Saturday, June 27, 2020

ஜெயமோகனின் நாவல்களில் இரண்டாம் நிலை அர்த்தங்கள் அல்லது இந்துத்துவாவின் ஆதிக்கம்

ஜெயமோகனின் நாவல்களில் இரண்டாம் நிலை அர்த்தங்கள் அல்லது இந்துத்துவாவின் ஆதிக்கம்
அடையாள அமைப்பில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன, குறிப்பான், குறிப்பீடு மற்றும் குறி. குறிப்பான் என்பது மொழி,  எழுத்து, பேச்சு ஆகியவை ஒரு படத்தில் கூட வெளிப்படும். அந்த மொழி வடிவங்களை நாம் படித்ததும், கேட்டதும், பார்த்ததும் நம் மனம் உருவாக்கும் கருத்தாகும். இறுதியாக, ஃபெர்டினாண்ட் டி சாசூர் இப்படி வரையறுக்கிறார்   “அடையாளங்கள் அல்லது குறிகள் இணைந்ததன் விளைவாக உருவாகும் ஒன்றே  குறி ஆகும். ரோலண்ட் பார்த்ஸைப் பொறுத்தவரை, இந்த முப்பரிமாண முறை (குறிப்பான், குறிப்பீடு மற்றும் குறி) ஒரு அரைகுறை சங்கிலியில் இணைந்து உள்ளது, இதில் முதல் அமைப்பில் உள்ள அடையாளம் இரண்டாவது அமைப்பில் ஒரு குறியீடாக மாறும். இதுவே "இரண்டாம்-வரிசை  அமைப்பு" ஆகும், இது பார்த்ஸ் ஒரு "கட்டுக்கதை" அல்லது "உலோக மொழி"  என்று அழைக்கிறார்.இது ஒரு பெரிய அமைப்பைக் குறிக்கிறது. பார்த்ஸின் புராண பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கும் அதன் முதன்மை அர்த்தத்தை விளக்குவதற்கும், இரண்டாவதாக எதைக் குறிக்கிறது (மெட்டாமேஜ்) என்பதற்கும் மொழியை தேர்ந்தெடுத்தேன்? அதன் இரண்டாம் வரிசை  அமைப்பு என்ன, அது என்ன புராணத்திற்குள் செல்கிறது?

         ஒரு படத்தை வைத்துக்கொண்டு , சில மெக்சிகன்-அமெரிக்கர்கள் அமெரிக்க பிராந்தியங்களில் அமெரிக்கக் கொடிக்கு மேலே மெக்சிகன் கொடியை உயர்த்தினர். கொடி என்ற படத்தின் எளிய பொருள். இந்த படத்தை யார் வெளியிட்டாலும், இது அமெரிக்காவிற்கு அவமானமாக கருதப்படுவதால் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறுகிறது. படத்தில் உள்ளவர்கள் அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிகர்கள். அவர்கள் அமெரிக்கர்களாக இருக்க வேண்டும், அதன் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அவர்கள் இந்த தேசத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் மற்றும் அதன் தேசிய அடையாளத்தை மதிக்க வேண்டும். இங்கே குறிப்பானது ஒரு அமெரிக்க மாநிலத்தில் மெக்சிகன்-அமெரிக்கர்கள் கூட்டம் அமெரிக்கக் கொடியை இழுத்து, அதற்கு பதிலாக மெக்சிகன் கொடியை உயர்த்துவதைக் காண்கிறோம். இந்த நிகழ்வில் குறிக்கப்படுவது என்னவென்றால், மெக்சிகன்-அமெரிக்கர்கள் அமெரிக்கக் கொடியை மதிக்கவில்லை, இதையொட்டி, அவர்கள் இந்த தேசத்தின் ஒரு அங்கமாக இருப்பதைப் பாராட்டுவதில்லை. இப்போது, குறிப்பான் மற்றும் இந்த படத்தின் குறியீட்டின் கலவையால் கட்டமைக்கப்பட்ட அடையாளம் பார்வையாளர்களாக நமக்கு புரியும். இதை பார்த்ஸ் "முதல்-வரிசை  அமைப்பு" என்று அழைக்கிறார். இரண்டாவது வரிசை  அமைப்பு (மெட்டாமேஜ்) என்றால் என்ன? இந்த படத்தின் அடையாளம் ஒரு பெரிய செமியோலாஜிக்கல் அமைப்பைக் குறிக்கிறதா? இது ஒரு குறிப்பிட்ட கட்டுக்கதையை குறிக்கிறதா? நிச்சயமாக அது செய்கிறது.

          பார்த்ஸ் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், “முதல்-வரிசை  அமைப்பில் உள்ள அடையாளம் இரண்டில் வெறும் அடையாளமாக மாறும்” . மெக்ஸிகன்-அமெரிக்கர்கள் அமெரிக்கக் கொடியை அவமதிப்பதாக முதன்மையாகக் கூறும் முதல்-வரிசை செமியோலாஜிக்கல் அமைப்பில் இந்தப் படத்தின் எளிய பொருள், இரண்டாம் வரிசை அரைகுறை அமைப்பில் ஒரு சிக்கலான பொருளைக் குறிக்கும். இது இரண்டாவதாக ஒரு "கட்டுக்கதையை" குறிக்கிறது, அதில் மெக்சிகன்-அமெரிக்கர்கள் அமெரிக்காவிற்கு விசுவாசமாக இல்லை மற்றும் அதன் தேசிய அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், படம் வெறுமனே மெக்ஸிகன்-அமெரிக்கர்கள் அமெரிக்கக் கொடியை அவமதிப்பதாக அர்த்தம், ஆனால் அந்த மெக்ஸிகன்-அமெரிக்கர்கள் நாட்டிற்கு விசுவாசமாக இல்லாததால் அவர்கள் இங்கு வரவேற்கப்படக்கூடாது என்பதையும், அவர்கள் தேசிய அடையாளத்திற்கு அச்சுறுத்தலைக் குறிப்பதையும் குறிக்கிறது. இந்த தேசத்தின் ஒரு அங்கமாக இருப்பதை அவர்கள் பாராட்டாததால் அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும். இது ஒட்டுமொத்தமாக குடியேற்ற பிரச்சினைக்கு எதிரான ஒரு பரந்த செய்தியாகவும் இருக்கலாம். இது மெக்ஸிகன் மட்டுமல்ல, அனைத்து குடியேறியவர்களையும் குறிக்கலாம். இதனால்தான் இரண்டாவது வரிசை அரைகுறை அமைப்பில் குறிப்பான் ஒரு சிக்கலான பொருளைக் குறிக்கக்கூடும் என்று குறிப்பிட்டேன். குடிவரவு சட்டத்திற்கு எதிராக பொதுமக்களை அணிதிரட்ட ஒரு அரசியல் பிரச்சாரமாக இந்த படத்தில் உள்ள மெட்டாலங்குவேஜ் அல்லது புராணம் பயன்படுத்தப்படுகிறது. படம் இரண்டாவதாக குறிக்கும் பெரிய செமியோலாஜிக்கல் அமைப்பு இதுவாகும். குடிவரவு சட்டத்திற்கு எதிராக பொதுமக்களை அணிதிரட்ட ஒரு அரசியல் பிரச்சாரமாக இந்த படத்தில் உள்ள மெட்டாலங்குவேஜ் அல்லது புராணம் பயன்படுத்தப்படுகிறது. படம் இரண்டாவதாக குறிக்கும் பெரிய செமியோலாஜிக்கல் அமைப்பு இதுவாகும். குடிவரவு சட்டத்திற்கு எதிராக பொதுமக்களை அணிதிரட்ட ஒரு அரசியல் பிரச்சாரமாக இந்த படத்தில் உள்ள மெட்டாலங்குவேஜ் அல்லது புராணம் பயன்படுத்தப்படுகிறது. படம் இரண்டாவதாக குறிக்கும் பெரிய செமியோலாஜிக்கல் அமைப்பு இதுவாகும்.

          இறுதியாக, எந்தவொரு நிகழ்வு, படம் அல்லது உரை பற்றிய பார்த்ஸின் புராண பகுப்பாய்வைப் பயன்படுத்தலாம், அவை முதன்மையாக எதைக் குறிக்கின்றன, அவை இரண்டாவதாக எதைக் குறிக்கின்றன? எந்தவொரு நிகழ்விற்கும் பின்னால் உள்ள “கட்டுக்கதை” அல்லது “மெட்டாலங்குவேஜ்” ஆகியவற்றை அறிய இது ஒரு பகுப்பாய்வு ஆகும்.இனி இந்த ஆய்வு மூலம் ஜெயமோகனின் நாவல்களை பகுப்பாய்வு செய்வோம்.

ரப்பர்

இந்த நாவல் காடுகளை, அல்லது வாழைத் தோட்டங்களை அழித்து ரப்பர் மரங்களை நட்டது சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தியுள்ளது; அதை எதிர்த்து ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்று பலர் சிலாகித்திருக்கிறார்கள். ரப்பர்” என்பது இந்த நாவலில் ஒரு உபகரணம்தான். நாவலின் அடிநாதம் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அசுரபலம் பெற்றெழுந்த நாடார்களின், குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் சமூக வரலாறுதான். நாடார்களின் எழுச்சி, பல இடை, உயர் நிலைச் சாதிக்காரர்களின் வீழ்ச்சியடைந்த காலக்கட்டத்தில் நடந்தது. அதில் நாயர் சாதிக்காரர்களின் சமூக வரலாற்றையும் “ரப்பர்” ஓரளவுக்குத் தொடுகிறது. ரப்பர் மூலம் எப்படி தங்களுடைய வாழ்க்கையை மேன்மைப்படுத்தி கொண்டார்கள் என்றும் நாயர்கள் ரப்பர் பிறகு தங்களுடைய வாழ்க்கையை தொலைத்து விட்டார்கள் என்றும் இந்த நாவல் சொல்லியிருந்தால் வியப்பொன்றும் இல்லை .ஆனால்  ஜாதியம்  நெருக்கம் கொள்வதற்கு பதிலாக தொலைந்து விட்டது என்றும் இதன் காரணமாக நாடார்கள் தங்களுடைய மதத்தை விட்டு கிறிஸ்தவர்களாக மாறி விட்டார்கள் என்றும் சொல்லி இருப்பது தான் அவருடைய விஷமத்தனம் ஆகும்.

தங்கம் என்னும் நாயர் பெண் நாவலின் முக்கிய பாத்திரமாக காண்பிக்கப்படுகிறாள். செல்வாக்குள்ள குடும்பத்திலிருந்து, அந்தக் குடும்பம் சரிவைச் சந்தித்தபின் பெருவட்டர் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வருகிறாள். அவளுக்கும், பெருவட்டர் வீட்டிலிருக்கும் திருமணமாகாத இளைஞனுக்கும் காம உறவிருக்கிறது. அவளுக்கு நாவலில் சொல்ல எவ்வளவோ இருக்கலாம். ஆனால், அவள் ஒரு தடாகத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டு போய் விடுகிறாள். ஜெயமோகன் படைப்புகளில் இளம் நாயர் பெண்களும், தடாகமும் சந்தித்தால் விபரீதம்தான் விளைகின்றது. ஆசை ரப்பர் நாவலில் தன்னுடைய ஜாதி ஆதிக்கம் அல்லது குலத்துக்கு ஒரு நீதி அப்படியே தக்க வைக்கப்பட வேண்டும் என்பதுதான் ஜெயமோகன் விரும்புகிறார் என்பதே இந்த நாவலின் உடைய சொல்லப்படாத செய்தி ஆகும்.

கன்னியாகுமரி

இந்நாவலில் பிரவீணா நாவல் முழுக்க வருகிறாள். ஒரு குண்டூசியின் நுணி போல பளபளக்கிறாள். அவள் பேசும் சொற்கள் ஒவ்வொன்றிலும் அதே குண்டூசி நுனியின் கூர் ஜொலிக்கிறது. அவனை அறியாமல் அவன் மனதை முழுமையாக அறிகிறாள். வாத விவாதங்களில் அவனை வெல்ல வைப்பதாக விட்டுக்கொடுத்து ஒவ்வொரு கணத்திலும் அவனை அவள் வென்று வருகிறாள். வெறும் நடிகை. இவளை வெல்ல முடியவில்லையே என்று வெறுக்கிறான். வெறுப்பு தீவிர ஆணாதிக்க வெறியெழுந்து அவளையும் வெறுக்கிறான். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு முதல் 10 அத்தியாயங்களில் பதுங்கி பதுங்கி வரும் பிரவீணா கடைசி ஓவரில் பந்தைப் பறக்கவிடும் தோணி போல இறங்கி ஆடுகிறாள். பேயாட்டம்!. இந்த நபரை பற்றி ஜெயமோகன் ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார்

ஆண் பெண் இருவருடைய உளவியலிலும் இரு வகையான தீமைகள் அவர்களின் இயல்பிலேயே கலந்து உள்ளன. அவர்களின் ஆக்கத்திலேயே உறைபவை அவை. ஆணின் இயல்பான தீமையை கன்னியாகுமரி நாவலில் ஓரளவு சித்தரிக்க முயன்றிருக்கிறார். இந்த நாவலில் அவர் பெண்ணை மிக கேவலமாக சித்தரித்து இருக்கிறார் பெண்ணை தீமையின் உருவமாக சித்தரிக்கிறார் அடிமைத்தனமே இந்த நாவலின் உடைய மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது இது ஜெயமோகன் உடைய மனநிலையை தெளிவாக காட்டுகிறது என்பது தான் உண்மை.

விஷ்ணுபுரம்

இந்நாவலின் கடைசிப் பகுதி, கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. விஷ்ணுபுரத்தின் கோவில் இடிந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. நரோபாவின் திபேத்திய நூலிலிருந்து விஷ்ணுபுரத்தை பற்றி அறிந்து அதைத் தேடி வருகிறார் காசியைச் சேர்ந்த யோகவிரதர். பத்மாட்சி யட்சியும், கொன்றைவனத்தம்மனும் (சித்திரை), மகாபத்ம புராணமும் விஷ்ணுபுர மக்களின் வாழ்வில் கலந்துவிட்டிருக்கின்றன. எந்தப் புராணத்தை யார் இயற்றினார்கள் என்று பண்டிதர்கள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். வைதீக மரபின் காவலராக இருக்கும் ஆரியதத்தர் இறந்த பின் அவருடைய பைத்தியக்கார மகனுக்கு பட்டம் சூட்டுவதன் மூலம் விஷ்ணுபுர சர்வக்ஞப் பதவி ஒரு பைத்தியத்திடம் சென்று சேருகிறது. திருவடி மடத்தின் குருமகா சன்னிதானம் தன் சீடனுடன் மதுரைக்குப் போய் விடுகிறார். சில நூற்றாண்டுகளுக்கு முன் விஷ்ணுபுரத்தின் மீது படையெடுத்து வந்த முகமதியர்களுடன் சேர்ந்து, விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த சூத்திரர்களின் ஒரு பிரிவினரும், ஹரிதுங்கா மலையிலுள்ள பழங்குடியினரும் விஷ்ணுபுரக் கோவிலை இடித்து விடுகிறார்கள். ததாதகராகவும், விஷ்ணுவாகவும் அறியப்படும் விஷ்ணுபுரத்தின் மூலவிக்ரகம், தங்களுடைய பெருமூப்பனின் சிலை என்று நம்புகிறார்கள் பசுங்குன்றத்திலுள்ள (ஹரிதுங்கா) பழங்குடிகள். நாட்கள் செல்ல செல்ல, பிரளயத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. விஷ்ணுபுரத்தின் கோயிலைச் சுற்றி ஓடும் சோனா நதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன; எங்கிருந்தோ பறவைகள் வந்து கோவிலில் முட்டிச் சாகின்றன. பழங்குடிகளில் சிலர் மட்டும், குறத்தியான நீலி வழி காட்ட, பிழைக்கிறார்கள். குறத்தியான நீலி பேருருவம் கொண்டு சோனாவில் பெருவெள்ளமாக மாறி விஷ்ணுபுரத்தை அழிக்கிறாள். பெருமூப்பன் புரண்டு படுக்கிறார்.யுகம் முடிவுக்கு வந்தது. அடுத்த யுகம் தோன்றும்போது, விஷ்ணு மீண்டும் குழந்தையாக ஆலிலையில் மிதக்கிறார் என்று விஷ்ணுபுரக் கதையை சொல்லும் பாணன் பாடுகிறான்.

விஷ்ணுபுரம் நாவல் ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டது அந்த ஐதீகம் என்னவென்றால் ஒரு யுகத்துக்கு ஒரு தடவை விஷ்ணு புரண்டு படுப்பார் என்பதாகும் இந்த விஷ்ணுபுரம் கதையில் இஸ்லாமியர்கள் படையெடுத்து விஷ்ணுபுரத்தை அழிக்கிறார்கள். அதன் காரணமாக விஷ்ணு புரண்டு படுத்தார் என்ற அபத்தத்தை கதையாக கட்டமைத்து அதை ஒரு நாவலாக இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்திருக்கிறார்.

வெள்ளையானை 

 வெள்ளையானை என்ற நாவலில் பஞ்சத்தால் எப்படி ஒரு நாடு அழியும் என்று சொல்லியிருந்தால் அதை உண்மை என்று நம்பி இருப்போம் ஆனால் ஜெயமோகன் பஞ்சத்துக்கு காரணம் வெள்ளையர்களும் இங்கே இருக்கக்கூடிய தலித் சமூக கட்டமைப்பும் தான் காரணம் என்று சொன்னாள் இது இந்துத்துவம் அல்லாமல் வேறு என்ன என்று தான் நமக்கு கேட்க தோன்றும்.

இந்த நாவல் ஒளியூட்ட முயலும் இருண்ட தருணம், 1870 களின் இறுதியில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொடுமையான பஞ்சத்தின் கோர முகத்தையும், அந்த காலகட்டத்தில் மதராஸபட்டினத்தில் இருந்த ஐஸ்ஹவுஸ் என்னும் தொழிற்சாலையில் நிகழ்ந்த, அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினால் அவர்கள் வாழும் உரிமைக்காக நிகழ்த்திய ஒரு சிறிய ஆனால் ஒரு தீப்பொறியின் தருணத்தையும், அதிகார வர்க்கம் கைவிட்டு செத்தழிந்த பல இலட்சக்கணக்கான சாதாரண மக்களின் துயர தருணத்தையும். அந்த வரலாற்று நிகழ்வுகள், வரலாற்றின் இருண்ட பக்கங்கள், நாவல் ஆசிரியரின் புனைவினால் மேன்மையாக்கப்பட்டு நாவலாக நம் முன் விரிகிறது. நாவலின் பெரும்பகுதி ஏய்டன் பைர்ன் என்னும் பிரிட்டீஷ் காவல்துறை அதிகாரியின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. ஜாதிக் கலப்பு நடக்கின்ற போது அதனால் பஞ்சங்கள் வரலாம் பிரச்சினைகள் வரலாம் என்கின்ற ஒரு வன்மமான கருத்தை இந்த நாவல் மூலம் ஜெயமோகன் நிறுவுகிறார்

காடு

இந்த நாவலில் வயசான கிரிதரனின் , இளமைகால நினைவுகள் தான் இந்த நாவலே, மிளா, எனும் காட்டு மானின் கால் தடமும், கிரிதரன் புண்ணியம் என்கிற தன்னுடைய பெயரும், கல்வெட்டில் பார்க்கும் அந்த தருணம்,  நினைவுகள் விரிந்து, விரிந்து, தனது வாழ்வின் அத்தனை, உணர்சிகரமான நேரங்களும் கண்முன்னே தெரிகிறது. சதாசிவ மாமாவிடம், கல்வெர்ட்டு வேலைக்கு சேரும் இள வயது கிரிதரன் முதன் முதலில் காட்டிற்கு வருவதும், ரெசாலம்,சினேகம்மை, ரெஜினா , குட்டப்பன், குரிசு, என்று ஒரு நட்பான சுழல் அமைவதும்,  அயனிமரத்தடியில், அனைவரும் அமர்த்தும், பேசியும் நாட்களை நகர்த்துவதும், அய்யரின் அறிமுகம் மூலம், தத்துவம், சிந்தனை, இசை, கபிலன், காதல் என்று ரம்மியமான  தருணத்தில், மலை வாழ் பெண் நீலி யை முதலில் சந்திப்பதும், காதலா, வெறும் காமமா, என்று தடுமாற்றத்தில் நோய் காண்பதும், நீலியின் காட்டு மர குடிலின் முன் காத்துகிடப்பதும், உருகித் தவிப்பதும், எண்ணிலடங்கா வார்த்தைகள் பேச எண்ணி, ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அவளிடம் சொல்ல முடிவதுமான , மிகபெரிய உணர்ச்சி கொந்தளிப்பு நிலையில் இருக்கும் கிரிதரன் எந்த காலத்திற்குமான ஒரு இளைஞனின் பிரதிபலிப்பே. ஆனால் விஷமத்தனம் என்னவென்றால் இந்த கதையில் சொல்லப்படுகின்ற பழங்குடி சார்ந்த மக்கள் இந்த நாவலை நாவலில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் ஒரு இடத்தில் கடை வைத்து விளக்கக்கூடிய அல்லது மலைவாழ் மக்கள் போன்ற காணப்படக்கூடிய மக்களால்தான் காடு அழிந்து கொண்டிருக்கிறது என்ற நச்சுக் கருத்தை அவர் இந்த கதையின் உடை சொல்லியிருப்பார் அடிப்படையாகக் கொண்டுதான் பல ஜாதிகள் தமிழகத்தில் இருக்கின்றன இந்த ஜாதியினர் தான் இயற்கை வளங்கள் அழிகின்றனர் என்ற  நச்சுகருத்து தான்  நமக்கு ஜெயமோகனிடம் காண வேண்டிய முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது.

பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் கூட தத்துவ விசாரம் என்ற பெயரில் வரலாறு பேசுகிறேன் என்ற பெயரில் தன்னுடைய மடத்தனமான வாதங்களையும் மடத்தனமான தத்துவ அறிவையும் வழிகாட்டுகிறார் ஜெயமோகன் அதுமட்டுமல்லாமல் கம்யூனிசத்திற்கு மேல் அவருக்கு உள்ள வெறுப்பு அந்த நாவலை ஒரு பொறுப்பு நாவலாக காட்டுகிறது இந்த வெறுப்பு தான் அந்த நாவலின் உடைய முக்கிய பாடுபொருளாக இருக்கிறது .உதாரணமாக நாவலில் ஒரு இடத்தில் இப்படி வரும்.ஓரிடத்தில் கீதை,பைபிள்,குரான்,கம்யூநிஸ்ட் மேனிபெஸ்டோ ,ரிபப்ளிக் போன்ற நூல்கள் பலவற்றை அடுப்பில்வேக வைத்து சமைத்து பரிமாறுவார்கள்.அப்போது”அய்யோ ஒரே கசப்பாக இருக்கிறதே.சாப்பிடவே முடியவில்லையே.கொஞ்சம் தொட்டுக் கொள்ள மூலதனம் கிடைக்குமா?”

கம்யூனிஸ்ட் கட்சியால் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பேரழிவுகளைப் பற்றிப்பேசுவதோடு நாவல் நின்று விடவில்லை.கம்யூனிசம் மட்டுமே சித்தாந்தம் அல்ல.சோவியத்தில் மட்டுமேபேரழிவு நடக்கவும் இல்லை.மத அடிப்படை வாதம்,ஜிகாத்,சிலுவைப் போர்கள்,மதக் கலவரங்கள்,சீனாவிலும் ,சிங்களத்திலும் ஏற்பட்ட பேரழிவுகள்என்று மேலும் மேலும் விரிந்து கொண்டே போகிறது.எல்லா சித்தாந்தங்களும் அன்பின்,கருணையின் அடிப்படையில் மனித குல மேம் பாட்டுக்காக உருவானவையே.ஆனால் எல்லா மானுட துயரங்களும் சித்தாந்தங்களால் ஏற்படுத்தப் பட்டவையே. இப்படி பேசுவது ஜெயமோகன் உடைய முட்டாள்தனமே அன்றி வேறொன்றுமில்லை. கம்யூனிச கருப்பு தான் அவருடைய நாவலில் அடிநாதமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் தேவையே இல்லாமல் இஸ்லாமியர்கள் குறித்த பல விமர்சனங்கள் இந்த நாவலில் இருக்கிறது இஸ்லாமியரை பிடித்து ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு சம்பவம் இல்லாதபோது தேவை இல்லாமல் அவர் இஸ்லாமிய இறை நம்பிக்கை அதனுடைய நோக்கம் என்னவென்று பார்த்தால் அது அவரின் ஆழ்மனதில் இருக்கின்ற இந்துத்துவாவை அன்றி வேறொன்றுமில்லை.

நாவலின் இறுதியில் அருணாசலம் தன் மனைவி நாகம்மையால் மீட்டெடுக்கப் படுகிறான்.ஒரு ஆலயத்தில் ஆவுடை தரிசனத்தில் அவனுக்கு தெளிவு பிறக்கிறது.அவனே சமஸ்தாபராதபூஜைக்கு ஏற்பாடு செய்கிறான்.அதில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிஅனுதாபிகள் கலந்து கொள்கின்றனர்.கெ.கெ.எம்.முழு கிருஷ்ண பக்தர் ஆகிறார்.புகாரினுக்குஒரு வகை கிறிஸ்து மீட்பு கிடைக்கிறது.ஆக எந்த ஆன்மீகத்தை கம்யூனிசம் காலமெல்லாம்எதிர்த்து வந்ததோ அந்த ஆன்மீகத்தை கலந்தால்  கம்யூனிசம் இன்னும் கூட மானுட மேன்மைக்குபயன் பட முடியும் என்ற தொனியுடன் நாவல் முடிகிறது.

கொற்றவை

இந்நாவலில் சிலப்பதிகாரத்தின் விருத்தியுரை போலக் கொற்றவையின் கதையைப் புனையும் ஜெயமோகன் இளங்கோவடிகள் கூறும் வரிசையில் பெருமளவு மாற்றமின்றி நிகழ்வுகளை அடுக்கியுள்ளார். என்ற போதிலும் சொல் முறையிலும் எழுப்பும் உணர்வுகளிலும் அவருக்கென ஒரு நோக்கம் இருக்கிறது என்பதும் ஓரளவு புலப்படத்தான் செய்கிறது. முதல் பகுதியில் ஏற்படும் திசைக் குழப்பம் நிறுத்தப்பட்டு, சொல்லப்போகும் கதை, இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் கதை தான் என்ற தெளிவு உண்டாக்கப்படுகிறது. இத்தெளிவுக்குப் பின் வாசகர்களின் பயணம்  கதைசொல்லியுடன் இணைந்தே செல்கிறது. இரண்டாவது பகுதியில் சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டமும், மூன்றாவது பகுதியில் மதுரைக் காண்டமும், நான்காவது பகுதியில் வஞ்சிக் காண்டமும் விரிக்கப்படுகிறது. இந்த விவரிப்பு அப்படியே இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் காப்பியம் சொல்லும் கதை நிகழ்வுகளையும் முரண்களையும் , அவற்றின் வழியே எழுப்பப் பட்ட உணர்வுகளையும், வாசகனுக்குக் கடத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டதல்ல என்பது கவனமான வாசிப்பில் மட்டுமே வெளிப்படும் ஒன்று. அதே சமயம் பௌத்த காப்பியமாக அறியப்படுகின்ற சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் ஒரே கதையை மாற்றி அது பவுத்த காப்பியம் அல்ல அது தமிழகத்தில் இருக்கக்கூடிய நாட்டார் கதை தான் அதாவது இந்து கதைதான் என்கின்ற அடிப்படையில் அதை காப்பியமாக மாற்றி வருகிறார். ஜெயமோகன் அவருக்கு பவுத்தத்தின் மேலுள்ள அந்த வெறுப்பு இந்துத்துவம் சார்ந்த தீர்ப்பு இவை இதை நாவலாக உருவாக்கி இருக்கிறது.

ஏழாம் உலகம்

ஏழாம் உலகத்தில் அடித்து நொறுக்கப்பட்டு, முடக்கப்பட்ட காயங்களுடன், பேசா மடந்தைகளாக சமூகத்தின் அடித் தட்டிற்கும் கீழே மனிதர்களாகவே பாவிக்கப்படாத  பாவப் பட்டவர்களாக  தன் மீதே கூட தான் உரிமை கொண்டாட முடியாத  அவல மனிதர்களிடையே வாழ்ந்த வலியை உணர முடிந்தது. இதில் கொடுமையின் உச்சம் அவர்களைச் சுற்றியிருக்கும் வியாபாரிகள் செய்யும் குரூரங்கள் கூட இல்லை. இந்தக் குரூரத்திற்குப் பலியாகும் இம்மனிதர்கள்  அவர்களது கதியே அதுதான் என்று ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை தொக்கி நிற்கும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடத்தி வருவதுதான். அவர்களது மனதில் வன்மம் என்ற ஒரு உணர்வே இல்லாததுபோல் மரத்துப்போய் இருப்பதுதான் நெஞ்சை அறுக்கிறது.
ஒவ்வொரு முறையும் அவர்களை நாம் தாண்டிப் போவோம். காசு போட்டு – சில சமயம் முகம் திருப்பிக்கொண்டு – அவர்களது “அம்மாவாக”வும் “அய்யா சாமியாக”வும் நம் புலன்களால் புறக்கணிக்கப்பட்டு.
கசாப்புக் கடைக்காரன் இறைச்சியைத் துண்டு போடும் போது சலனமற்ற அந்த முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா?அவனுக்கு ஆடுகளும், புல்லும் ஒன்றுதான். ஆடுகளைக் கொல்லும்போதும் அறுக்கும் போதும் அது அவன் மனதில் எவ்விதச் சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவற்றை அவன் உயிருள்ள பிராணியாகவே பாவிப்பதில்லை. அன்பு பாராட்டுவதில்லை. வாளை இறக்கியதும் துண்டான தலை தனியே கிடக்க, உடல் தள்ளாடித் தள்ளாடி விழுந்து துடித்து ஓயும். ரத்தம் பீறிட்டு அடிக்கும். அவன் அதைப் பாத்திரத்தில் பிடித்து, தோலுரித்து கூறுபோட்டு கம்பியில் தொங்கவிடும் அனைத்துச் செயல்களும் இயந்திர கதியாக இருக்குமேயொழிய எந்தவித உணர்வுகளுக்கும் அவற்றில் இடமில்லை. ஆனால் வீட்டுக்குள் அவன் ஒரு மனிதன். அவனுக்கும் பாசம், நேசம், குடும்பம், குழந்தைகள் என்று உண்டு. காமம் உண்டு; காதல் உண்டு; கூடலும் ஊடலும் உண்டு. பிள்ளைகள் தூங்கும்போது பார்த்து நெகிழும் இதயம் உண்டு. வலி உண்டு. ஆனால் வாசல்படி தாண்டி விட்டால் அவன் வேறு மனிதன். கோழியின் படபடக்கும் இறக்கைகளைச் சட்டை செய்யாது கழுத்தைத் திருகிக் கொல்லும்போது அது குழம்பாகவோ கறியாகவோ காசாகவோ அவன் மனதில் மாறிக் கொண்டேயிருக்குமே தவிர உயிர் வதையோ வலியோ அல்ல. இந்த நுட்பமான மனநிலையை அற்புதமாக பண்டாரம் என்ற பாத்திரத்தின் மூலம் ஏழாம் உலகத்தில் விவரித்திருக்கிறார் ஜெயமோகன்.அங்கஹீன மனிதர்களைப் பிச்சையெடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் அந்தப் பண்டாரத்தை ஒரு விதத்தில் என்னால் கசாப்புக் கடைக்காரனோடு ஒப்பு நோக்க முடிகிறது. 

அருவருப்பு என்று நாம் புறந்தள்ளும்; ஒதுக்கும் ஒரு சமூகத்தின் அவலத்தை – எடுப்புக் கக்கூஸில் அமர்ந்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு காரியத்தை முடித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் – பார்க்க மறுத்து – ஓடி வருவதுபோல, பாதாளத்தில் வாழும் பாவப்பட்ட ஜென்மங்களை மறுத்துக்கொண்டே வாழும் இச்சமூகத்தில் வாழ்வதையே அருவருப்பான செயலாக உணர வைத்திருப்பது கியமான ஒன்றாகும் ஜெயமோகன் இந்த நாவல் வழியை சொல்லுவது இந்த சமூகம் அருவருப்பும் அசிங்கமும் உடைய மக்களால் உடையது கூட ஆகவே அவர்களை அடிமைகளாக வியாபாரப் பொருளாக பார்த்ததும் தவறு ஏதுமில்லை . மனிதன் என்பவன் ஆதிக்கமும்,அடிமைதனமும் நிறைந்தவன்.குலத்துக்கு ஒரு நீதி சரிதான் என்ற  அடிப்படையில் இந்த நாவலௌ படைத்திருக்கிறார் இதுதான் அவருடைய விஷமத்தனம் என்று நான் கருதுகிறேன்.

அனல்காற்று

ஒரு திருமணம் நோக்கி காத்திருக்கும் இளைஞனின், ஆண் தலைமை இல்லாத ஒரு பெண்ணால் வளர்க்கபட்ட ஆணின் மனம் பற்றி எழுதிய விதம்.Possesivness பற்றி அதிலும் தாயின்,மனைவியின் நிலைப்பாட்டை மாறி மாறி எடுக்கும் சந்திரவின் மனம்,

புத்துணர்வின் வடிவாய் சுசி,இளமை,புரிதலுணர்வுடன் ஒரு கனவுத் தோழி.கட்டும் ஒழுக்கத்தில்,உணர்வின் உண்மையின் நெருப்பில்,காதலின் தேவையின் நடுவில், முன்று பெண்களின் நடுவே அருண்..சுசி ஆயிரம் அன்னனகளுக்கு சமம் என்று அருண் சொல்லும் இடத்தில் மேலே படிக்க இயலாமல் சிறிது நேரம் தவித்தேன்….எல்லா பெண்களும் பிறக்கும்போதே தாயாய் பிறக்கிறார்கள் என்று மற்றுமொரு இடமும்….இதே நிகழந்தது….நடுத்தர வீட்டில் வீட்டார் இடத்தை தேடுவதும், விருந்தினர் பொருள்களில் சிக்கிக் கொள்வதும் யோசித்துப் பார்க்கையில் எவ்வளவு உண்மை என்றே தோன்றுகிறது…இப்படி பல இடங்கள்….

காமத்தில்தான் ஒருவன் தன்னிலை இழந்து நிற்க முடிகிறது. அது தெய்வநிலைக்கு மிக அருகில். அந்த அனுபவம் சில நொடிகளின் விரிவு. அந்த தவறவிட்ட அவ்வனுபவக் க்ஷணங்களுக்காகவே மனிதருக்கு காமம் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறது. காமத்தின் ஒரு கணத்திலும் நாம் இருப்பதில்லை. காமத்தில் நாம் தன்னிலைமுதற்கொண்டு அனைத்தையும் இழந்துவிடுகிறோம். காமமெனும் முடிவிலாப்போரில் வெல்வதல்ல இலக்கு ஒருவரிடம் ஒருவர் தோற்றுவிடுவதையே விரும்புவதாகப்படுகிறது.  ஆனால் வெற்றி/தோல்வி மனநிலையில் நிகழ்த்தப்படும் காமத்தில் நீங்கள் சொன்ன அத்தனையும் சாத்தியமே. ஆனால் அது காமத்தை ஒரு சாதாரண உடலனுபவமாக மாற்றிவிடும் சிந்தனை உடையதாகப்படுகிறது. தோற்கத்தயாராக இருக்கும் காமத்தின் நிகழ்வுக்குப்பின் வெளிப்படும் உவகையும், சிரிப்பும், மகிழ்ச்சியும் வெற்றி/தோல்வி மனநிலையில் நிகழ்த்தப்படும் காமத்தில் இருப்பதில்லை. அது ஒரு அகங்காரவெளிப்பாடாக மட்டுமே இருக்கமுடியும்.
 
காமத்தின் உச்சத்தில் நம் அகங்காரம் மட்டுமே மலைச்சிகரநுனி மீது தன்னந்தனிமையில் நிற்கக் காண்கிறோம் . இந்தவரிகளின்மீது எனக்கு ஒப்புதல் உண்டு. ஆண்களின் காமத்தில் அகங்காரம் நுழைந்தபொழுதே, பருவங்களை மதியாது உறவுகொள்ளும் பழக்கம் தொடங்கியது என்று நம்பும் வகை நான். ஆனால் குற்றவுணர்ச்சியில்லாது நிகழும் காமத்தில் அகங்காரம் காணப்படுவதில்லை. அது இருத்தலின் நிகழ்வாக மட்டுமே நிகழ்ந்துவிடுகிறது.

பெண்ணை போகப்பொருளாக பார்க்க வேண்டும் என்கின்ற அந்த ஆணாதிக்க கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதே இந்த நாவலின்  சொல்லப்படாத செய்தியாக இருக்கிறது.

கன்னி நிலம்

மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை தான் இந்த நாவல். 

நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ முகாமுக்கு திரும்புகின்றனர். அதனைத் தொடர்ந்து ராணுவத்திற்கும், அப்போராட்டக்குழுவிற்கும் சமரசப் பேச்சுவார்த்தை நடக்கிறது. ராணுவ வீரர்களை விடுவிக்கக் கோருகிறது ராணுவம். ஜ்வாலாமுகியை விடுவிக்க போராளிகள் கோருகிறார்கள்.

இதற்கிடையில் அப்பெண்ணை விசாரிக்கும் நெல்லையப்பன் அவள் ஏதோ ஒரு விதத்தில் அக்குழுவிற்கு முக்கியமானவள் என்றும் அதனால் தான் இத்தனை தூரம் அவர்கள் அவளை மீட்க முயலுகிறார்கள் எனவும் நினைக்கிறான். அதனால் அவள் பற்றிய தகவல்களை ராணுவத் தலைமையகத்திற்கு அனுப்ப உத்தரவிடுகிறான். அவள் பெயர் ஜ்வாலாமுகி என்றும், அவள் அப்போராளிக்குழுத் தலைவரின் மகள் என்பதும் தெரிய வருகிறது. அத்தோடு அவளை உயிருடன் ராணுவத்தலைமையகம் கொண்டுவருமாறும் உத்தரவிடப்படுகிறது.

இந்நிலையில் போராளிக்குழுவால் கைது செய்யப்பட்ட‌ ராணுவ வீரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டது தெரிகிறது. அதனைத் தொடர்ந்து போராளிக்குழு ராணுவ முகாமைத் தாக்க திட்டமிடுகிறது. அதனை அறியும் நெல்லையப்பன் ராணுவத்தலைமையகத்துக்கு உடனடியாக‌ தகவல் தெரிவிக்க உத்தரவிடுகிறான். அச்சமயத்தின் புயல் காரணமாக உடனடியாக அதனை செய்ய முடியவில்லை.

அவர்கள் ராணுவ முகாமைத் தாக்குகிறார்கள். அவர்கள் எண்ணிக்கை பல்ம‌டங்கு இருப்பதை அறியும் நெல்லையப்பன் இருக்கும் ராணுவத்தையும் ஆயுதங்களையும் கொண்டு முடிந்தவரை போரிடுகிறான். போராளிக்குழுவின் கை ஓங்குகிறது. ஒருகட்டத்தில் இதற்கு மேலும் போரிட முடியாது என உணரும் நெல்லையப்பன் ஜ்வாலாமுகியோடு தப்பியோடுகிறான். அவளை எப்படியாவது ராணுவத்தலைமையிடம் கொண்டு சேர்த்துவிட நினைக்கிறான்.

காட்டுக்குள் தப்பியோடும் நெல் ஒரு கட்டத்தில் ஜ்வாலாமுகியோடு நெருக்கமாகிறான். அதனைத் தொடர்ந்து காதலிக்கும் இருவரும் இருபக்கமும் சேராமல் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் நடுவில் இருக்கும் நோ மென்ஸ் லேண்டில் வாழ விரைகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் நிலையில் ராணுவத்திற்கு துரோகம் செய்து காட்டிக்கொடுத்துவிட்டதாக எண்ணும் ராணுவம் இருவரையும் கைது செய்கிறது. நெல் துன்புறுத்தப்படுகிறான். நெல்லையப்பனின் விளக்கங்கள் ஏற்கப்படவில்லை. இதற்கிடையில் ஜ்வாலாமுகி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறாள்.

பின்னர் ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து தப்பிக்கும் நெல் ஜ்வாலாமுகியோடு போய் சேர்கிறான். இருவரும் மீண்டும் நோ மென்ஸ் லேண்டுக்கு செல்கிறார்கள். வாழ்க்கை தொடங்குகிறது.

இந்த நாவலிலும் ஜெயமோகன் உடைய விஷமத்தனத்தை கக்கியிருக்கிறார் என்னவென்று பார்த்தால் போராளிக் குழுவின் உடைய மகளை தவறாக சித்தரிப்பதும் மூலமாக போராளிகள் அனைவரும் மோசமாக தான் இருப்பார்கள் என்று சொல்லுவதன் வாயிலாக அவருடைய கம்யூனிச எதிர்ப்பு பெண் எதிர்ப்பும் சேர்ந்து செயல்பட்டு இந்த நபராக உருவாகி வந்திருக்கிறது.

.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...