Monday, May 02, 2016

ஒரு சூபியின் அகமிய விளக்கங்கள்



1

தொழுகையின் ஹகீகத்

பற்பல நாமரூபங்களான தோற்றங்கள் என்ற நஜீசை தௌஹீது எனும் தண்ணீரால் கழுவி (ஒழூ செய்வது)மாவுல் முத்லக்காய் நிற்க வேண்டும் இன்சான்(நிற்கும் நிலை) அப்து வேறு றப்பு வேறு(வலது,இடது கைகளை மேலே உயர்த்துவது) என்ற கைரியத்தை விலக்கி இரண்டல்ல ஒன்று என்ற ஐனியத்தை கல்பில் தரிபடுத்தி(தக்பீர் கட்டும் நிலை) நப்சின் மயக்கங்களை விட்டு நான் என்ற அனானியத்தை களைந்து (ருஹ்உ)ஹக்கில் நாஸ்தியாகி பனா ஆவது(சுஹூது) அன்று பிறந்த பாலகன் போல் ஆகிவிடுவதை,ஹக்குல் எக்கினாக மாறி (அத்தஹியாத் இருப்பு) அல்லாஹ் தவிர உள்ள வஸ்துகளை எரித்துவிட்டேன் என்று விடைபெறுவதே (சலாம் கொடுத்தல்) சலாஹ் என்ற தொழுகையின் அகமியம் ஆகும்.

2

 
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதன் பொருள் என்ன?


1) லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு, அது தரும் தெளிவான நேரடி அர்த்தத்தை எடுக்கவேண்டுமா!

அல்லது அதற்கு வலிந்துரைகள் வைத்து வேறு சொற்களைப்புகுத்தி அர்த்தம் எடுக்கவேண்டுமா! அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் என்பது முஹ்கமான வசனமா! முதஷாபிஹ் ஆன வசனமா?

இஸ்லாத்தின் மூலமந்திரம் நிச்சயமாக முஹ்கமான வசனமாக - தெளிவான வாக்கியமாகத்தான் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

2) "I went to shop" - இவ்வாங்கில வசனத்தின் அர்த்தம்,'நான் கடைக்குப்போனேன் என்பதாகும். ஆனால் மேற்படிவசனத்துக்கு "நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப்போனேன்" என்று மொழிபெயர்ப்பது சரியான மொழிபெயர்ப்பாகுமா!!! அதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்களா!

அதுபோன்றுதான் இருக்கிறது லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு நீங்கள் தந்திருக்கும் மொழிபெயர்ப்பு!

லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு அதன் அர்த்தம் அல்லாத வேறு ஒன்றை அர்த்தமாக நம்பிக்கொண்டிருப்பதால் முஸ்லிம் என்ற வட்டத்துக்குள்ளேயே வரமுடியாதல்லவா?

3) லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வசனத்தில்,

"லா" - இல்லை,
"இலாஹ" – தெய்வம் / சாமி / கடவுள்
"இல்லா" – தவிர / அல்லாத / வேறான
அல்லாஹ்" - அல்லாஹ்.

இதுதான் இச்சொற்களின் நேரடி அர்த்தம். இச்சொற்களுக்கிடையே "வணக்கத்துக்குரிய" என்ற சொல் எங்கே இருக்கிறது ?

(لا) லா – (ஹர்புன் நபிஃ) (deny - மறுதலிக்கும் உருபு),
(إله) இலாஹ - (இஸ்ம்-முப்ததா) (எழுவாய்,)
(إلا) இல்லா – (இஸ்தித்னா) பயனிலை (ஹபர்),
(الله) அல்லாஹ் – நீக்கம் செய்யப்பட்ட செயப்படு பொருள் (முஸ்தித்னா),

இச்சொற்களுக்கிடையே "வணக்கத்துக்குரிய" (முஸ்தஹிக்குன் லில் இபாதத்தி) என்ற பெயர் உரிச்சொல் (adjective) எங்கே இருக்கிறது ?

இல்லாத சொல்லை என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இடைப் புகுத்திச் சொல்கின்றீர்கள்.!

4) திருக்கலிமாவானது அல்லாஹ்வுக்கு "எந்தவிதத்திலும்" கூட்டு இல்லவே இல்லை Absolute negation என்று பறை சாற்ற வந்ததா?

அல்லது ஒரு சில விடயங்களில் மட்டும் தான் கூட்டு இல்லை அதாவது "வணக்கத்துக்குரியவன்" என்பதில் மட்டும் தான் கூட்டு இல்லை என்று மட்டும் பறை சாற்றவந்ததா?

5) உங்களுக்கும் தெரியும் "லா ஷரீக்க லஹூ" எனும் வசனம்

"அவனுக்கு எந்தவொரு கூட்டும் இல்லவே இல்லை" என்பதைக் குறிக்கிறது.
"வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை" என்பது இஸ்லாமிய தத்துவங்களில் ஒன்று. அது லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் அர்த்தமல்ல.

நீங்கள் சொல்லும் கலிமாவின் அர்த்தப்படி "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை" என்று வைத்துக் கொண்டால், வணக்கத்துக்குரியவன் என்ற விடயத்தில்தான் அல்லாஹுவுடன் கூட்டு இல்லை. வேறு விடயங்களில் கூட்டு இருக்கலாம் என்ற இணைகற்பிக்கும் கருத்து உங்கள் கலிமாவின் அர்த்தத்தில் இருப்பதை காணலாம். இதை பூரண தவ்ஹீத் (ஒருமைப்படுத்தல்) என்று எவ்வாறு சொல்ல முடியும்!!

"வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை" என்பதுதான் கலிமாவின் அர்த்தம் என்று பார்த்தால்,

உணவளிப்பதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு!!! பாதுகாவல் வழங்குவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு! ஆக்குவதற்குரியவன், அழிப்பதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு!! போன்ற அர்த்தங்கள் நீங்கள் கலிமாவுக்குக் கூறும் கருத்தில் தொக்கி நிற்கும் விபரீதத்தை உணரவில்லையா?.....

ஆனால் கலிமா வந்ததன் நோக்கம் என்ன! அல்லாஹ்வுடன் எந்த விதமான கூட்டும் அறவே இல்லை, அல்லாஹ்வுக்கு வேறாக ஒன்றுமே இல்லை, அவன் என்றென்றும் தனித்தவன் என்பதுதானே.!!!!

6) வணக்கத்துக்குத் தகுதியான நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை என்றால் வணக்கத்துக்கு தகுதியில்லாத நாயன் அல்லாஹ்வைத் தவிர இருக்கின்றது என்ற கருத்து அதற்குள் இருப்பதை அவதானித்தீரா! இப்படி சொல்வது எங்கணம் பூரண தவ்ஹீத் ஆகும்? இரண்டு உண்டு என்னும் "கூட்டு / இணை" எங்கணம் தவ்ஹீத் ஆகும்!

7) இதனை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள "லா ரஜுல பித்தாரி" வீட்டிலே எந்த மனிதனும் இல்லை என்ற வசனத்தை எடுத்து நோக்குங்கள்.

'லா ரஜுல பித்தாரி" என்றால் எந்த ஒரு மனிதனுமே வீட்டில் இல்லை என்ற கலிமாவின் Format இல்தான் இவ்வசனம் உள்ளது.
இவ்வசனத்திற்கு,

கை உடைந்த மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?

குள்ளமான மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?

கறுப்பான மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?

ஆனால் நீங்கள் சொல்லும் கலிமாவின் கருத்து அப்படித்தானே இருக்கிறது. இது எவ்வளவு பிழையான அர்த்தம்!!!

8) கலிமாவில் "இலாஹ்" என்ற சொல் "இலாஹ" என்று (மன்ஸூப் ஆக) வந்துள்ளதை அவதானித்திருப்பீர். இலாஹ என்பது "நகிரா"வா "மஃரிபா"வா?
"மஃரிபா" என்றால் குறிப்பான ஒன்று (eg : The God,The Man (muzammil) ,The furniture (table), வணக்கத்துக்குரியவன் .

"நகிரா" என்றால் பொதுப்படையாக அனைத்தையும் குறிக்கும் ஒன்று (eg: God, Man, Creature, Furniture,எது எதுவெல்லாம் வணங்கப்படுமோ அவையாவும்)

ஆகவே கலிமாவில் இலாஹுன் (அந்த ஒரு தெய்வம் The deity) என்று குறிப்பிட்டு பிரயோகிக்கப்படாமல், "இலாஹ" என்று ( எது எதுவெல்லாம் வணங்க, வழிபடப்படுகின்றதோ) அந்த இனம் யாவற்றையுமே ஒட்டுமொத்தமாக குறிப்பிடும் பாணியில் வந்திருக்கிறது.

அப்படியிருக்க "இலாஹ" என்பதை மஃரிபாவாக - குறிப்பிட்ட ஒன்றாக கட்டுப்படுத்தும் வகையில், வணக்கத்துக்குரிய தெய்வம் என்று எப்படி அர்த்தம் வைப்பீர்? இது குர்ஆனிய மொழியியலில் இல்லாத விடயமாயிற்றே.!

9) "லா" வுக்குப்பின்னால் ஒரு "இஸ்ம்" வந்தால் அந்த இஸ்ம் Common noun- பொது இனப் பெயர்ச்சொல் - பொதுப்படையாக அனைத்தையும் உள்ளடக்கிக் குறிக்கும் ஒருசொல் என்பது அறபு இலக்கணவிதி,

அத்தோடு அந்த "லா" "தப்ரிய்யாவுடைய லா"- absolute negation -அந்த இனத்தையே முற்றாக மறுதலிக்கும் "லா" (லல்லதீ லினப்யில் ஜின்ஸி) என்பது குர்ஆனிய மொழியின் விதி. இந்த விதிகளை புறக்கணித்து "வணக்கத்துக்குரியவன் மட்டும்தான் இல்லை அல்லாஹ்வைத்தவிர "என்று மொழிபெயர்ப்புச்செய்யலாமா? செய்தால் அது சரியான மொழிபெயர்ப்பு ஆகுமா?

நான் மேலே கூறிய கருத்துக்களின் அடிப்படையில் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் அல்லாஹ்வுக்கு வேறான கடவுள் / தெய்வம் இல்லை என்பதாகும்.

கடவுள் எனும் சிருஷ்டி அல்லாஹ்வுக்கு வேறானதாக இல்லாமல் இருக்கும் போது மற்றைய சிருஷ்டிகளும் அல்லாஹ்வுக்கு வேறானதாக இல்லாமலே இருக்க வேண்டும்.

அதாவது, கடவுள் எனும் சிருஷ்டி அல்லாஹ் தானானதாக இருக்கும் போது மற்றைய சிருஷ்டிகளும் அல்லாஹ் தானானதாகவே இருக்க வேண்டும்.

எனவே, அல்லாஹ்வுக்கு வேறான எந்த சிருஷ்டியும் இல்லை. சிருஷ்டிகள் அனைத்தும் அவன் தானானதாகவே இருக்கின்றன. அவனைத் தவிர எதுவும் இல்லை அவன் மாத்திரமே இருக்கின்றான் என்ற தௌஹீதை லா இலாஹ இல்லல்லாஹ் என்கின்ற திருக்கலிமாவில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

3

 
ஒப்புக்கொள்ளப்பட்ட நல்ல முரீது !

முரீதாகிய ஒருவர் , தஜ்லா நதியில் மூழ்கி விடும் நிலையில் சிக்கிக் கொண்டிருந்தார் , அப்போது தெய்வீகமாக முதலில் ஒரு கை தோன்றியது .அசரீரியாக " நீ இந்தக் கையை பிடித்துக்கொள் " நீ தப்பித்துக்கொல்வாய் ! என்ற சத்தம் வந்தது . அன்னவர் , " இது யாருடைய கை " என்று
ஒரு கேள்வி கேட்டார் . " இது உன்னுடைய ஆசான்களில் இன்னவருடைய கை " என்று விடை வந்தது .
இவருக்கு இஷ்டமில்லாததால் ,அந்தக் கையைப் பிடிக்கவில்லை . எனவே அந்தக் கை போய் வேறொரு கை தோன்றியது , " இது யாருடைய கை " என்று மீண்டும் கேட்டார் . " இது ஒரு மஹானுடைய திருக்கை " என்று பதில் சத்தம் வந்தது . இதையும் அவர் பிடித்துக் கொள்ளவில்லை .மூன்றாவதாக மீண்டும் ஒரு கை தோன்றியது . " இது யாருடைய கை " என்று முரீது கேட்டார் . " இது உன்னுடைய குருவின் கை " என்று பதில் சத்தம் வந்தது , உடனே அந்த முரீத் கையை நீட்டி அந்தக் கையை பற்றிப்பிடித்துக்கொண்டார் . இதனால் தண்ணீரில் மூழ்காமல் தப்பித்துக்கொண்டார் .
பிறகு அவர் , தம்முடைய குருவின் சமூகத்தில் போய் நிகழ்ந்த சம்பவத்தை எடுத்துரைத்தார் , இதைக்கேட்ட பீர் அவர்கள் நீ உன்னுடைய
கையை வேருகைகளிடம் கொடுத்திருப்பாயானால் நீ மர்தூதாக [ தள்ளப்பட்டவனாக ] ப் போயிருப்பாய் . அந்தக் கை எனக்கு வழிகாட்டிய பெரியோர்களின் கைகளாய் இருந்தும் ,நீ என் கையை பற்றியதால் ,நீ செய்தது தான் மரியாதையான நற் செயல் " என்று விளக்கம் கூறினார்கள் !
ஹஜ்ரத் துன்னுன் மிஸ்ரி [ ரஹ்மதுல்லாஹி அலைஹி ] அவர்கள் சொல்கிறார்கள் " முரீதானவர் தன்னுடைய செய்குக் குரிய மரியாதை
ஒழுக்கத்தை விட்டுவிட்டால் ,அவன் முன்னிருந்த இடத்துக்கே [ ஆரம்ப நிலைக்கே ] போய் சேர்ந்துவிடுவான் . ஏனனில் அவன் உயர் பதவிக்கு வரத்தக்க காரியம் இந்த ஒழுக்கமேயாகும் .ஏனனில் ஷைகுக்கு குரிய உரிமைகள் நபிமார்களுக்குரிய உரிமைகளைப் போன்றவைகளாகும் என்று
மஷைகு மார்கள் கூறி இருக்கிறார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

4

 
“லம் யெலித் வலம் யூலத்”

“அவன் பெறவுமில்லை, அவன் பெறப்படவுமில்லை”
இறைவன் இவ்வசனத்தில் “விலாதத்” என்ற சொல்லைக் கையாண்டுள்ளான்.
“விலாதத்” என்பது, ஒரு பெண் தனது வயிற்றிலுள்ள சிசுவைப்பிரசவிப்பதை (பிரிப்பதை)க் குறிக்கும்.
“பிரசவித்தல்” என்பது பெண்பாலுக்கு மட்டும் உரித்தான தொழில்.பெண்ணைக்குறித்தே அச்சொல் பயன்படுத்தப்படும்.ஆயினும், ஆணுமல்லாத-பெண்ணுமல்லாத -தன் “தாத்” (பிரம்மத்)தைப் பற்றி “அது பெறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளான்.
“தாத்” (பிரம்மம்) ஆணுமில்லை பெண்ணுமில்லை, ஆகவே அது பெறுகிறதா என்று சொல்லிக்காட்டவேண்டியதில்லையே?
ஆணுமல்லாத –பெண்ணுமல்லாத “அலி” எனப்படும் அது கூடப்பிரசவிப்பதில்லை என்பது யாவரும் நன்கறிந்ததேயாகும்.
இம்மூன்று வர்க்கமுமில்லாத அப்பிரம்மம் பெறுகிறதா இல்லையா என்பதைப்பற்றி இறைவன் ஏன் வீணே பிரஸ்தாபிக்கவேண்டும்? நாம் சற்று சிந்திக்கவேண்டும்.!
ஆணும் அலியும் பிரசவிப்பதில்லை.பெண்மட்டும்தான் பிரசவிப்பாள். இறைவனின் “தாத்”(பிரம்மம்) இம்மூன்றும் இல்லை என்றால் “பிரசவித்தல்” என்பதற்கு வேறு விளக்கம் உண்டு.அது பின்னால் குறிப்பிடுகிறேன்.
அவ்வசனத்துக்கு ஒரு பெண் பிரசவிப்பது போல் இறைவன் பிரசவிக்கவில்லை என அர்த்தம் கொண்டால், அது(பிரம்மம்) பெண்தான் என்றும், ஆயினும் அது பிரசவிக்கவில்லை என்றும் தானாகவே ஒரு கருத்து ஏற்பட்டுவிடும்.
ஒரு பெண், பேறில்லாத காரணத்தாலோ, அன்றி திருமணமாகாத காரணத்தாலோ பிரசவிக்காமல் இருப்பாள் என்பது கண்கூடு.
“பிரசவித்தல்” என்பது பெண்ணைக்குறித்தே உபயோகப்படுத்தப்படும் ஒரு சொல்.ஆகையால்,அப்பிரம்மம் பெண் என்றும்,மேற்கூறிய இருகாரணங்களால் அது பிரசவிக்கவில்லை என்றும் கருத்து வந்துவிடும்.
சிலர் பிரம்மம் பெண்தான் என்றும், அது பெண்ணொருத்தி பிரசவிப்பதுபோல் பிரசவிக்கிறது என்றும் கருதினார்கள்.அத்தகைய கருத்தை மறுப்பதற்காகவே அவ்வாறு இறைவன் கூறியதாக விளக்கம் சொல்கிறார்கள்.
இவர்களின் இத்தகைய விளக்கம்தான் அதற்குக்காரணம் என்று நாம் வைத்துக்கொண்டால் அதில் பல்வேறு ஆட்சேபனைகள் எழுகின்றன. மேலும், இது “அவன் பெறவில்லை” என்ற கருத்தை மட்டும் காட்டி நிற்கின்றதேயன்றி, அவ்வாறு பெறாததற்குக் காரணம் என்ன? என்பதை விளக்குவதாக இல்லை.
இறைவன் ஏன் பெறுவதில்லை?
“இறைவன் ஏன் திருமணம் செய்யவில்லை? ஏன் அதன் மூலம் குழந்தைகளைப்பெறவில்லை?”
இவை போன்ற வினாக்களுக்கு அத்வைத ஞான வட்டத்திலேதான் தர்க்க ரீதியான பதில்கள் உள்ளன.
///சிருஷ்டிகள் திருமணம் செய்துகொள்கின்றனர்,குழந்தைகளைப்பெறுகின்றனர்.இவ்விரு தன்மைகளும் சிருஷ்டிகளின் தன்மைகள். இவை அல்லாஹ்வில் ஏற்படுவதால் அவன் சிருஷ்டிகளுக்கு ஒப்பாகிவிடுகிறான். சிருஷ்டிகளுக்கு ஒப்பாகவேண்டும் என்பதனால் அவன் திருமணம் செய்யாமலும், சந்தானங்களைப்பெறவில்லை/// என்றும் சிலர் கூறுவர்.
இது பகுத்தறிவால் ஏற்கப்படும் தர்க்கரீதியான காரணமல்ல.
அவன் திருமணம் செய்வதாலும்,பிள்ளைகளைப்பெறுவதனாலும் சிருஷ்டிகளுக்கு ஒப்பாகிவிடுகிறான் என்ற வாதம் பிழையானதே! ஏனெனில், ஒப்பு –நிகர் என்பது அவனுக்கு அறவே இல்லாமலிருக்கும்போது, அவன் அதற்கு ஒப்பாகிவிடுகிறான்,இதற்கு ஒப்பாகிவிடுகிறான் என்பது காரணமில்லை.
அதுவே அதற்குக்காரணம் என்பது முற்றிலும் பிழையான வாதமாகும்.
அவனல்லாத ஒன்றும் இல்லாதிருக்கும்போது அவன் எதற்கு ஒப்பாவது?
மேலும், அவ்வாறு சிருஷ்டிகளுக்கு ஒப்பாகவேண்டும் என்பதைக்காரணமாகக்கொண்டால், “அவனுக்குத்திருமணம் செய்யவும்,சந்தானங்களைப்பெறவும் முடியும்.ஆனால்,சிருஷ்டிகளுக்கு ஒப்பாகவேண்டும் என்பதனாலேயே பிரசவிக்காமல் இருக்கிறான்” என்ற அர்த்தம் தானாகவே தோன்றிவிடும்.
எனவே, அவன் பெறவில்லை,திருமணம் செய்யவில்லை என்ற கூற்றுகளுக்கு மேலே குறிப்பிட்ட “ஒப்பாகுதல்’ என்பது காரணமில்லை. அதற்குக்காரணம்; (ஆணாக-பெண்ணாக-கணவனாக-மனைவியாக-பிள்ளைகளாக இவ்வாறெல்லாம்) அனைத்துமாக வெளியாகியுள்ள பிரம்மத்தை (அல்லாஹ்வை)ப்பொறுத்து அவ்விரண்டும் அசாத்தியமானவைகளாக இருப்பதினாலேயாகும்.
பெறுதல் தரும் பிரிதல்
********************************
“பெறுதல்” என்பது
தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளியாகுவது போல்,
ஒன்றிலிருந்து இன்னொன்று வெளியாகுவதை (பிரிவதை) க்குறிக்கும்.
எனவே அவன் பெறவில்லை என்பதன் அர்த்தம், அவனில் (அப்பிரம்மத்தில்) இருந்து எதுவும் பிறந்து (பிரிந்து) வரவில்லை என்பதேயாகும்.
சர்வ சிருஷ்டிகளும் அவனில் இருந்து வந்தவைகள்தான். ஆயினும் தாயின் வயிற்றில் இருந்து சிசு பிரிந்து வந்தது போல்- கோழியில் இருந்து முட்டை வேறாகி வந்ததுபோல் அவை அவனுடைய பிரம்மத்திலிருந்து பிரிந்து வேறாக வந்தவையல்ல.
பிரபஞ்சம் பிரம்மத்தின் குழந்தைகள்தான். ஆயினும் சிசு தாயின் வயிற்றிலிருந்து பிரிந்து வந்து அது வேறாகவும் தாய் வேறாகவும் இருப்பது போல், பிரபஞ்சம் என்பது, பிரம்மத்திலிருந்து பிரிந்துவந்து அது வேறாகவும், பிரம்மம் வேறாகவும் இருக்கின்றது என்பது அர்த்தமில்லை.
“அவன் பெறவில்லை” என்பதின் சரியான அர்த்தமும் தர்க்க ரீதியான காரணமும் நான் மேலே வலியுறுத்தியவாறு ‘பிரியவில்லை” என்பதுதான். இதற்கு, இவ்வத்தியாயம் (ஸூறத்துல் இஹ்க்லாஸ்) இறங்கிய வரலாற்றை சற்று நோக்கினால் “பெறவில்லை” என்பதன் கருத்து “பிரியவில்லை” என்பதுதான் என்பது தெளிவாகும்

5

 
தொடுவதும் தொடர்வதும்


முறையாகஷெய்கிடம் பைஅத் வாங்கி அந்த வழியில் செயல்படுபவராக இருக்கலாம். இன்னும்சிலர் இந்த வழியில் நாமும் பயணிக்க வேண்டும் என்று என்ணிக்கொண்டு இந்த வழியை மிகவும் ஆசிப்பவராகவும் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருப்பார்கள்.

. இன்னும் சிலர் காமிலான ஷெய்கைத் தேடிக்கொண்டு காலத்தை வீன் விரயம் செய்வார்கள். காமிலான ஷெய்கை தொட்டுவிட்டால் ஞானம் அனைத்தும் நமக்கு கிட்டிவிடும் என்பது இவர்களின் நிணைப்பு இதுவும் தவரான நினைப்பு. தான் உழைத்து சம்பாதித்த ஒன்றில்தான் அதன் அருமையும் அதை பாதுகாக்கும் என்னமும் இருக்கும்.

குருடன் மற்றவர்கு வழிகாட்ட முடியாது தன் ரப்பை தரிசித்த ஒரு ஷெய்கே மற்ற வர்கு வழிகாட்டலாம் இதில் ஷெய்கின் வழிகாட்டல் 25 % என்றால் உங்களின் உழைப்பும் உறுதியும் விடாமுயற்சியும் 75 % ஆகும். இந்தப்பாதையில் பயணிக்க யாருக்கு ஆசை இருக்கிறதோ அவருக்கு அல்லாஹ் நாடிவிட்டான் என்று பொரு ளாகும் நாம் இதற்காகவே இப்பிறவி எடுத்துள்ளோம் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த காலங்களில் ஆன்மீக என்பது இலையில் மறைந்த கனியதுபோல் பகிரங்கமற்ற நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ஷெய்கிடம் ஞானதீட்சை பெறுவதும் அதைப்பற்றி பேசுவதும் மிக இரகசியமான ஒன்று.

ஆனால் இன்று முகநூலில் ஞானத்தைப் பற்றி அதிகமான அளவு
தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு
இந்தப்பாதையில் இருப்பவர்களை
தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் உண்டு
இதில் யாரிடமேனும் தொடர்பை
ஏற்படுத்தி உங்களுக்கும் இந்தப்பாதை
யில் ஈடுபடும் வாய்பை தேடிக்கொள்-
ளுங்கள்

முகநூலில் அதிகமான பதிப்புகள்
கடந்த காலத்தின் நிகழ்வுகளைப்பற்றி
ஹதீஸ் நபிமார்களின் வரலாறு வலி
மார்களின் நிகழ்வுகள் போன்றவை
களை படிப்பதும் Like போடுவதும்
விமர்சனங்கள் செய்வதும் அதை வைத்து விவாதம் செய்து பட்டிமன்ற
மாக்குவதும் வஹாபிகளை விமர்சிப்
பதும் இவைகளெல்லாம் பொழுது
போக்காக செய்துகொண்டிருக்கிறாம்.

ஆனால் நம்மைப்பற்றி நாம் சிந்திப்பதில்லை நாம் எதற்காக இங்கு
வந்தோம் ? அதற்காக என்ன செய்தோம ? என்று ஒரு நிமிடம்
நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்
இந்த உடலில் உயிர் இருக்கும்போதே
நம்மை நாம் அறிய வேண்டும் இந்த
உடலை இழந்தால் நஷ்டவாளி ஆகி
விடுவோம் . என்னை அறியாமல்
எனக்குள்ளே நீ இருக்க உன்னை
அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே என்றார் பட்டிணத்தார்.

இனிமேலாவது ஒரு ஷெய்கை
தொட்டுக்கொண்டு ஞானப்பாதையில்
பயணத்தை தொடர்ந்து விடுவோம்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...