Monday, May 02, 2016

மெஞ்ஞானக் குறிப்புகள்

மெஞ்ஞானக்  குறிப்புகள்

1
வணக்கத்துக்குரியவன் கடவுள் என்பதில் எல்லா மதத்தவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.இந்த விசயத்தை சொல்லவா கலிமா வந்தது?மக்கத்து காபிரீன்கள் முதல் யூத,கிறிஸ்தவ,ஹனீபிய,சாபியீன் மதத்தினர் கூட ஓரிறை வழிபாட்டுடையவர் தாம்.ஓரிறையை அறிந்தவர்களுக்கா கலிமா வந்தது? சிந்திக்க வேண்டும்.கலிமா தரப்பட்ட அத்துனை நபிமார்களும் ஓரிறை வாதிகள் தான் இதற்கு தானா இவ்வளவு நபிமார்கள் வரவேண்டும்.ஆலிஹாத்துகள் அல்லாவிடத்தில் சிபாரிசு செய்யும் என்று காபிர்கள் நம்பினார்கள்.இது தான் இணை வைத்தல் என்று வஹாபிகள் சொல்கின்றனர்.ஆனால் இந்த இடத்தில் தான் வஹாபிகள் பிழை செய்து விட்டனர்.ஏகத்துவத்தின் அடிப்படையில் அல்லா வேறு ஆலிஹாத்துகள் வேறு என்ற கைரியத்தை விட்டு எல்லா இலாஹுகளும் அல்லாவே என்ற கலிமா தையிபாவின் பிரகடனம் தான் சரியானது.ஷிர்க் என்பதே அல்லாஹ் வேறு சிருஷ்டி வேறு என்று நம்புவது தான். இங்கே சிபாரிசு ஒரு பொருட்டே அல்ல.ஆக ஓரிறை என்பதற்கும் எல்லாம் அவனே என்பதற்கும் வேறுபாடு உள்ளது.எல்லா இலாஹுகளும் அல்லா தான் அதனால் இலாஹுகளை விட்டு அல்லாவை வணங்குகள் என்று தான் பெருமானார் நபி அலைஹிவஸ்ஸல்லம் அருளினார்கள்.எனவே ஏகத்துவம் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்.

2

இருப்பது எல்லாம் அவன் என்றால் காணும் சிருஷ்டிகள் எல்லாம் பொய்யா என்று சந்தேகம் வரும்.ஆனால் காண்பவை யாவும் பொய்யில்லை தான்.அதாவது மாயை அல்ல.இறைவனின் பரம்பொருள் தான் சிருஷ்டியாக காட்சியளிக்கிறது.ஆனால் சிருஷ்டியில் நாம் அவனை காண்பது இல்லை.இதற்கு காரணம் நாம் ஆடையை பார்க்கிறோம் பஞ்சு தெரிவதில்லை.நாற்காலி,மேசையை பார்க்கிறோம் மரம் தெரிவதில்லை.பனிக்கட்டியை பார்க்கும் போது தண்ணீர் தெரிவதில்லை.இந்த மருட்சியை தான் மாயை என்கிறோம்.காணும் பொருள்கள் உண்மையுடன் தான் இருக்கிறது.அந்த உண்மை நம் கண்ணுக்கு தெரிவதில்லை.ஞாநம் பெற்றவர்களுக்கு இது விளங்கும்.மாறாக இவ்வுலகம் மாயை,மித்யை என்று இந்து சங்கர அத்வைதம் தான் குழப்புகிறதேயன்றி இஸ்லாமிய ஏகத்துவ அத்வைதம் சொல்லுவது இவ்வுலகம் பொய்யல்ல.உண்மைதாந்.அந்த மருட்சியை அறிந்தால் எல்லாம் அவனே.

3



திருகுரானின் முதல் வசனமே எல்லாம் அவனே என்ற தவ்ஹீதை பிரகடனப்படுத்துவதாக இருக்கிறது.அல் பத்திஹா சூராவில் முதல் வசனம் அல்ஹம்துலில்லாஹி ரப்புல் ஆலமீன்.அதாவது எல்லா புகழும் அகிலத்தாரின் இறைவனுக்கே சொந்தம்.எல்லா புகழும் என்றால் என்ன? புகழ் எத்தனை வகைப்படும் இறைவன் இறைவனை புகழ்வது,இறைவன் சிருஷ்டிகளை புகழ்வது,மனிதன் இறைவனை புகழ்வது,மனிதன் சிருஷ்டிகளை புகழ்வது என்று நான்கு வகையாகும்.இதில் இறைவனை புகழ்வதை மட்டும் எல்லாம் என்று சொல்ல முடியாது.எல்லாம் என்றால் இந்த நான்கை குறிப்பிடுகிறது.இந்த எல்லாமே எல்லாம் அவனே என்பதை சுட்டிக்காட்டுகிறது.ஆக எல்லாம் அவனே என்ற தவ்ஹீதை தான் குரான் எடுத்தோதுகிறது என்பதை இந்த வசனம் மூலம் அறியலாம்

4

மனிதன் என்று சொன்னால் எல்லா மனிதர்களை குறிப்பது போல் விலங்கு என்று சொன்னால் எல்லா விலங்குகளை குறிப்பது போல் மரம் என்று சொன்னால் எல்லா மரங்களை குறிப்பது போல் அல்லாஹ் என்று சொன்னால் எல்லாவற்றை குறிப்பிடும் பொதுப்பெயர் ஆகும்.இன்னும் அல்லாஹ் என்று சொன்னால் எல்லா கடவுளையும் சேர்த்த ஒன்றை குறிக்கிறது.அதாவது அல்லாஹ் என்பது ஒரு சொல்லாடல்.அந்த சொல்லாடல் ரூபமாய் இருக்கின்ற எல்லாவற்றையும் குறிக்கின்ற அரூப மூலப்பொருள் என்பதை குறிக்கிறது.அல்லாஹ்வை பார்க்க முடியுமா என்றால் ஆம் முடியும் என்பதோடு எல்லாமாக இருக்க படைப்புகளே அல்லாஹ் என்பது ஆகும்.இறைவனை ரூபமாக பார்த்து அறிவதை மட்டுமல்லாமல் அரூபமாக இருப்பதை அறிவதே ஞானம் என்பதாகும்.ஆனால் தியாநம் இருப்பதன் வாயிலாக,தவம் இருப்பதன் வாயிலாக அரூப அம்சமான அல்லாஹ்வில் இருந்து சக்திகள் வெளிப்பட்டு அற்புதங்களை காட்டுகிற சக்தியும் நாட்டங்களை நிறைவேற்றும் சக்தியும் வெளியாகிறது.அதன் மூலம் அல்லாஹ் தெய்வீகத்தை மனிதன் மூலம் நிறைவேற்றுகிறான்.அந்த மனிதன் அவ்லியா அல்லாஹ்வாக இறைநேசராக மாறி மக்களின் துவாக்களை,பிரார்த்தனைகளை நிறைவேற்றி அல்லாஹ்வின் எதார்த்தத்தை காட்டிதருகிறார்கள்.

5
உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி கேட்கிறோம் என்பதன் அர்த்தம்
ஸூறத்துல் பாத்திஹாவிலுள்ள இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன் 1:5 எனும் திருவசனத்தை சற்று சிந்தனை செய்துபார்.

இதன் பொருள் பின்வருமாறு:-

இறைவா உன்னையே வணங்குகின்றோம்.
இன்னும் உன்னிடமே உதவிதேடுகின்றோம்.

இதுதான் இதன் பொருள்.

மேலே கூறிய திருவசனத்தின் படி,

நீ வணங்குவதாயின், அல்லாஹ்வை வணங்கவேண்டும். வேறு யாரையும் வணங்கக்கூடாது.

அதேபோல், நீ உதவிகேட்பதாயின் அல்லாஹ்விடம்தான் உதவி கேட்கவேண்டும். வேறுயாரிடமும் உதவிகேட்கக் கூடாது.

நீ “இய்யாக நஃபுது” உன்னையே வணங்குகின்றோம் என்று சொல்வது போல் அல்லாஹ்வைத்தான் வணங்கிக் கொண்டிருக்கின்றாய். நீ கல்லை வணங்கவுமில்லை. புல்லை வணங்கவுமில்லை. இங்கு நீ சொல்வது போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாய். இதில் நீ சரியானவன்தான். உன்னை ஆட்சேபிக்க ஒன்றுமே இல்லை.

எனினும் “வஇய்யாக நஸ்தயீன்” உன்னிடமே உதவிதேடுகின்றோமென்று நீ சொல்கிறாயல்லவா? இதில்தான் ஆட்சேபனையும், ஆச்சரியமும் இருக்கின்றது. ஏனெனில் நீ சொல்வதுபோல் செயல்படுகின்றாயா இல்லையா?நீ சொல்வது போல் அல்லாஹ்விடம் தானா உனது தேவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றாய்? அல்லது மனிதர்களிடமும் கேட்டுக் கொண்டிருகின்றாயா?

நீ இதுவரை அல்லாஹ்விடம் மட்டும்தானா உதவி கேட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? நீ உனது வாழ்க்கையில் மனிதர்கள் யாரிடமும்உ தவிகேட்கவில்லையா?

இதற்கு நீ என்ன விடை சொல்லப்போகிறாய்! அல்லாஹ்விடம் மட்டும்தான் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறேனென்று சொல்லப் போகின்றாயாஅல்லது அல்லாஹ்விடமும், அதே போல் மனிதர்களிடமும் உதவிகேட்டுக் கொண்டிருக்கிறேனென்று சொல்லப்போகின்றாயா?

மனிதர்கள் யாரிடமுமின்றி அல்லாஹ்விடம் மட்டும் உதவிகேட்டுக் கொண்டிருப்பதாக நீ சொன்னால் யார் உன்னை ஏற்றுக்கொள்வார்? யார்தான் உனது பேச்சைநம்புவார்?

நீ உனது வாழ்க்கையில் உனது மனைவியிடம் உதவி கேட்கவில்லையா? உனது நண்பர்களிடம் உதவி கேட்கவில்லையா? உனது மக்களிடம் உதவி கேட்கவில்லையா?

இல்லையென்று உன்னால் மறுக்கமுடியுமா?முடியாது. இப்பொழுது நீ சொல். நீ யாரிடம் உதவி கேட்டு வாழ்ந்திருக்கின்றாய்? அல்லாஹ்விடமா…மனிதர்களிடமா? அல்லது இருவரிடமுமா?

அல்லாஹ்விடம் என்று நீ சொன்னால், மனிதர்களிடம் நீ உதவி கேட்டிருக்கக்கூடாது. மனிதர்களிடம் உதவிகேட்டிருந்தால் அவர்களையும் அல்லாஹ் என்று நீ நம்பவேண்டும். அவ்வாறு நீ நம்பவில்லையானால் உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்ற திருமறை வசனத்துக்கு நீ மாறுசெய்த பாவியாயிருப்பாய்.

மனிதர்களை அல்லாஹ் என்று நம்புகிறாயா? அல்லது அல்லது தினமும் 17 தரம் உன்னிடமே உதவி தேடுகிறோமென்று சொல்லிக்கொண்டு மனிதர்களிடம் உதவி கேட்பதன் மூலம் திருக்குர்னுக்குமாறு செய்து வாழ்ந்துவருகின்றயா?

அல்லாஹ் மனிதர்களாகவும் வெளியாகியுள்ளானென்பதை நீ ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் குர்ஆனுக்கு மாற்றமில்லாமல் உன்னால் வாழமுடியும். உன்னிடமே உதவிதேடுகிறோம் என்று கூறிக்கொண்டு மனைதர்களிடம் உதவிதேடவும் முடியும்.

மனிதர்களிடம்உதவிகேட்காமல்அல்லாஹ்விடம்மட்டும்உதவிதேடியவனாகஉன்னால்வாழமுடியுமா? எவ்வாறுவாழமுடியும்?அதற்குவழிஇருந்தால்சொல்.அவ்வழிக்குநானும்வந்துவிடுகின்றேன்.

நீ ஒரு கணவனாயிருந்தால் உனது மனைவியிடம் உடலுறவுக்கு உதவிகேட்பதும், நீ ஒரு ஆசிரியனாயிருந்தால் கீழே விழுந்த தடியை மாணவனிடம் எடுத்துக் கேட்பதும் உதவி கேட்பதன்றிவேறென்ன? இவையெல்லாம் உதவிகேட்பதாகாதா??

மனிதனின் வாழ்க்கையில் அவன் இன்னொருவனிடம் உதவிகேட்காமல் அல்லாஹ்விடம் மட்டும் உதவிகேட்டுக் கொண்டு வாழ்வது முடியாத ஒன்றாகும். இதற்கு என்னாலும் முடியாது. உன்னாலும் முடியாது.

படுக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் உனக்குத் தேனீர் தேவைப்பட்டால் உனது மனைவியை அழைத்து அவளிடம்தான் நீ கேட்கவேண்டும்.

படுக்கையில் இருந்தவாறே இறைவா! எனக்குத் தேநீர் தருவாயாக என்று இராப்பகலாக இறைவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாலும் உனக்குத் தேநீர் கிடைக்குமா?

உனது கையிலிருந்து கீழே விழுந்த பழத்தை நீ பெறுவதாயின், நீ கீழேகுனிந்து எடுக்கவேண்டும் அல்லது இன்னொருவரிடம் எடுத்துத்தருமாறு கேட்கவேண்டும். இவ்வாறு நீ செய்யாமல் நின்றவாறே இறைவா! கீழே விழுந்த எனது பணத்தை எனக்கு எடுத்துத்தா என இராப்பகலாக கேட்டாலும் உனக்கு அது கிடைக்குமா?

நீ படுக்கையில் இருக்கையில் இறைவா எனக்கு தேநீர்தா எனக்கேட்டுக் கொண்டிருந்தாய்என வைத்துக்கொள். நீ இவ்வாறு புலம்பிக்கொண்டிருந்த்தை செவியேற்ற உனது மனைவி, உன்மீது இரங்கி தேனீர் தயார் செய்து உனக்குத்தந்தால் அல்லாஹ் தந்தானென்று சொல்வாயா? மனைவி தந்தாளென்ரு சொல்வாயா? உன் எண்ணப்படி உனக்குத் தேநீர்தந்த்து யார்??

கீழே விழுந்த பணத்தை நீ எடுக்காமலும் இன்னொருவரிடம் எடுத்துக்கேட்காமலும் இறைவா எனது பணத்தை எடுத்துத்தா என்று கேட்டுக்கொண்டிருந்தாய் என வைத்துக்கொள்! நீ இவ்வாறு புலம்பிக்கொண்டிருந்த்தை செவியேற்ற ஒருவனுன்மீது இரங்கி கீழே கிடந்த பணத்தை எடுத்து உன்னிடம் தந்தால் அல்லாஹ் தந்தானென்று சொல்வாயா?வழியால் சென்ற மனிதன்தந்தானென்று சொல்வாயா?உன் எண்ணப்படி உனக்கு உதவியது யார்.?

நீ அல்லாஹ்விடம் மட்டும்தான் உதவிகேட்கலாமேயன்றி மனிதர்களிடம் கேட்கக்கூடாதென்ற நம்பிக்கையுள்ளவனென்று வைத்துக்கொள். அந்த நம்பிக்கைப்படி உனது வீட்டினுள் இருந்துகொண்டு இறைவனிடம் ஒன்றை நீ கேட்டு அது உனக்குக் கிடைப்பதாயினும் யாரோ ஒருவரின் மூலம்தான் உனக்கு கிடைக்குமேயல்லாமல் அல்லாஹ் என்றொருவன் உன்னிடம் நேரில்வந்து ஒன்றும் தருவதில்லை. இதை நீ திட்டமாகப்புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

“வஇய்யாக நஸ்தயீன்” உன்னிடமே உதவிதேடுகின்றோம் எனும் இத்திருவசனத்தை நான் கூறிவருகின்ற “எல்லாமவனே” எனும் ஏகத்துவ ஞானக்கருத்தை நிரூபித்துக் காட்டுவதற்கு ஆதாரமாகத்தான் நான் எடுத்தேன்.

இது வரைநான் கூறிய விவரங்களிலிருந்து,

நீ யாரிடம் உதவிகேட்டாலும் அல்லாஹ்விடம்தான் உதவிகேட்கிறாய் என்ற கருத்தையும்,

அல்லாஹ்தான் “இன்ஸான்” மனிதனாக தோற்றுகிறானென்ற கருத்தையும்,

நீ மனிதனிடம் உதவி கேட்பது திருக்குர்ஆன் வசனத்துக்கு முரணாகாதென்ற கருத்தையும் விளங்கியிருப்பாயென்று நம்புகின்றேன்.

1

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...