Tuesday, October 24, 2017

பலதார மணம்





இஸ்லாமிய மார்க்கத்தில் எப்போதுமே சில கருத்துக்களை கருத்துகளாக பார்க்காமல் அமல்களாக பார்க்கும் பார்வை ஷரியத் நிபுணர்களிடம் உண்டு.அதனால் தான் பலதாரமணம்,மது,அடிமை,பர்தா போன்ற சர்ச்சைக்குள்ளான அத்தனை விஷயங்களும் மார்க்க அகமியம் என்று விளங்காமல் ஷரியத்தாக பார்த்ததால் முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகளாகிவிட்டார்கள்.பொதுவாக இஸ்லாத்தின் மேல் சொல்லப்படும் குற்றசாட்டுகள் இதோ:
இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்?
ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம், பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்?
இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது, அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.
இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும்– கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.
முஸ்லிம்களில் பலர்அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.
மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?
பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்?
குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது
தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறது
இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றது
இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்
இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளன
எம்மதமும் சம்மதமா?
இஸ்லாமியப் போர்கள்
முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லும் இஸ்லாம்
இந்துக்களை காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது
ஜிஸ்யாவரி
திக்கை வணங்கும் முஸ்லிம்கள்
ஹஜ் பயணமும், புனித யாத்திரையும்!
கருப்புக் கல் வழிபாடு?
நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா?இப்படி பல.
உதாரணமாக தாடி விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.பெருமானார் நபி சல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் மீசையை வெட்டுங்கள்.தாடியை வளரவிடுங்கள் என்று சொன்னதாகச்சொல்லப்படும் ஹதீதை வைத்து தாடிவளர்ப்பது சுன்னத் என்று சொல்லி தாடிவளர்த்து பயங்கரவாதியின் அடையாளம் போல் தாடி ஆகிவிடும் அளவுக்கு நிலமை சென்று விட்டது.ஆனால் மீசை,தாடி என்று சொல்லப்படும் விஷயம் உண்மையில் மீசை,தாடியை குறிக்கவில்லை. அவை குறிப்பது அகமிய ஞானத்தை ஆகும்.கைரியத் என்ற வேற்றுமையை வெட்டிவிடுங்கள்.ஐனியத் என்ற ஒருமையை வளரவிடுங்கள் என்பதே அதன் கருத்தாகும்.இப்படி அகமியத்தை விளங்காமல் ஷரியத்தை பேணுகிறோம் என்ற பெயரில் விமர்சனத்துக்கும்,சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறோம்.மஹ்ரிபத்தும்,ஷரியத்தும் முக்கியமாநவை என்பதை விளங்கியறியவேண்டும்.பர்ளாந கடமைகள் ஷரியத்தில் உள்ளவை.அதை பின்பற்றியே ஆகவேண்டும்.ஆனால் சுன்னா என்கிற சில அமல்கள் சொல்வது ஞாநத்தையே.அவை அமல்களல்ல.இதை அறிந்து கொண்டால் முஸ்லிம்கள் உயர்ந்த நிலையை அடைவது உறுதி.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...