரவாசி


ஒரு பழைய நாற்காலியின்
உடைந்த காலொன்று
மிகவும் கவனத்துடன்
பொருத்தப்பட்டிருக்கிறது
உடைந்த நாற்காலி என்று
சொல்லிக் கொள்ளவில்லை
ஆயினும்
உடைந்து விடும் என்பது
நிச்சயமே
உன் இருப்புக்கும்
அதன் இருப்புக்கும்
இடையில்
இருப்பின் தவிப்பாய்
என்னொரு மனம்.

No comments:

ரசூல் கம்சதோவ் கவிதைகள் 4

ரசூல் கம்சடோவ் - உனக்கு என்னை வேண்டுமா, என் காவியமான தாகெஸ்தான்... நான், என் காவியமான தாகெஸ்தான், பிரார்த்தனை செய்ய வேண்டாமா, நான் உன்னை காத...