Wednesday, March 30, 2016

குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்

 Image result for குணங்குடி
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்கையைத் துறந்து ஆன்மிகத் தேடலில் தன்னை இணைத்துக் கொண்டவர். இஸ்லாம் சமயத்துக்குப் பல பாடல்களை விட்டுச் சென்றவர் குணங்குடி மஸ்தான் சாகிப்.ராமநாதபுரம் மாவட்டம் குணங்குடி என்ற சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர். பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். குணங்குடி மஸ்தான் சாகிப்பின் காலம் கிபி 1788 – 1835க்கு இடைப்பட்டது. அவருடைய தாய்மாமன் புதல்வி மைமூனை மணமுடிக்கக் குடும்பத்தார் கோரிக்கை வைத்த போது, அதை நிராகரித்து விட்டு 17ஆம் வயதில் குடும்பத்தைத் துறந்தார்.

இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீகாவின் செயக்ப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் மார்க்கக் கல்வி பெற்றார். திரிசிரபுரத்து ஆலிம் மௌலவி ஷாம் சாகிபுவிடம் தீட்சைபெற்றார். தொண்டி மரைக்காயர் தோப்பில் யோக நிஷ்டையிலும் ஆழ்ந்தார். சிக்கந்தர் மலைக்குகையில் சிராசனம் இருந்தார். பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இறைக்காதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகத்தில் நாட்டம் கொண்டவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கிப் பித்தநடை கொண்டார்.குப்பை மேடுகள்கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்த நடையையும் அற்புதச் சித்துகளையும் கண்ட மக்கள் அவரை ‘மஸ்தான்' என அழைத்தனர். அப்பெயரே பின்னர் அவருக்கு நிலைத்தது. இவர் சென்னையில் வாழ்ந்த தொண்டியார் பேட்டை என்ற இடம்தான் பிற்காலத்தில் தண்டையார்பேட்டையானது. ராயபுரத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது.

குணங்குடியார் இஸ்லாமியச் சூபி ஞானியாக அறியப்பட்டாலும்கூட அவரது சீடர்களாக இருந்த பலரும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களே என்பதில் இருந்து இந்து - இஸ்லாமிய பாரம்பரிய உறவை அறிய முடிகிறது. குணங்குடி மஸ்தான் சாகிப் எழுதிய 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களும் முக்கியமானவை. முகியத்தீன்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. இஸ்லாமியச் சமயத்தை நடைமுறைப்படுத்திய முகமது நபி பற்றிய பாடல்கள் முக்கியமானவை. 

இதேபோல அகத்தீசன் சதகமும் 100 பாடல்களைக் கொண்டது. குருவருள் நிலை தவ நிலை, துறவு நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை வேண்டி உருவான மனத்தின் பதிவுகளாக இப்பாடல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முகமது நபியாண்டவரை சுகானுபவமுற துதித்தல், தவமே பெறவேண்டுமெனல், குறையிரங்கி உரைத்தல் வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல், ஆனந்தக் களிப்பு பாடல் பகுதிகளும் இவரது பாடல்களில் அடக்கம். 

குணங்குடியார், அவருக்கென்றே வளர்ந்த தாய்மாமன் மகளை மணம் செய்ய மறுத்துப் போனார். அப்துல் ரகுமான் ’அமுதத்துக்கு ஆசை கொண்ட மனம் அற்ப மதுவை அருவருத்தது’ என்கிறார்.
தனது 17-ஆவது வயதில் ஞானபூமியான கீழக்கரையில், தைக்கா சாகிபு என்றழைக்கப்பட்ட சய்கப்துல் காதிர் லெப்பை ஆலிம் என்னும் ஞானியிடம் மாணாக்கராக இருந்து 1813-இல் முற்றும் துறந்தவராகிறார்.
திரிசிரபுரம் மெளலவி ஷாம் சாகிபிடம் தீட்சை. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையில் 40 நாட்கள் யோக சிஷ்டை. அறந்தாங்கி அருகே கலகம் எனும் ஊரில் மோதம், தொண்டியில் தாய்மாமன் அடங்கிய வாழைத்தோப்பில் 4 மாதம் நிஷ்டை. சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை, நதிக்கரைகள் எனத் தவம். உணவு, சருகு, கிழங்கு, காய், கனி. குப்பை மேடுகளில் குடியிருப்பு. பித்த நடையும் அற்புத சித்துகளும்.

பாரசீக மொழியில் மஸ்த் எனும் சொல்லுக்கு போதை, வெறி எனும் பொருள். கொண்ட கொள்கையில் வெறியாகப் பற்றுதியுடன் இருந்தார். மக்கள் அவரை மஸ்தான் என்றழைத்தனர். ஏழு ஆண்டுகள் வடநாடு பயணம் செய்து ஞானோபதேசம் செய்திருக்கிறார். சென்னை திரும்பியவருக்கு ராயபுரத்தில் பாவா லெப்பை ‘தைக்கா’ (ஆசிரமம்) அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒன்றர ஆண்டுகள் அங்கே அவர் யோக நிட்டை புரிந்திருக்கிறார்கள்.
சின்னாட்கள் வெளிப்பட்டும் சின்னாட்கள் மறைந்து அடங்கி யோகம் புரிந்தும் வாழ்ந்தபோது நச்சரவங்கள் தீங்கு செய்யாமல் திருந்தன. அவர் சீடர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் இருந்தனர். மஸ்தானிடம் தீட்சை பெற்றவர்களில் ஒருவர் ஆற்காடு நவாப் என்றும் ‘அட்டமா சித்து வல்ல குணங்குடியார் புரிந்த ஒன்பதாவது சித்து இது’ என்றும் கூறுகிறார் அப்துல் ரகுமான். மேலும் அவர் கூறுவது “தாம் சார்ந்திருந்த ‘காதிரிய்யா’ நெறி மரபுப்படி, அந்நெறித்தலைவர், அவருடைய ஞானகுரு முகியித்தீன் ஆண்டவர் பேரில் ‘பாத்திஹா’ (நேர்ச்சைப் படையல்) செய்து வந்தார்.”

பன்னிரண்டு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்த குணங்குடியாரை, இஸ்லாமியர் ஆரிபுபில்லா (இறை ஞானி), ஒலியுல்லா (இறையன்பர்) எனவும், இந்துக்கள் ‘சுவாமி’ என்றும் அழைத்திருக்கிறார்கள்.
1838-ஆம் ஆண்டு தனது 47-வது வயதில் பரிபூரணம் பெற்றவரை தங்கிய இடத்திலேயே நல்லடக்கம் (தறுகா) செய்திருக்கிறார்கள். தொண்டியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைத் தொண்டியார் என்று அழைத்தத்தால் அவர் வாழ்ந்த இடம் தொண்டியார் பேட்டை – தொண்டையார் பேட்டை ஆயிற்று என்பர்.

பேராசிரியர் அப்துல் ரகுமான் மேலும் தரும் குறிப்புகள் சுவாரசியமானவை. சுஃப் எனும் அரபுச்சொல்லுக்கு கம்பளி என்று பொருள், சூஃபித் துறவிகள் முரட்டுக் கம்பளி ஆடைகள் அணிந்தனர் என்கிறார். சித்தர் மரபு, இறைவனை வாலை, மனோன்மணி என்றனர். சூஃபிகள் இறைவனை நாயகியாகப் பாவித்தனர்.
‘சமய மெல்லாம் சக்தியுண்டு சிவமும் உண்டு
சண்டாளர் பிரித்தல்லோ தள்ளினார்கள்’
என்ற கைலாயக் கம்பளிச்சட்டை முனிவர் பாடலை மேற்கோள் காட்டும் அப்துல் ரகுமான் சிவம் – சக்தி எனும் (Matter – Energy) சொற்களை புராணச் சொற்களாக அன்றி யோக பரிபாஷைச் சொற்களாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்,
குணங்குடியார் பயன்படுத்தும் துவள மணிமார்பன், அளகேசன், காலன், சனீஸ்வரன், இந்திரன் சொற்களையும் அவ்விதமே புரிந்து கொள்ள வேண்டும்.
‘மேலூரு வீதியில் வையாளி போட்டங்கு
விளையாட அருள் புரியவும்’

என குணங்குடியார் பாடிய மேலூர் மதுரைக்கு அருகிலிருக்கும் மேலும் எனப்புரிந்து கொள்வது அபத்தமானது என்கிறார் அப்துல் ரகுமான்.
பல் மதத்தவரும் குணங்குடியார் மீது பக்தி கொண்டு ஒழுகி இருக்கிறார்கள். சித்தர் மரபின் சூஃபி ஞானியான மஸ்தான் சாகிபுவை, மகாவித்வான் திருத்தணிகை சரவணவப் பெருமாள் ஐயர் பாடிய நான்மணி மாலையில்,
‘குருவாய் அடுத்தோர்க்கு அருள் சுரக்கும்
கோதில் குணஞ்சேர் குணங்குடியா’
என்கிறார்.
வேங்கடராயப் பிள்ளைக் கவிராயர் பாடிய அறுசீர்க்கழிநெடியடி ஆசிரிய விருத்தத் தோத்திரப்பா –
‘சொந்த மிலையோ பன்னாளும்
தொழுத திலையோ அடிமையெனும்
பந்த மிலையோ பிள்ளைகளைப்
படைத்த திலையோ வருந்துமவர்
சிந்தை யறியும் செயலிலையோ’
என இரங்குகிறார்.

குணங்குடியாரின் ‘முகியித்தீன் சதகம்’, ‘அகத்தீசன் சதகம்’, ‘பராபரக் கண்ணி’, ‘எக்காலக் கண்ணி’, ‘மனோன்மணிக் கண்ணி’ பிற கீர்த்தனைகள் யாவும் புகழ் பெற்றவை.
முகியித்தீன் சதகத்தில்,
‘நீக்கமற எங்கெங்கும் நின்றுநிறை கின்றபொருள்
நேரில் என் முன்னிற்கவே……
போக்குவரவு அற்ற பரிபூரண ஆனந்தமெப்
போதும் என் முன்னிற்கவே’
என்று இரங்குகிற குணங்குடியார்.
அகத்தீசன் சதகத்தில்,
‘கொள்ளிவைத்து உடலைக் கொளுத்துமுன் முச்சுடர்க்
கொள்ளிவைத் தருள் புரியவும்’
என்று வேண்டுகிறார். முச்சுடர்க் கொள்ளி என்பது யோகக்கனல்.
பராபரக்கண்ணி மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டது. இரண்டு இரண்டடிகள் கொண்டது.

சமயங்களைக் கடந்த மதங்களைக் கடந்த பாடல்களைக் கொண்டது குணங்குடி மஸ்தான் பாடல்கள். தாயுமானவர் பாடல்கள் போல் பெரும் சிறப்புக்குறியன. ஏறத்தாழ ஒத்தக் கருத்தினை கொண்டவை. சரவணப் பெருமாள் ஐயர், ஐயா சுவாமி முதலியார், வேங்கடராயப்பிள்ளைக் கவிராயர் சபாபதி முதலியார், மற்றும் செய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர் போன்றவர்களால் புகழ் மாலைப் பாடப்பெற்ற சிறப்பு திரு குணங்குடி மஸ்தான் பாடல்களுக்கு உண்டு.
இவர்களின் சில பாடல்கள்:
அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.
எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்… அந்த பேரின்பைதை தந்திடுவாய்.
ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.
ஆதியானவனே… ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே
வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே
வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள்யாருள்ளார் பராபரமே
அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே
அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும்மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே.
நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே
நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே.
 

குணங்குடியாரின் தத்துவம் இது தான்.
வஹ்த்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று  அல்லாஹ் மாத்திமே இருக்கின்றான். படைப்புகள் என்பது சுயமான உள்மை அற்றது என்பதை​ மறுப்பவர்கள் இதை சிந்தித்துப்பாருங்கள்.

அல்லாஹ் தஆலாவின் தன்மைகள்திருநாமங்கள் அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உருவானவை அல்ல. அவனது தன்மைகளும் திருநாமங்களும் மாற்றமடைவதில்லை.. அவன் படைப்புகளை படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்த பின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான். என்பதுதான் சரியான நம்பிக்கை.
அவ்வாறாயின் அல்குர்ஆனில் அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

{وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ [الحديد: 4

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (57-04)

என்று கூறுகின்றான்.

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளுடன் “உடன் இருத்தல்” எனும் தன்மை அல்லாஹ்வுக்கு புதிதாக ஏற்பட்ட ஒரு தன்மையாக இருக்க முடியாது. அது அல்லாஹ்வின் பூர்வீகமான தன்மையாகவே இருக்கவேண்டும். படைப்புகளை படைத்தபின் அவைகளுடன் அல்லாஹ் இருப்பது பற்றி பிரச்சினை இல்லை. படைப்புகளை படைக்க முன், படைப்புகளே இல்லாதபோது அவைகளுடன் அல்லாஹ் இருப்பது எவ்வாறு? என்பதை சிந்திய்யுங்கள்.

படைப்புகளை படைக்க முன் அவை அல்லாஹ்வின் தாத் எனும் உள்ளமையிலேயே இருந்தன. அப்போது அவற்றுக்கு தனியான தோற்றம் இருக்கவில்லை அந்தநேரத்தில் அவை அல்லாஹ்வுடனேயே இருந்தன. படைப்புகளைப் படைத்தபின் அவற்றுக்கு தனியான தோற்றம் உருவானது. ஆயினும் அவை அல்லாஹ்வை விட்டு பிரியவுமில்லை. அல்லாஹ் அவற்றை விட்டு  பிரியவுமில்லை. எப்போதும் “நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்”அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச் சமீபமாக இருக்கின்றான். அவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச் சமீபமாக இருக்கின்றான்.

கலிமாவின் அர்த்தம் என்ன?

 Image result for la elah ela allah
 
1) லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு, அது தரும் தெளிவான நேரடி அர்த்தத்தை எடுக்கவேண்டுமா!
அல்லது அதற்கு வலிந்துரைகள் வைத்து வேறு சொற்களைப்புகுத்தி அர்த்தம் எடுக்கவேண்டுமா! அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் என்பது முஹ்கமான வசனமா! முதஷாபிஹ் ஆன வசனமா?
இஸ்லாத்தின் மூலமந்திரம் நிச்சயமாக முஹ்கமான வசனமாக - தெளிவான வாக்கியமாகத்தான் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
2) "I went to shop" - இவ்வாங்கில வசனத்தின் அர்த்தம்,'நான் கடைக்குப்போனேன் என்பதாகும். ஆனால் மேற்படிவசனத்துக்கு "நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப்போனேன்" என்று மொழிபெயர்ப்பது சரியான மொழிபெயர்ப்பாகுமா!!! அதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்களா!
அதுபோன்றுதான் இருக்கிறது லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு நீங்கள் தந்திருக்கும் மொழிபெயர்ப்பு!

லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு அதன் அர்த்தம் அல்லாத வேறு ஒன்றை அர்த்தமாக நம்பிக்கொண்டிருப்பதால் முஸ்லிம் என்ற வட்டத்துக்குள்ளேயே வரமுடியாதல்லவா?
3) லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வசனத்தில்,
"லா" - இல்லை, 
"இலாஹ" – தெய்வம் / சாமி / கடவுள்
"இல்லா" – தவிர / அல்லாத / வேறான
அல்லாஹ்" - அல்லாஹ்.

இதுதான் இச்சொற்களின் நேரடி அர்த்தம். இச்சொற்களுக்கிடையே "வணக்கத்துக்குரிய" என்ற சொல் எங்கே இருக்கிறது ?

(لا) லா – (ஹர்புன் நபிஃ) (deny - மறுதலிக்கும் உருபு),
(إله) இலாஹ - (இஸ்ம்-முப்ததா) (எழுவாய்,)
(إلا) இல்லா – (இஸ்தித்னா) பயனிலை (ஹபர்),
(الله) அல்லாஹ் – நீக்கம் செய்யப்பட்ட செயப்படு பொருள் (முஸ்தித்னா),
இச்சொற்களுக்கிடையே "வணக்கத்துக்குரிய" (முஸ்தஹிக்குன் லில் இபாதத்தி) என்ற பெயர் உரிச்சொல் (adjective) எங்கே இருக்கிறது ?
இல்லாத சொல்லை என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இடைப் புகுத்திச் சொல்கின்றீர்கள்.!
4) திருக்கலிமாவானது அல்லாஹ்வுக்கு "எந்தவிதத்திலும்" கூட்டு இல்லவே இல்லை Absolute negation என்று பறை சாற்ற வந்ததா?
அல்லது ஒரு சில விடயங்களில் மட்டும் தான் கூட்டு இல்லை அதாவது "வணக்கத்துக்குரியவன்" என்பதில் மட்டும் தான் கூட்டு இல்லை என்று மட்டும் பறை சாற்றவந்ததா?
5) உங்களுக்கும் தெரியும் "லா ஷரீக்க லஹூ" எனும் வசனம்
"அவனுக்கு எந்தவொரு கூட்டும் இல்லவே இல்லை" என்பதைக் குறிக்கிறது.
"வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை" என்பது இஸ்லாமிய தத்துவங்களில் ஒன்று. அது லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் அர்த்தமல்ல.
நீங்கள் சொல்லும் கலிமாவின் அர்த்தப்படி "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை" என்று வைத்துக் கொண்டால், வணக்கத்துக்குரியவன் என்ற விடயத்தில்தான் அல்லாஹுவுடன் கூட்டு இல்லை. வேறு விடயங்களில் கூட்டு இருக்கலாம் என்ற இணைகற்பிக்கும் கருத்து உங்கள் கலிமாவின் அர்த்தத்தில் இருப்பதை காணலாம். இதை பூரண தவ்ஹீத் (ஒருமைப்படுத்தல்) என்று எவ்வாறு சொல்ல முடியும்!!
"வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை" என்பதுதான் கலிமாவின் அர்த்தம் என்று பார்த்தால்,
உணவளிப்பதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு!!! பாதுகாவல் வழங்குவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு! ஆக்குவதற்குரியவன், அழிப்பதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் உண்டு!! போன்ற அர்த்தங்கள் நீங்கள் கலிமாவுக்குக் கூறும் கருத்தில் தொக்கி நிற்கும் விபரீதத்தை உணரவில்லையா?.....
ஆனால் கலிமா வந்ததன் நோக்கம் என்ன! அல்லாஹ்வுடன் எந்த விதமான கூட்டும் அறவே இல்லை, அல்லாஹ்வுக்கு வேறாக ஒன்றுமே இல்லை, அவன் என்றென்றும் தனித்தவன் என்பதுதானே.!!!!
6) வணக்கத்துக்குத் தகுதியான நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை என்றால் வணக்கத்துக்கு தகுதியில்லாத நாயன் அல்லாஹ்வைத் தவிர இருக்கின்றது என்ற கருத்து அதற்குள் இருப்பதை அவதானித்தீரா! இப்படி சொல்வது எங்கணம் பூரண தவ்ஹீத் ஆகும்? இரண்டு உண்டு என்னும் "கூட்டு / இணை" எங்கணம் தவ்ஹீத் ஆகும்!
7) இதனை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள "லா ரஜுல பித்தாரி" வீட்டிலே எந்த மனிதனும் இல்லை என்ற வசனத்தை எடுத்து நோக்குங்கள்.
'லா ரஜுல பித்தாரி" என்றால் எந்த ஒரு மனிதனுமே வீட்டில் இல்லை என்ற கலிமாவின் Format இல்தான் இவ்வசனம் உள்ளது.
இவ்வசனத்திற்கு,
கை உடைந்த மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?
குள்ளமான மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?
கறுப்பான மனிதனைத் தவிர மற்ற மனிதன் வீட்டில் இல்லை என அர்த்தம் கற்பிக்கலாமா?
ஆனால் நீங்கள் சொல்லும் கலிமாவின் கருத்து அப்படித்தானே இருக்கிறது. இது எவ்வளவு பிழையான அர்த்தம்!!!
8) கலிமாவில் "இலாஹ்" என்ற சொல் "இலாஹ" என்று (மன்ஸூப் ஆக) வந்துள்ளதை அவதானித்திருப்பீர்.  இலாஹ என்பது "நகிரா"வா "மஃரிபா"வா?
"மஃரிபா" என்றால் குறிப்பான ஒன்று (eg : The God,The Man (muzammil) ,The furniture (table), வணக்கத்துக்குரியவன் .
"நகிரா" என்றால் பொதுப்படையாக அனைத்தையும் குறிக்கும் ஒன்று (eg: God, Man, Creature, Furniture,எது எதுவெல்லாம் வணங்கப்படுமோ அவையாவும்)
ஆகவே கலிமாவில் இலாஹுன் (அந்த ஒரு தெய்வம் The deity) என்று குறிப்பிட்டு பிரயோகிக்கப்படாமல், "இலாஹ" என்று ( எது எதுவெல்லாம் வணங்க, வழிபடப்படுகின்றதோ) அந்த இனம் யாவற்றையுமே ஒட்டுமொத்தமாக குறிப்பிடும் பாணியில் வந்திருக்கிறது.
அப்படியிருக்க "இலாஹ" என்பதை மஃரிபாவாக - குறிப்பிட்ட ஒன்றாக கட்டுப்படுத்தும் வகையில், வணக்கத்துக்குரிய தெய்வம் என்று எப்படி அர்த்தம் வைப்பீர்? இது குர்ஆனிய மொழியியலில் இல்லாத விடயமாயிற்றே.!
9) "லா" வுக்குப்பின்னால் ஒரு "இஸ்ம்" வந்தால் அந்த இஸ்ம் Common noun- பொது இனப் பெயர்ச்சொல் - பொதுப்படையாக அனைத்தையும் உள்ளடக்கிக் குறிக்கும் ஒருசொல் என்பது அறபு இலக்கணவிதி,
அத்தோடு அந்த "லா" "தப்ரிய்யாவுடைய லா"- absolute negation -அந்த இனத்தையே முற்றாக மறுதலிக்கும் "லா" (லல்லதீ லினப்யில் ஜின்ஸி) என்பது குர்ஆனிய மொழியின் விதி. இந்த விதிகளை புறக்கணித்து "வணக்கத்துக்குரியவன் மட்டும்தான் இல்லை அல்லாஹ்வைத்தவிர "என்று மொழிபெயர்ப்புச்செய்யலாமா? செய்தால் அது சரியான மொழிபெயர்ப்பு ஆகுமா?
நான் மேலே கூறிய கருத்துக்களின் அடிப்படையில் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் அல்லாஹ்வுக்கு வேறான கடவுள் / தெய்வம் இல்லை என்பதாகும்.
கடவுள் எனும் சிருஷ்டி அல்லாஹ்வுக்கு வேறானதாக இல்லாமல் இருக்கும் போது மற்றைய சிருஷ்டிகளும் அல்லாஹ்வுக்கு வேறானதாக இல்லாமலே இருக்க வேண்டும்.
அதாவது, கடவுள் எனும் சிருஷ்டி அல்லாஹ் தானானதாக இருக்கும் போது மற்றைய சிருஷ்டிகளும் அல்லாஹ் தானானதாகவே இருக்க வேண்டும்.
எனவே, அல்லாஹ்வுக்கு வேறான எந்த சிருஷ்டியும் இல்லை. சிருஷ்டிகள் அனைத்தும் அவன் தானானதாகவே இருக்கின்றன. அவனைத் தவிர எதுவும் இல்லை அவன் மாத்திரமே இருக்கின்றான் என்ற  தௌஹீதை லா இலாஹ இல்லல்லாஹ் என்கின்ற திருக்கலிமாவில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

சூபிஞானிகளின் மெஞ்ஞான போதம்




ஞானம் பற்றிக் கூறிய தற்கலைவாழ் அற்புத வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மது றஹ்மதுல்லாஹ் அவர்கள் பாடியுள்ளார்கள்.  

மண்ணால ஆனதெல்லாம் மண் எடுத்த கோலமது
மண்ணையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பொன்னால ஆனதெல்லாம் பொன் எடுத்த கோலமது
பொன்னையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பஞ்சால ஆனதெல்லாம் பஞ்செடுத்த கோலமது
பஞ்சையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!

வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று என்று பொருள் கொள்ளலாம். ஆயினும் மெஞ்ஞானிகள் என்ற ஸுபியாக்கள்வஹ்ததுல் வுஜூத்என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். “வஹ்தத்என்றால் ஒன்று என்றும், வுஜூத் என்றால் உள்ளமை அல்லது மெய்ப்பொருள் என்றும் பொருள் வரும்.

ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்ற இந்த ஞானத்தை போதிக்கவே இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்கள் உருவாகின. இஸ்லாம் (ஷரீஅத்), ஈமான் (அகீதா), இஹ்ஸான் (தரீக்கத்) இவை மூன்றும் சேர்ந்ததுதான் மார்க்கம். இதுதான் தீன்.இஹ்ஸான் என்று சொல்லக்ககூடிய தரீக்கத்தை இறைவன் நமக்கு வழங்கிய காரணம் தன்னை அறிந்து தன் ரப்பை (இறைவனை) அறிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்.

தரீக்கத்துடைய ஞானவான்களான ஸுபியாக்கள் இந்த தரீக்காக்களின் (ஆன்மீக கல்லூரிகள்) மூலம் ஒவ்வொரு முஸ்லிம்களுடைய உள்ளங்களை திக்ர் பயிற்சிகளின் மூலம் தூய்மைப்படுத்தி மனிதன் தன்னை அறிந்து தன் ரப்பை அறிந்து, இறைவன் ஒருவன் என்ற தௌஹீதை உள்ளத்தின் மூலம் உணர வைப்பதற்காகவே தரீக்காக்களை (ஆன்மீக கல்லூரிகளை) உருவாக்கினார்கள்.

ஏனெனில் இஹ்ஸான் என்பது கற்கும் அறிவல்ல உணரும் அறிவு. இதனால்தான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களிடம் இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்ட போது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், தான் இறைவனை பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற உணர்வில் வணங்குவது அல்லது இறைவன் தன்னை பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்ற உணர்வில் வணங்குவது. (ஸஹிஹுல் புகாரி)
இதன் மூலம் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம் இஹ்ஸான் என்பது உணரும் அறிவு என்று.இப்போது விடயத்திற்கு வருவோம், வஹ்ததுல் வுஜுத் என்றால் உள்ளமை ஒன்று அதாவது இறைவன் ஒருவன் என்பதை அறிந்து உணரும் கல்விக்கே வஹ்ததுல் வுஜுத் என்று கூறப்படும்.

வஹ்ததுல் வுஜுத் பற்றி அல் குர்ஆனிலும், ஹதீஸிலும் ஏராளமாக இருக்கிறது. அதன் விளக்கங்களை முழுமையாக வாசித்து அறிந்துக்கொள்ள முடியாது. அவைகளை ஆன்மீக ஆசிரியர் ஒருவர் மூலமாகவே அறிந்துக்கொள்ளலாம்.
மெய்ஞ்ஞானம் (மஃரிபா) என்பது உள்ளமையே அறிவது.  யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. தக்வா எனும் பயபக்தியும், ஆத்மஞானயோகமும், நம்மனத்தைச் சுத்தப்படுத்தும்.  ஐரோப்பிய எழுத்தாளர்கள், சூஃபியா எனும் சொல்லைச் சோபோஸ் எனும் கிரேக்கவேர்ச்சொல்லோடு தொடர்புபடுத்தி அறிவாளி என்ற விளக்கம் தந்துள்ளனர்.  மென்மையான ஆடைகள் அணிந்த செல்வந்தரிடமிருந்து வேறுபட்டு, சூஃப் எனும் கரடுமுரடான ஆடை அணிந்த எளிமையான ஞானிகளைச் சூஃபிக்கள் என அழைத்தனர்.  எனினும் தூய்மை என்ற பொருள் வரும் ஸஃபாஎனும் சொல்லிலிருந்தே சூஃபிஎனும் சொல் வந்ததாக அறிய முடிகிறது.
1.    தெய்வக்காதலும், தெய்வபக்தியுமே சூஃபியத் தத்துவத்தின் அடிப்படைக் கருத்தாக அமைகிறது.
2.    அறிவும் அன்பும், உலகியல் ஆசை துறத்தலுமே சூஃபிய மார்க்கத்தின் வழிமுறைகளாய் அமைகின்றன.
3.    எல்லாச் சமயங்களும் தொடங்குமிடமும், முடியக் கூடிய இடமும் ஒன்றுதான் என நம்புவது.  அதாவது எல்லாவற்றுக்கும் காரணம் ஏக இறைவனின் அருட்கொடையே எனக் கருதுவது.
4.    புறக்கண்ணை மூடிவிட்டு, அகக்கண்ணால் யாவற்றையும் பார்க்கப் பழகுவது.
5.    மாசடைந்த ஆத்மாவை, இறைப்பற்றால் புதிதாக்குவது.
6.    ஒழுக்கம் நிறைந்த வாழ்வு, தூய்மையான வாழ்வு, இறைவனைப் பற்றிச் செல்லும் வாழ்வு, இவை சூஃபியர்களின் நோக்கமாய் அமைந்தன.
7.    குரு சீடர் அமைப்பு முறை இச்சித்தாந்தத்தில் நிலையானது.  எல்லாம் வல்ல இறைவன் கற்பிப்பவனாக, நாம் கற்பவர்களாக உள்ளோம் எனக் கருதுவது.
    உலக அளவில் ஹல்லாஜ் ஈப்னுல் அரபி, ஜலாலுத்தீன் ரூமி, சஅதி, ஹாபிஸ், ஜாமி போன்ற சூஃபியாக்கள் புகழ் மிக்கவர்களாய் திகழ்ந்தனர்.
    தமிழ்நாட்டில் சித்தர்களையும், சூஃபியா ஞானிகளையும் பிரித்துப் பார்க்க இயலா அளவிற்குப் பாடுபொருள், பாவகை வடிவம், உணர்ச்சி போன்றவற்றில் ஒற்றுமை தெரிகிறது.  பதினெட்டு சித்தர்களின் ஞானக்கோவையில் பீர் முகம்மதப்பா என்ற (முஸ்லீம்) சூஃபி மகானின் ஞானரத்தினக் குறவஞ்சியும் இடம் பெற்றுள்ளதுஎனத் தக்கலை பஷீர் (ஞான இலக்கியங்கள்) குறிப்பிடுவது ஒற்றுமைக்குச் சான்று பகருகிறது.

    இறைவனோடு இரண்டறக் கலக்கும்போது ஏற்படும் பேரானந்தக் களிப்பினைத் தாயுமானவர், கடுவெளிச் சித்தர் போன்றோரை அடியொற்றி இஸ்லாமியச் சூஃபி புலவர்களும் பாடியுள்ளனர்.  கீழக்கரை அல் ஆரிஃபா, செய்யிது ஆசியா உம்மா, தக்கலை பீர் முகம்மது சாகிப் (ஒலி), குணங்குடி மஸ்தான் சாகிபு, கோட்டாறு சேகு தம்பி ஞானியார், முத்துப்பேட்டை பீர் முகம்மது மஸ்தான், அய்யம் பேட்டை அப்துல் கனி, மேலப்பாளையம் மெய்ஞ்ஞானி முஹைய்யத்தீன் ஷெய்கு பஷீர் (ஒலி), கல்லிடைக் குறிச்சி கலிபத்து செய்கு சாகுல் அமீது, புதூர் முகம்மது மஸ்தான், தொண்டி மோனகுரு செய்கு மஸ்தான் சாகிபு, செய்கு முகம்மது மௌலானா போன்ற சூஃபியக் கவிஞர்களைச் சித்தர்களோடு பலகோணங்களில் ஒப்பு நோக்க முடிகிறது.

சித்தர்களைப் போன்றே குணங்குடியார், பீரப்பா போன்றோர் எழுதினாலும், இஸ்லாத்தின் நெறிக்குட்பட்டே எழுதினார்கள்.  அரேபிய நாட்டில் நடந்த நபிகள் பெருமானாரின் (ஸல்) வாழ்வைத் தமிழில் தந்த போது உமறுப்புலவர் எப்படித் தமிழ்ச் சூழலுக்கு ஏற்பத் தந்தாரோ அதே போல், சூஃபிப் புலவர்கள் இஸ்லாத்தின் வேரை அடித்தளமாகக் கொண்டே கிளை பரப்பினார்கள்.
    தம் குருநாதர் தாயுமானவர் பராபரக் கண்ணியைப் (389 கண்ணிகள்) பாடியதை மனதிற் கொண்டு குணங்குடியார் நிராமயக் கண்ணி (281 கண்ணிகள்), ரகுமான் கண்ணி (100) பராபரக் கண்ணி (100) புலம்பற் கண்ணி (17) கண்மணி மாலைக் கண்ணி (100) மனோன்மணிக் கண்ணி (100), நந்தீஸ்வரக் கண்ணி (51) ஆகியவற்றை இயற்றினார்.
    குணங்குடியாரைக் குருநாதராகக் கொண்டு ஐயா சாமி முதலியாரும், மகாவித்வான் திருத்தணிகைச் சரவணப் பெருமாள் ஐயரும், வெங்கட் ராய பிள்ளை கவிராயரும், கோவளம் சபாபதி முதலியாரும் பல பாடல்களைப் பாடினர்.  ஆக சூஃபிப் புலவர்கள் சமய நல்லிணக்கம் உடையவர்களாய் திகழ்ந்தனர்.
    1980 ஆம் ஆண்டு குணங்குடியாரின் பாடல்களைத் தொகுத்த கவிக்கோ அப்துல் ரகுமான் குணங்குடியார் சூஃபி மரபுப்படி திரிசிரபுரம் மௌலவி ஷாம் சாஹிபிடம் முரீதுஎனும் தீட்சை பெற்றிருக்கிறார்.  கல்வத்எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்திருக்கிறார்.  வலிமார்களின் கோமான் முகியத்தீன் ஆண்டவர் அப்துல் காதர் ஜீலானி அவர்களை ஞான குருவாகக் கொண்டு காதிரிய்யாநெறிப்படி ஒழுகி வந்துள்ளார்எனக் குறிப்பிடுகிறார்.
அழுகணிச் சித்தரும் சூஃபியப் புலவர்களும்
    உடலை இகழ்தல் என்பதும், ஆத்மாவுக்கு மரியாதை தருவதும் சித்தர் நெறி.  அழுகணிச்சித்தரின் தாக்கம், சூஃபியப் புலவர்களிடம் இருப்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
உற்றைச் சடலமடி உப்பிருந்த பண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா
உன் பாதம் சேரேனோ“         (அழுகணிச் சித்தர் பாடல்)
   
    இதே பொருளில் பீரப்பா ஊத்தைச் சடலம் படைத்து உலையாமலே உப்புக் கடலைப் புகட்டி“ (பீரப்பா ஆனந்தக்களிப்பு 8) என்கிறார்.  மெய்ஞ்ஞானி பஸீர் (ஒலி) ஊற்றைக் குணங் கொண்ட காயம் இதற்கொன்பது வாசலு மொழுங்காக உண்டும், நாற்றம் பொதிந்ததிக் காயம் இதை நம்பாதே மனமே” (12) எனக் குறிப்பிடுகிறார்
    மனித உடல் அழியக் கூடியது, ஊத்தைக்குழி என்று குணங்குடியார் நிராமயக் கண்ணியில் பாடுகிறார் இவ்வாறு...
    “ஊத்தைப் பிணமாம் உடலை இடிசுவரை
    ஏற்றபடி விடுதல் ஈனம் நிராமயமே“ – நிராமயக் கண்ணி – 23

மூலாதாரமான பாம்பினை யோகப் பயிற்சியினால் எழுப்பி மேல் ஏற்றும் திறம்பற்றிப் பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் எனப்பட்டார்.  இறைவனைக் கண்டவர் விண்டிலர், விண்டவர் ஒருக்காலும் கண்டதில்லை என்பதை
    “கண்டவர்களொரு காலம் விண்டிடர்கள்
    விண்டவர்களொரு காலும் கண்டிடார்கள்
    கொண்டே கோலமுள்ளவர்கள் கோறிலை காணார் எனக்
    கூத்தாடிக் கூத்தாடி ஆடு பாம்பே“         (பாம்பாட்டிச் சித்தர்)
இதே பொருளில் முத்துப்பேட்டை பீர்முஹம்மது மஸ்தான்
   
கண்டவர் சொன்னதில்லைக் கருவுருவான சோதி
    கண்டவர் விண்டதெல்லாம் கருத்துடன் ஒருமித்துக்காண
    கண்ட சூட்சமத்தை அங்குகண்ட தாய்ச் சொன்னாராகிற்
    கண்டதைச் சொல்லவில்லைக் காணி சூட்சந்தானே
                            (அத்வைத உண்மை போதம்-8)
போகர் கீழக்கரை அல் ஆரிஃபா செய்யிது ஆசியா உம்மா
    இராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கைத் துறைமுகப்பட்டினமாகத் திகழ்வது கீழக்கரை பௌத்திர மாணிக்கப்பட்டிணம் எனப் பழந்தமிழ்க் கல்வெட்டுகள் வழங்கும் இப்பகுதியில் பிறந்தவர் கீழக்கரை ஆசியாம்மாள். தன்னை மிக எளிமையுடையவராகச் சிறியாள், பேதம் அறியாதவள், கல்லாள், சின்னவள் எனக் குறிப்பிடுவதைக் காணலாம்.  அப்பர் தேவாரத்தில் நாவுக்கரசர் தம்மை நாயேன் அடியேன்எனக் குறிப்பதைப் போன்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு இறைவனிடம் இறைஞ்சுகிறார் இப்படி
    “என் பற்று உன்னில் அமைந்த விட்ட உயர்
    ஏக ஏகாந்தமும் நீயாவாய்
    துன்பத்தை நீக்கிச் சுகந்தருக எந்தன்
ஜோதியே இரத்தின ஞானப்பெண்ணே!
என்று வேண்டுவதைப் போன்று, போகரும் இறைவனை இப்படிப் போற்றுகின்றார்.
    “அகண்ட பரிபூரணமா மையர் பாதம் போற்றி
    எடுத்து நின்றவுமை யவடாய் பாதம் போற்றி
இறைவனைப் போற்றும் நெறியில் ஒன்றுபடுகிறார்கள்.

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...