Tuesday, November 06, 2018

நான்

நாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து கையை துண்டித்து விடுங்கள்.கண் இருப்பது வரை உங்கள் அநியாயத்தை சாட்சி சொல்வேன்.தயவு செய்து கண்களை பிடுங்கி விடுங்கள்.காது இருப்பது வரை நீங்கள் செய்யும் அநியாயம் எனக்கு கேட்டு கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து காதுகளை வெட்டி விடுங்கள்.முடியுமென்றால் தலையை கொய்து விடுங்கள்.கருத்துரிமை என் பிறப்புரிமை.நான் இருக்கும் வரை தடுக்க முடியாது.இன்னும் கேளுங்கள் என் ரத்தத்தை பூமியில் சிந்த விடாதீர்கள்.அப்படி செய்தால் அது ஆபத்தாகிவிடும் உங்களுக்கு.மேலும் நான் பேசிய கருத்துக்களும்,எழுத்துக்களும் என்றாவது ஒரு நாள் உங்களின் குரல்வளையை நெறிக்கும்.நீங்கள் சாவது வரை எனக்கு மரணமில்லை

after-10-12-art-design-college

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...