Thursday, July 23, 2009

முரண்பாடும், முரண்பாடுகளும் 4


எii) விளையாட்டுக் கோட்பாடு

விளையாட்டுக் கோட்பாடு என்பது - குறைந்தது இரண்டு சுதந்திரமான கட்சிகளினது முரண்பாடுகளின் பிரச்சினைத் தீர்வுகளின் முறைப்படியான ஆய்வாகும். அடிப்படையில் இது பொருளியலாளர்களால் மனிதர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடத்தையில் இது பயன்படுத்தப்பட்டது. (Pழரளெவழநெ) பவுண்ஸ்ரோன் இதனை இறுக்கமான து}யகணித படிப்பு என விபரித்து இது முரண்பாட்டை நியாயமான வழியில் பார்ப்பது என்பதிலிருந்து வளர்ந்து 20ம் நு}ற்றாண்டின் மத்திய பகுதியில் இது தோற்றம் பெற்றுள்ளதோடு து}யகணிதவியலாளரான துழாn ஏழn நேடனஅயn பொருளியலாளரான ழுளஉயச ஆழசபநளவநசn என்பவர்களது வழிகாட்டல் கரங்களினால் அபிவிருத்தியடைந்தது. அவர்களது நு}லான “வுhநழசல ழக புயஅநள யனெ நுஉழழெஅiஉ டீநாயஎழைரச” “முரண்பாட்டுத் திர்வு” என்ற சஞ்சிகையின் இணை ஆரம்பகர்த்தாவான அனரலட் றப்போபோட் முரண்பாட்டுத் தீர்வுக்கு நேரடியாகப் பிரயோகித்தார். விளையாட்டு கோட்பாடு முரண்பாட்டில் மக்கள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பது பற்றி ஒரு மாதிரியை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. ளுiஅஅயட ஊழளளநச என்பவர்களைப் போல் சுற்றி அல்லது டுவெட்சைப் போலன்றி விளையாட்டுக் கோட்பாடு முரண்பாட்டினை அதன்படியே பரிசீலனை செய்ய முயற்சிக்கிறது.

விளையாட்டுக் கோட்பாட்டை பயன்படுத்துவதினு}டாக மனித நடத்தையைக் கற்பது பல முக்கியமான தத்துவங்களைப் பற்றி கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

1. மக்கள் பகுத்தறிவு ரீதியாகத் தமது தெரிவுசெய்வார்களென கொள்கிறது.
2. விளையாட்டுக் கோட்பாட்டாளர்கள் முழுமையான அறிவு என்பதை ஈடுகோள்களாகக் கொள்கிறார்கள்.

(எiii) கைதியாளர்களின் திரிசங்கு சுவர்க்கநிலைக் கோட்பாடு.

முரண்பாட்டின் விளைவு சம்பந்தப்பட்ட இரு கட்சிகளுள் ஒன்று மற்றையது எதைச் செய்கிறது என்பதில் தங்கியிருக்கும். பல முரண்பாட்டு சு10ழ்நிலைகளுக்கு கைதிகளின் திரிசங்கு சுவர்க்க நிலை என்பது பயன்படுத்தப்பட்டது. இச்சு10ழ்நிலையில் மற்றைய கட்சி என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதற்கான காப்புறுதி குறைவாக இருப்பதை ஈடுகட்டுவதற்கான உபாயங்களை கட்சிகள் அபிவிருத்தி செய்கின்றன. அத்தகைய உபாயங்கள் கட்சிகளின் முரண்பாட்டை வளர்ச்சியடையச் செய்யும் என்பதே பிரச்சினையாகும். றோபேர்ட் அக்ஸ்லோட் என்ற அரசியல் விஞ்ஞானி கட்சிகள் எவ்வாறு கூட்டுறவான பரஸ்பரம் தங்கியிருக்கும் உபாயத்தை உருவாக்குகின்றன என்பதை படிக்க விரும்பினால் அதாவது கைதிகளின் திரிசங்கு சுவர்க்க நிலையைப் பயன்படுத்தி கட்சிகளிடையே அவநம்பிக்கை நிலவும் போது எவ்வாறு கூட்டுறவை உருவாக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினார்.

(iஒ) ஜோன் பேர்ட்டன்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கல்விமானான திரு ஜோன் பேர்டன் அவர்கள் ஆஸ்திரேலியாவின் வெளிவிவகார காரியாலயத்தில் காரியதரிசியாக இருந்த இவர் முரண்பாட்டுத் தீர்வு பற்றி விரிவாக எழுதி உள்ளனர். பேர்டன் முரண்பாட்டுத் தீர்வு பற்றிய கல்வி அதன் இருதயத்தைப் பொறுத்து மனித நடத்தையையும் தொடர்பையும் பற்றியதாகும் என்றார். தனியே உளவியல் மனிதன் அல்லது பொருளாதார நடத்தை பற்றி மட்டும் கற்;றால் போதாது. பேர்ட்டன் ஒரு முழுமையான அணுகுமுறைக்காகவே வாதிட்டார். மனித, தினிப்பட்ட, சமூக முழுமையையும் படிக்க முடியும் என்றார். மேலும் அவர்முரண்பாட்டுத் தீர்வு கற்கை நெறியில் ஒரு கோட்பாடு அசைவு இடம்பெற்றுள்ளது என நம்பினார். அதன் கீழ் சமூக கட்டுப்பாட்டினை சமநிலை அடைதல் என்பதாகும். என்பதோடு அதிகாரம் அடைதல் என்பதாகவும் விளக்குகிறார். மனித நடத்தை பரந்த வேறுபடும் சக்திகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது. இவற்றுள் பல சமூகமயப்படுத்தலின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன. அது என்னவெனில் மனிதர்கள் சில மாதிரியான ஒரு நடத்தைக்குள் சமூகமயப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், தனிப்பட்டவர் களுக்காக கட்டாயமாக எதையும் செய்ய வேண்டியதில்லை என்றார்.

எமது அடிப்படைத் தேவைகளைத் திருப்திப்படுத்த முற்படும்போது நாம் முரண்பாட்டை உருவாக்குகின்றோம் என்பது ஒன்றுக்கொன்று எதிரானதாகும். முரண்பாட்டைத் தீர்ப்பதில் எது தேவை எனில் முரண்பாட்டுக்கான காரணங்களை பகுப்பாய்வு ரீதியில் விளங்கிக் கொள்வதற்கான வழியே என்பதோடு அந்த வழியில் மரபுரீதியான அதிகார பேரம் பேசுதல் இடம்பெறக் கூடாது என வாதிட்டார். ஸ்தாபனங்கள் அடிக்கடி முரண்பாட்டுத் தீர்வினை கடினமாக்குகின்றன. ஏனெனில், அவை சமகால அதிகார பேரம் பேசும் அந்தஸ்தினை பாதுகாத்து ஆதரவளிக்கின்றன. முரண்பாடுகளுக்கான தீர்வு நேரடியாக மனித சமூகத் தொடர்புகளை விளங்கிக் கொள்வதிலிருந்தே வளர்ச்சியடைகின்றது. இது அடிப்படை எடுகோளான முரண்பாடுகள் நிர்ப்பந்தப்படுதல், அதிகாரம் என்பதினாலேயே என்ற அடிப்படை எடுகோளை நிராகரிக்கின்றது. தேவைகள் என்பது மனித வாழ்க்கையின் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்குமான அடிப்படை மனிதக் கோரிக்கைகளாகும். முரண்பாட்டுத் தீர்வில் மனித தேவைகள் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் மெஸ்லோ (ஆயளடழற)இ சைற்ஸ் (ளுவைநள), போட்டன் (டீநசவழn) என்பவர்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அவதானிப்பின் மூலமே மனித தேவைகள் அணுகுமுறை வளர்ச்சி பெற்றது. பேட்டன் மனித தேவைகளைத் திருப்தி செய்தல் என்பதே மனித நடத்தையின் அடிப்படை மூலம் என்றார். மேலும் அவர் தேவைகளைத் திருப்திப்படுத்தல் என்பதை சமூகத் தொடர்புகளுக்கு வெளியே விளங்கிக் கொள்ள முடியாது என்றார். ஆகவே, மனித தேவைகளைப் பற்றிய கற்கை தனிப்பட்டவர்களின் கூட்டுத்தேவை பற்றிய ஆய்வாக இருப்பதுடன் அது சமூகத் தொடர்பு என்பதிலேயே கற்கப்பட வேண்டும். முரண்பாட்டில் மனிதர்கள் என்ன பிரச்சினை உள்ளது என்பதை அறிக்கை விடுவார்கள். இத்தகைய அறிவித்தல்கள் அவர்களது நலன்களை பிரதிபலிக்கும். ஆனால் அவர்களது அடிப்படையான தேவைகளை அல்ல. மனிதர்கள் முரண்பாட்டில் ஈடுபடும் போது அவர்களது பிரச்சினைகளாலேயே பிரதிநிதித்துவப்படுத்தப்படுவர். அந்த தேவைகளைத் திருப்;;திப்படுத்துவதற்கான அவர்கள் அதிகாரத்தையும் நிர்ப்பந்தப்படுத்தலையும் பயன்படுத்துவார்கள். இவ்வாறு தமது அதிகாரத் தொடர்புகளை மற்றவர்கள் மீது திணிப்பதற்கான தேவைகளைத் திருப்திப்படுத்துவதென்பது முரண்பாட்டைக் குறைப்பதற்கான மூலமாக ஆகாது முரண்பாட்டுக்கான காரணமாக ஆகின்றது.

மனித தேவைகள் இருப்பதே முரண்பாட்டுத் தீர்வில் அதிகமான பிரச்சினை நிறைந்த இடமாக இருக்கின்றது. மெஸ்லோ மனிதத் தேவைகள் பற்றியதோர் கோட்பாட்டினை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர். அதன்படி தேவைகளுக்குத் தீர்வு காண்பதென்பது ஆரோக்கியமானதும் கூடியளவு இயலளவு மனிதர்களுக்கு வழிவகுக்கின்றது. அவர் உளவியல் தேவைகள் (உணவு), பாதுகாப்புத் தேவைகள் (கட்டமைவு, ஒழுங்கும் சட்டமும்), ஒரு பகுதியாக இருத்தல் (சினேகிதம்), மதிப்புக்கான தேவைகள், சுய ஆதிக்கத்துக்கான தேவைகள் எனவும் பிரித்தார். மெஸ்லோ, இத்தகைய தேவைகளின் திருப்திகளோடு முரண்பாட்டினைத் தொடர்புபடுத்தினார்.

தனிப்பட்டவர்களின் முக்கியமான தேவைகள் மறுக்கப்படும்போது அந்த தனிப்பட்டவர்களை தமது தேவைகளைப் பூர்த்தியாக்க வழிவகுக்கின்றது. தமது தேவைகளை திருப்திப்படுத்த எடுக்கும் முறை கேள்விக்குரியதாகும். அவர்கள் எந்த வழியையும் பின்பற்றலாம். அவை அவர்களையே அபாயத்துக்குள்ளாக்கலாம்: உடல் ரீதியாக கேடுவிளைவிக்கலாம்.

மெஸ்லோவின் கோட்பாட்டிற்கு தேவைகள் பற்றிய கோட்பாடு மேலதிகமாக போல்சைற்ஸ் (1973), தனது நு}லான ஊழஅகடiஉவ : வுhந டியளளை ழக ளுழஉயைட ழுசனநச என்பதில் - அடிப்படைத் தேவைகள் என்பன உள்ளன. அவை சர்வ உலக ரீதியானவை. இவ்வாறு குறைந்த குறிப்பாக கலாசார ரீதியானவை (எம்மை நம்ப வைக்க முயற்சிக்கும் நடத்தை விஞ்ஞானிகளின் கருத்துக்களைவிட)

சைற்ஸ்அடிப்படை மனிதத் தேவைகள் மெஸ்லோ குறிப்பிட்டவற்றை விட வேறுபடுத்துகின்றன என்றார். அவர் பலவற்றை முன்வைத்தார். அவற்றுள் அடையாளத்துக்கான தேவை, உற்சாக மடைவதற்கான தேவை, கட்டாயப் படுத்துவதற்கான தேவை என்பனவும் அடங்கும். கட்டுப்படுத்துவதற்கான தேவையே சைற்சுக்கு எல்லாத் தேவைகளிலும் பலமானது. ஒருவரது சு10ழ்நிலையைக் கட்டுப்படுத்துவதினு}டாக ஒருவர் திருப்தி மற்றும் தேவைகளையும் கட்டுப்படுத்தலாம் என்றார்.

மிகவும் ஆழமான சர்வதேச மட்டத்தில் தேவைகளை வைப்பதன் மூலம் சைற்ஸ் - பரம்பரை ரீதியான மனித நடத்தைக்கு எதிராக கலாசாரத்தை அவர் முன் வைத்தார்.

சைற்ஸ் கருத்துக்களிலிருந்து பேட்;டன் பின்வருவதை எடுத்துக் கொண்டார்.

மனித தேவைகள் பற்றிய திட்டவட்டமான ஒருதொகுதியை கண்டுபிடிக்க வேண்டுமாயின் அதன் அடிப்படையில் சமுதாயங்கள் சமாதானமாக இருக்கக் கூடியதாயின் நடத்தை விஞ்ஞானம் கொள்கைகளை தீர்மானித்தல் என்பவற்றின் பிரதான அணுகுமுறை பிரச்சினையைத் தவிர்க்கலாம். மனித தேவைகள் பற்றி உடன்பாடு இருக்குமானால் நடத்தை பகுப்பாய்வுக்கு ஆரம்பம் நிலை இருக்கும். ஏனெனில் இலக்குகளைத் தீர்மானிப்பதற்கான விஞ்ஞான அடிப்படைகள் இருக்கும். ஆகவே, பேட்டனின் கருத்து என்னவெனில் மனித அடிப்படைத் தேவைகள் பற்றிய ஒரு தொகுதியான அறிவாகும். அது மனித நடத்தையை விளங்கிக் கொள்வதற்கான வழிகாட்டியாகச் சேவை செய்வதோடு முரண்பாட்டுத் தொடர்புகளுக்கு வழிவகுக்காத கொள்கைத் தீர்மானங்கள் எடுப்பதை ஏற்படுத்தும். இத்தகைய தேவைகள்:

1. எதிர் தாக்கத்தில் தொடர்ச்சி.
2. உற்சாகம்
3. பாதுகாப்பு
4. அங்கீகாரம்
5. பங்கிடும் நிதி
6. பகுத்தறிவு பற்றிய தோற்றம்
7. பொருள் ஃ அர்த்தம்
8. கட்டுப்பாடு
9. பாதுகாப்பின் பங்கு

இதற்கு ஒரு மூன்றாம் தரப்பு அவசியமாகலாம். ஒரு குறிப்பிட்ட முரண்பாட்டினை தீர்க்கும் முயற்சியில் ஒரு மூன்றாம் தரப்பின் பங்கு ஒரு ஆலோசனையாளராக இருக்கலாம்.

(ஒ) முரண்பாட்டுத் தீர்வு என்;றால் என்ன?

சில சமூகச் சு10ழ்நிலைகள் எவ்வாறு ஓழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது பற்றி இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் எதிர் எதிரான கருத்துக்கள் கொண்டிருக்கும் போதே முரண்பாடு தோற்றம்பெறுகிறது. (உதாரணம்) தொழிலாளர் தம் உயர்ந்த வேதனம் வேண்டுமென்று கோருகின்றனர். முகாமைத்துவம் அவர்கள் குறைந்த வேதனத்தைக் கொண்டிக்க வேண்டுமென விரும்புகிறார்கள். எதிர் எதிரான நலன்களை கொண்டிருக்கும் கட்சிகள் பொருத்தமானது எனக் கருதும்போது அது ஒரு முரண்பாடாகிறது. பேச்சுவார்த்தைகளினு}டாக முரண்பாட்டுக்குத் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இருந்தபோதும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மனத்தாங்கல் உள்ள ஒரு கட்சி சமநிலையை குழப்ப விரும்பும் போது பேச்சுவார்த்தை முடியும் வரைக்கும் முரண்பாட்டுக்கான செலவுகளின் தொகையை வழங்க வேண்டிவரும். அல்லது அந்த செலவுகளை பகிர்ந்து கொள்வது சமமற்றதாக இருக்கும். அதனால் பேச்சுவார்த்தைக் காலம் நீடித்துச் செல்கிறது. அவ்வாறு நீடிக்கையில் சிலவகையான முரண்பாட்டு நடிவடிக்கைகளில் இறங்க வேண்டி ஏற்படும். அது எல்லாக் கட்சிகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். இது வேலை நிறுத்தம். போர் என்பவற்றைக் கொண்டதாக வரலாம்.

முரண்பாட்டுத் தீர்வு என்பது ஒரு தீர்வினை ஏற்படுத்துகின்ற ஒரு விதிமுறையாகும். அதில் முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் தொடந்தும் முரண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட அவசியமில்லை என்ற உணர்வினைப் பெறுவர். அத்தோடு, நன்மைகளைப் பகிர்ந்தளிக்கக் கூடிய முறையில் சமூக முறையுள்ள தென்பதை ஏற்றுக்கொள்வர். இதற்கு மூன்றாம் கட்சி அவசியம். இது நிபுணத்துவ ஆலோசனையாக இருக்கும். அது குறிப்பிட்ட ஆலோசனையைத் தீர்க்க முயற்சிக்கும் மாறாக மூன்றாம் கட்சி முரண்பாடுகளை எவ்வாறு தீர்க்கப்படலாம் என்பதற்கு ஆலோசனை வழங்குவதாகவும் இருக்கும்.

(ஒi) முரண்பாட்டு மாதிரிகள்

பகுத்தறிவு மாதிரிக் குழுவினைச் சேர்ந்தவர்கள் முன்வைத்துள்ள பயன்பாடுடைய ஒரு விளக்கம் பகுப்புச் செய்தமையால் அவர்கள் இந்தப் பகுப்பினை விளையாட்டு என அழைப்பதையே விரும்புகி;ன்றனர். இது முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு முரண்பாட்டின் அளவினையும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் பார்க்க உதவுகிறது. விளையாட்டுக்கள் மரபு ரீதியாக இரண்டு தொகுதிகளையும் பூஜ்ஜியக் கூட்டுத்தொகை விளையாட்டுக்கள் அவை முழுமையான முரண்பாடு பற்றிய கோட்பாடாக இருப்பதோடு அது பங்குபற்றும் ஒருவரின் வெற்றியானது இன்னொருவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்த உதவுகிறது. பூஜ்ஜியக் கூட்டுத்தொகை விளையாட்டு அல்லாதவைகளைப் பொறுத்தவரையில் அது சம்பந்தப்பட்ட எல்லா நடிகர்களுக்கும் கூட்டுறவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. பூஜ்ஜிய விளையாட்டினைப் பொறுத்தவரையில் இரண்டு தரப்பினருக்கும் நன்மைதரக்கூடிய ஒரு தீர்வினை ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. இது ஒரு கேக்கைப் பார்க்கும்போது ஒருவருக்கு தானாகவே சிறியதுண்டும் ஒருவருக்கு பெரிய துண்டும் கிடைக்கும்போது முரண்பாடுகள் தோன்றவாய்ப்பு சமமாக இல்லை. இத்தகைய சு10ழ்நிலையில் முரண்பாட்டு பகுப்பாய்வாளர்களுக்கு நீதியான எண்ணக்கரு பொருத்தமானது என்ற நிலை வரும்போது தான் அவர்களும் ஒரு பங்கிடும் முரண்பாட்டுக்கு நீதியான தீர்வு காண்பது பற்றி கணிசமான அளவிற்கு எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுள் பெரும்பாலான யதார்த்த தன்மை இவை து}யகணிதம் பற்றிய எண்ணக்கருக்களுக்கே கவர்ச்சியானதாகவுள்ளன. உண்மையான உலகப் பிரச்சினைக்கு இவை பொருத்தமானதாகவில்லை. ஆனால் ஒரு புறநடை எதுவெனில் 50 : 50 என்ற தீர்வு பொருத்தமாகும் போதுதான் சமூக நடவடிக்கையில் இறுக்கமான பூஜ்ஜியக் கூட்டுத்தொகை விளையாட்டு என்பது மிகவும் அருமையாகத்தான் காணப்படுகின்றது. பிரதேசம் பற்றிய தகராறுகளை எடுத்தல் கூட அவை பூஜ்ஜிய கூட்டுத்தொகை போன்று தோன்றினாலும் தொடர்ந்து அவற்றை விசாரணை செய்யும்போது அதுவல்ல என்ற முடிவுக்கே வரும். பல கட்சிகள் ஆய்வுகளை முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக போர்கள், பொருளாதாரத் தடை என்பனவற்றை வழியாக கொள்ளலாம். இது பூஜ்ஜியக் கூட்டுத்தொகையில்லாத வழியை உடனடியாகத் தோற்றுவிக்கும். இரண்டு நடிகர்கள் பகையுணர்வு நஷ்டம் பெரிதாக மாறி உடன்பாடு காண எந்த வாய்ப்பும் இல்லாத சு10ழ்நிலையில் தான் பூஜ்ஜியக் கூட்டுத்தொகை நுட்பங்கள் பொருத்தமாகின்றது. ஒரு எதிராளி ஒரு நடவடிக்கை எடுத்தல் அது மற்றைய கட்சிக்கு கெடுதல் விளைவிப்பதாக அமையும். ஒருவர் இந்த குறிப்பிட்ட விளையாட்டினை ஏற்றுக்கொண்டால் ஒரு முரண்பாட்டு பகுப்பாய்வுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையேற்படும். பூஜ்ஜிய கூட்டுத்தொகை அல்லாத விளையாட்டுக்களைப் பார்க்கும்போது பல்வேறு விளையாட்டுக்களினதும் கட்டமைப்பிலிருந்து பல சுவாரஸ்யமான பிரச்சினைகள் எழுவதைக் காட்டுகிறது.

(ஒii) மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்

எண்ணக்கரு

மூன்றாம் தரப்பு என்பதை “எதிராளிகளுக்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து தகராறுகளுக்கு பரஸ்பரம் திருப்திகரமான ஒப்பாசாரத்துக்கு வர உதவுபவர்கள்” என வரைவிலக்கணப்படுத்தலாம். இத்தகைய மூன்றாம் தரப்பினர் அல்லது கட்சிகள் ஒரு அரசாக ஃ ஒரு உத்தியோகத்தராக நிர்வாகியாக ஃ அல்லது உத்தியோகப் பற்றற்ற ஒழுங்கமைப்பாக அரசாங்க அல்லது சர்வதேச ஒழுங்கமைப்பு, ஒருதனிப்பட்டவர் என்பவையாக இருக்கலாம். மேலே சொல்லப்பட்ட எந்த மாதிரியினதும் பயன்பாடு பற்றி விளக்குதல் சிரமமாகும். ஏனெனில் அது முரண்பாட்டுக்கு முரண்பாடு வித்தியாசப்படும் போக்குடையது. முரண்பாட்டினைத் தீர்க்க ஒரு மூன்றாம் தரப்பு தழுவிக் கொள்ளும் வழிமுறை பற்றி ளுஉழவவ தொம்சன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “இரண்டு பேர் அல்லது மேற்பட்டவர்களிடையேயான தகராற்றில் சம்பந்தப்படாத ஒரு தனிப்பட்டவரோ அல்லது குழுவோ தகராற்றில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வர உதவ முயற்சிப்பது சில சந்தர்ப்பங்களில் தன்னளவில் ஒரு உடன்பாட்டிற்கு வர அதிகாரமளிக்கப்படுவதாகும்”

மத்தியஸ்த நடவடிக்கைகளில் மூன்றாம் தரப்பின் பங்குபல பரிமாணங்களைக் கொண்டதாகும். துயஉழடி டீனசஉழசவைஉh மூன்றாம் தரப்பு முரண்பாட்டு முகாமைத்துவத்தினை இரண்டு தொகுதிகளாக அல்லது வழிமுறைகள் கொத்தணிகளாக பிரித்துள்ளார்.

சட்டசபை பெறுமதி வழிமுறைகள் :

(உதாரணம்: தீர்ப்பு வழங்குதலும், தீர்த்து வைத்தலும் மூன்றாம் தரப்பு வழங்கும் தீர்ப்பு - ஆணை கட்சிகள் ஒழுகி நடத்தல் வேண்டும்)

தன்னிச்சையான வழிமுறைகள் :

(மத்தியஸ்தம், தணித்தல், நீதித்துறைக்கு பாரப்படுத்தலுக்கு சற்றுக் குறைவான பல்வேறு மாதிரியான உதவிகளும் இணக்கப்படுத்தலும்)

இது சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு ஏற்கத்தக்க வெளிப்பாட்டினை ஏற்படுத்தும்.

முரண்பாட்டிற்கு முரண்பாடு மூன்றாம் தரப்பின் பங்கு மாறும் போக்கினை கொள்ளும் சில தொகுதிகளில் செயற்படும் மூன்றாம் தரப்பு பின்வருவனவற்றில் விபரிக்கப்படும் இன்னொரு உபாயத்தினை தழுவிக் கொள்ளலாம். இவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்தவையாக காணப்படுவதால், கோட்பாட்டு ரீதியில் ஒரு மூன்றாம் தரப்பு முரண்பாட்டுத் தீர்வு வழங்குவதில் பின்வரும் சேவைகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. நல்லநிர்வாகம் (புழழன யுனஅinளைவசயவழைn) சமாதான வழிமுறைகளை ஆரம்பிப்பதற்கு ஒரு தபால்காரன் மாதிரி அல்லது தொடர்பு கொள்வதற்கான ஒரு கருவியாக செயற்படுதல், வேறு வார்த்தையில், தகராற்றில் சம்பந்தப்பட்டவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவைப்பது பெறுமதியானதாகுமா என்பதைக் கண்டறிவது.
2. மத்தியஸ்தம் (ஆநனயைவழைn) சம்பந்தப்படும் எதிராளிகளுக்கிடையில் அமைதியான தொடர்புகளை மீண்டும் ஆரம்பித்து தொடர்புபடும் முரண்பாடுகளில் தீர்வு காண பேச்சு வார்த்தைகளில் பங்குபெற வைப்பது.
3. சமரசம் செய்தல் (ஊழnஉடையைவழைn) சம்பந்தப்பட்ட எதிராளிகளுக்கு ஏற்கத்தக்க நடைமுறைச் சாத்தியமான தீர்வு பிரேரணைகளோடு முன்வருதல்.
4. நடுநிலை வகித்தல் ஃ நடுவராக செயற்படுதல் (யுசடிவைசயவழைn) முரண்பாட்டினைத் தீர்ப்பதில் ஒரு மூன்றாம் தரப்பின் பங்கினை மற்றைய கட்சிகளை ஏற்கச் செய்து சில தீர்மானங்களை செயற்படுத்தல்.
5. தீர்ப்புக்காக கையளித்தல் (யு னலரனiஉயவழைn) அவர்களது முரண்பாட்டினை ஒரு மூன்றாம் தரப்புக்கு தீர்ப்புக்காக கையளித்தலை மற்றக் கட்சிகளை ஏற்கச் செய்தல். இதனால் சட்டம், நிர்ப்பந்தப்படுத்தல் இரண்டாலும் மேற்கொள்ளலாம்.

ஒரு தலையீட்டில் ஒரு மூன்றாம் தரப்புகொண்டிருக்கும் ஈடுபாட்டினை அளவிடுதல் எப்போதும் சிரமமானது.

பேச்சுவார்த்தை, உடன்பாடும் முரண்பாட்டுத் தீர்வும்

பகுத்தறிவு அணுகுமுறையின் பங்கு :

மக்கள் பொதுவாக பகுத்தறிவு ஜீவிகள். அவர்கள் பகுத்தறிவுடன் தான் தெரிவுகளைச் செய்வர் என எடுகோளாகக் கொள்ளும் கருத்தின்; மீது கட்டியெழுப்பப்பட்ட தீர்மான பகுத்தறிவு சிந்தனையாளர் குழு ஒன்றுள்ளது. இக்கோட்;பாட்டின் நோக்கம் என்னவெனில், அடிக்கடி பகுத்தறிவுத் தெரிவு கோட்பாடு என அழைக்கப்படுவது பல்வேறு வித்தியாசமான சு10ழ்நிலைகளில் இத்தகைய தெரிவுகளின் விளைவுகளை பரிசீலனை செய்கின்றது. சில சந்தர்ப்பங்களில் தீர்மானங்களை எவ்வாறு சீர்ப்படுத்தலாம் என்ற விதப்புரைகளைச் செய்து இக்கோட்பாட்டின் அடிப்படையில் மிகவுயர்ந்த பயன்பாட்டுத் தெரிவுகளை எவ்வாறு செய்யலாம் என்பதைக் காட்டுகின்றது. இத்தகைய உச்ச பயன்பாடு வழமையாக ஒரு தனி நடிகரின் கருத்தின்படிதான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த நடிகர் ஒரு குழுவாகவும் இருக்கலாம். ஒரு தனிப்பட்டவரல்ல. ஆகவே, ஒரு முரண்பாட்டில் பல நடிகர்கள் இருந்தால், அது குழப்பத்தை விளைவிக்கும். அத்தகைய அணுகுமுறை முதல் பார்வையில் விலக்கத்தக்கதாகவிருக்கும். தற்போது உள்ளதைவிட மக்கள் பகுத்தறிவு முறையில் மக்கள் தெரிவு செய்வார்கள் பெருமளவு முன்னேற்றமானது என்பதை ஒருவரும் மறுக்க மாட்டார்கள்.

பகுத்தறிவுத் தெரிவு மாதிரி முரண்பாட்டின் இயல்பு பற்றி உள்ளார்ந்த தன்மைகளைக் காட்டியுள்ளது. அதன் பலவீனங்கள் பற்றி தெரிந்திருப்பது அது பற்றிய மேலும் விசாரணைகளை செய்ய ஊக்கம் அளித்துள்ளது. இவை, ஒரு முரண்பாடு முரண்பாட்டுத் தீர்வு பற்றிய அடிப்படை விளக்கத்துக்கு அடிப்படையானவை.

பகுத்தறிவுத் தெரிவுக் கோட்பாட்டின் அடிப்படைகள் :

முரண்பாட்டுச் சூழ்நிலைகளுடன் மாத்திரம் பகுத்தறிவுக் கோட்பாடு சம்பந்தப் படுவதில்லை. ஆனால் பெரும்பாலும் அதனிலேயே கவனங் கொள்கிறது.

பகுத்தறிவுத் தன்மையின் அடிப்படைத் தத்துவம் நடிகர் தனக்கு என்ன தேவை என்பது பற்றிய தெளிவான சிந்தனை உள்ளவர். இயலுமானவரை அதனை அடைய மிகவும் திறமையான வழியைப் பின்பற்றுவார் என்பதை எடுகோளாகக் கொள்கிறது. இதனால் பகுத்தறிவுத் தன்மை என்பது திறமை என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் இவ்வாறுதான் இதனை அடிக்கடி வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. சுலபமான சு10ழ்நிலைகளில் தோடம்பழங்களும், அப்பிள் பழங்களும் இருக்கும் போது ஒருவர் அப்பிளைவிட தோடம்பழங்களையே விரும்புவார். ஆயின் அவர் தோடம்பழத்தை தெரிவு செய்வார் என வாதிடுகிறது. ஒரு புகையிரத சேவையை எவ்வாறு திறமையாக இயங்கச் செய்வது? புகையிரத சேவையைப்பொறுத்து பல இலக்குகள் இருக்கலாம்: பாதுகாப்பு, நேரத்துக்கு சேவை வழங்குதல், வசதி, செலவுக் குறைவு. சமூக முறைகளில் எதிர்காலம் எப்போதும் நிச்சயமற்றதாகும். விருப்பங்களை மாத்திரமல்ல, சில நடவடிக்கைகளின் விளைவுகள் எவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இருந்த போதிலும் தீர்மானங்களை எடுப்பவர் அவருக்கு என்னதேவையோ அதனை உருவமைக்கும் வாய்ப்புண்டு என்ற அடிப்படை எடுகோள் உள்ளது. வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதனால் மாற்று வழங்கல்களுள் விருப்பத் தெரிவுகளை தெரிவாக தெரியப்படுத்தலாம். இது நீண்ட காலத்தில் ஓப்பீட்டளவில் ஒரே தன்மையானதாக விருக்கும்.

இவ்வாறு போட்டியிடும் இலக்குகளின் மிகுதிகளை தீர்மானித்ததன் பின்னர் அவற்றை எவ்வாறு அடையலாம் என்பது இன்னும் மிகவும் சிக்கலான பிரச்சினையாகவே உள்ளது. எதிராளிகள் இல்லாத முரண்பாடற்ற முறைகளுக்கு என வழிமுறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நடிகர்கள் ஒரு முரண்பாட்டில் சம்பந்தப்படும்போது பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை. முரண்பாட்டுக்கான வரைவிலக்கணத்தையே நடிகர்களுக்கு வேறுபடும் அந்த முரண்பாடு எவ்வாறு தீர வேண்டும் என்பது பற்றி வேறுபடும் விருப்பத் தெரிவுகள் உள என்பது புலனாகின்றது. (ஆகவே எவ்வாறு பகுத்தறிவுள்ள நடிகர்கள் ஒருவருக்கொருவர் எதிராளிகளாகின்றனர்)

இக்கோட்பாட்டின் படி முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருதல் ஒரு குறிப்பிட்ட முரண்பாட்டில் சம்பந்தப்படும் நடிகர்கள் தமது நோக்கங்களை அடைவதற்கு வன்முறையினை வழியாக கொள்ளுதலைக் கைவிடுதல் ஆகும். அவ்வழிமுறை நடிகர்கள் பேச்சுவார்த்தையினு}டாக தீர்வுக்கான வாய்ப்பினை கவனத்தில் எடுக்கும்போது ஆரம்பிக்கின்றது. அதாவது வன்முறை மோதலை தொடர்வதிலும் பார்க்க தீர்வு காண்பது சிறந்தது என இவ்வழிமுறையில் அபிவிருத்தி ஏற்படுத்துகின்றது.

எந்த சந்தர்ப்பத்தில் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதிலும் பார்க்க ஒரு உடன்பாட்டினை அடைதல் சிறந்தது எனக் கொள்கின்றன. இதற்கான விடை தமது நோக்கங்களை வன்முறைகளினால் அடையமுடியாது என்பது தெளிவாகும்போதும் பேச்சுவார்த்தைகளின் மூலம் அவற்றில் சிலவற்றையாவது அடையலாம் என்பது தெளிவாகும் போது.

ஒரு வன்முறை முரண்பாட்டில் சம்பந்தப்படும் நடிகர் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதா என்ற திரிசங்கு சுவர்க்க நிலைக்கு முகங் கொடுக்கும் போது அவர் வன்முறையைத் தொடர்வதனால் ஏற்படக்கூடிய நன்மைகள், செலவு என்பவற்றை பேச்சு வார்த்தைகளினு}டாக வரும் உடன்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்ப்பார். னுழயெடன றுவைவஅயn தனதுநு}லான “எவ்வாறு போர்கள் முடிவடைகின்றன” என்;;பதில் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாடு அவ்வுடன்பாடு இரண்டு பக்கத்திற்கும் நன்மையைத் தருவதாக இல்லாவிட்டால் ஏற்படாது என்றார். ஒவ்வொரு பக்கமும் போரைத் தொடர்வதனால் ஏற்படக்கூடிய பயன்பாட்டை பகுப்பாய்வு செய்ததின் பின்பு பேச்சுவார்த்தைகளினு}டாக ஏற்படும் உடன்பாட்டால் ஏற்படும் பயன்பாட்டின் மீது கவனம் கொண்டார்.

ஓ என்ற பக்கம் லு நிபந்தனையற்ற முறையில் சரணடைவதையே விரும்பும், தான் சரணடைவதைவிட இதனை அவர் ஒரு கணித அடையாளங்களில் விளக்கினார். வருடம் வயில் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் ஓ பெற்ற பயன்பாடு ருவஒ (ள) எனக் கொள்வோம். லு அதே வருடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் பெற்ற பயன்பாடு ருவஒ (ள) எனக் கொள்வோம். இதில் ஒப்பந்தத்தை ளுழூ எனக் கொண்டால் ரு(ளழூ) ஸ்ரீ ரு(ற) யனெ ரு(ற) ட.ந. ஆகவே ஒப்பந்தம் ஃ உடன்பாடு இரண்டு பகுதிகளையும் பேணித் தொடர்வதை விட நன்மையாக இருத்தல் வேண்டும்.

(ஒiii) சர்வதேச முரண்பாடுகளுக்குத் தீர்வு காணல்

நவீனகால சமூக விஞ்ஞானிகள் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியாதிருக்கும் மிகவும் முக்கியமானதாகவிருக்கும் சர்வதேச முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதே பிரதானமாகவுள்ளது. 1988ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அறிக்கை முரண்பாடுகளையும் தகராறுகளையும் தீர்ப்பது பற்றி இடம்பெற்று வரும் முயற்சிகளைப் பற்றி ஒரு பெரும் சாதனை எனவும் அரசுகளுக்கிடையிலான தொடர்புகளைப் பொறுத்தும் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்தது என்றும் கொள்ளப்படுகின்றது. 1988ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கோர்பச்சோவின் ஐக்கியநாடுகள் சபைக்கான விஜயமும் அங்கு பொதுச் சபையில் அவரது பேச்சும் சர்வதேச தொடர்புகளைப் பற்றிய ஒரு ஞானத்தினையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. அது 20ம் நு}ற்றாண்டின் முடிவின் போது அரசுகளுக்கிடையிலான நடத்தையில் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்ததாக பல அவதானிகள் கருதுகின்றனர். சர்வதேச முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணும் அணுகுமுறைகள் பற்றிய பரிசீலனை பெரும்பாலான இருபக்கத் தொடர்புகள் பற்றிய கற்கை, அல்லது ஆய்வு பல கற்கை நெறிகளை உள்ளடக்கியுள்ளதென விபரிக்கப்படுகி;ன்றது.

தேசிய சர்வதேச முரண்பாடுகளுக்குத் தீர்வு காணல் பற்றிய அபிப்பிராயங்கள் :

வன்முறை முரண்பாடுகளுக்கு தீர்வு காணுதல் வழமையாக அரசியல் ரீதியில் விரும்பத்தக்க இலக்காகும். அது மனித உயிர்களைக் காப்பாற்றுகின்றது. அத்தோடு அது தேசங்களில் உள்ளார்ந்த ஒழுங்கின்மைகளைத் தடுப்பதோடு அவற்றின் வெளிநாட்டுத் தொடர்புகளின் உறுதிப்பாட்டினையும் ஏற்படுத்துகின்றது. முரண்பாட்டுத் தீர்வு சமாதானத்திற்கான ஒரு வழியாகும். குறைந்தது ஒரு எதிர்க்கணிய சமாதானத்துக்கான வழியாகும். மற்றைய பெறுமதிக்கான ஒரு ஒழுங்கு, பொருளாதார அபிவிருத்தி என்பதற்கும் சேவையாற்றுகின்றது. இந்தஅணுகுமுறையில் முரண்பாட்டுத்தீர்வு அரசியல் வன்முறையின் எதி.... அது வன்முறைக்கான காரணங்களை தனிமைப்படுத்தி பொருத்தமான முறையில் அவற்றை இல்லாதொழிக்கின்றன. அந்தவகையில் வன்முறைக்கான காரணங்களுக்கும் அதில் ஈடுபடும் நடிகர்களின் தீர்மானங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பினை இல்லாதொழிக்கின்றது. அத்தகைய பன்மைத் தன்மை கொண்ட அணுகுமுறை தேசிய சர்வதேச தொடர்புகளில் அரசியல் வன்முறையின் தொழிற்பாடுகளை பாராமுகப்படுத்துகின்றனர். இது தெளிவான பகுப்பாய்வு என்பதனை நியாயப்படுத்துவதோடு காரணத்தினை விளங்கிக் கொள்வதற்கான திறவுகோளை வழங்குகின்றது. முரண்பாடுகளின் தொழிற்பாடுகள் அதிகாரத்தினை கையேற்றல் என்பவற்றையும் உள்ளடக்குகின்றது. அத்தோடு உள்நாட்டு ஒற்றுமையினைப் பராமரித்தல் வெளிநாட்டில் விரிவாக்கலையும் பராமரிக்கின்றது. வன்முறை பேரம் பேசுவதற்கான உள்ளீடாவதோடு அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்கள் தாங்கமுடியாத சு10ழ்நிலையும் பிரச்சினையும் உள்ளதென்பதை அறிவிக்கும் வழியுமாகும். (ளுயவஅநn - 1990 - 98) அரசியல் வன்முறையின் தொழிற்பாடுகளை வலியுறுத்துதல் முரண்பாட்டுத் தீர்வினை ஒரு பிரச்சினை தீர்க்கும் கோட்பாடு என்ற கருத்தில் இருந்து விலகிச் செல்கின்றது. அத்தகைய அணுகுமுறை பிரச்சினைகளை இல்லாதொழிப்பதற்கான நுட்பங்களை அபிவிருத்தி செய்வதை ஊக்கப்படுத்துகின்றது. குறிப்பாக இப்பகுபாய்வின் பிரபல்யமான நோக்கங்கள் திட்டவட்டமான தீர்வுகளை அடைவதற்கான பல்வேறுவிதமான தந்திரங்களையும் கொண்டுள்ளது. பேரம் பேசும் நடத்தை அடிக்கடி நிர்ப்பந்தப்படுத்தும் பயமுறுத்தும் நடவடிக்கைகளை உள்ளடக்குவதனால் அவை பிரச்சினைக்கு பங்களிக்குமே தவிர தீர்வுக்கு பங்களிப்பதி;ல்லை. வன்முறை முரண்பாடுகளுக்கு ஆக்கபூர்வமான பல்வேறு திர்வுகளைக் காண்பதற்கு அபிவிருத்தி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை பொது நன்மைகளை உயர்த்துவதற்கு வலியுறுத்தகின்றன. மூன்றாம் கட்சிகளைப் பயன்படுத்துதல் மேன்மையுடைய பின்வாங்கல் நடைமுறையிலுள்ள அதிகாரத் தொடர்புகளையும் தாபனங்களையும் தீர்வுகாணும் அணுகுமுறைகள் அடிக்கடி கவனத்திற் கொள்கின்றன. இவ்வாறு அவற்றின் அடிப்படை இயல்பு மாறுவதை இந்த அணுகுமுறை இல்லாதொழிக்கிறது இந்தக் கருத்தில் மேற்சொன்ன அணுகுமுறைக் கட்டமைப்பு அற்றதும் வரலாற்றுத் தன்மையற்றதுமாகும். ஆகவே, அது உபாயத்தைவிட தந்திரங்களிலேயே கவனம் கொள்கிறது. இந்த விதமான முரண்பாட்டு வழிமுறைக்கான காரணங்களில் அடியிலுள்ள காரணங்களின் வேறுபாடுகளைக் கண்டறிய முயற்சிக்கின்றது. ஆகவே அங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கின்ற வழிகளைப் பயன்படுத்தி அரசியல் வன்முறைக்கான காரணங்களை கட்டுப்படுத்தும் தலையிடும் முயற்சியுமாகும். இல்லாது செய்ய முயற்சிக்கப்படுகிறது. மறுபுறம் வன்முறைகளின் தொழிற்பாடுகள் மீதான கவனம் அது எந்த சமூக ஒழுங்கில் இடம்பெறுகின்றதோ அதன் இயல்பின் கேள்விகளை கேட்க வழிவகுக்கின்றது. ஆகவே, வன்முறை பற்றிய கற்கை பரந்த சமூக, பொருளாதார, அரசியல் கண்ணோட்டத்தைப் பெறுகின்றது. சமூக, ஒழுங்குகளைக் கவனத்திற் கொண்டு அவை எவ்வாறு வன்முறைக்கு இடம் தரவல்லன என்பதைக் கவனத்திற் கொள்ளுதலும் மாற்று வழிகள் உள்ளன என்பதையும் உணர வைக்கின்றது. வன்முறையின் தொழிற்பாடுகளை கவனத்திற் கொள்ளுதல், பிரச்சினை தீர்க்கும் கோட்பாடும் முரண்பாட்டு முகாமைத்துவம் என்பவற்றை வேறுபடுத்துவதை சுலபமாக்குகின்றது. ஒரு பண்பாக இருந்த காரணியை முரண்பாடுகளைத் தீர்க்கும் முயற்சியாக மாற்றுகின்றது. (ஊழஉம - 1975) இவ்வாறு செய்யும்போது முரண்பாட்டுத் தீர்வு அரசியல் எந்திரவியலினதும் வன்முறையின் கட்டுமானப் பின்னணியில் பாராமுகப்படுத்தல் குறைபாடுகளை நீக்குகின்றது.

அரசியல் வன்முறை ஒரு சித்தாந்தமாக மாறலாம். அதாவது தெளிவான நோக்கங்கள் மந்த வாழ்வு போல் மாறினால் அதுவொரு சடங்குமுறை போன்று நடைமுறைப்படுத்தப்படும். பல சந்தர்ப்பங்களில் வன்முறை விரும்புகின்ற அரசியல் நோக்கங்களை உருவாக்கும் ஒரு கருவியாகவே கொள்ளப்படுகின்றது. அத்தகைய கருவியாகும் கருத்து ஒன்றில் வன்முறையினை தொடர்புபடுத்தும் வழியாகவோ அல்லது அழிவை ஏற்படுத்தும் வழியாகவோ வரைவிலக்கணப்படுத்த உதவும். வன்முறை தனிப்பட்ட ரீதியில் (ஒருபக்கமாக) நடிகர்களின் தனிமைப்படுத்தலையும் உடைப்பதற்கான செய்தியாகவும் அனுப்புகின்றது. சாத்வீகமான வழிமுறைகளினு}டாக அடைய முடியாத சமூக மாற்றங்களை உருவாக்குவதற்காகவே உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றன.

உசாத்துணை நு}ல்கள்

1. Peter wallensteen, ed: Peace Research Achievements and Challenges (Voulder & London : Westview Press, 1988)
2. Raimo Vayrymen, ed: New Directions in Conflict Theory (New Delhi: sage Publications, 1991)
3. Alarn C. Tidwell, Conflict Resolved A Critical Assesment of Conflict Resolution (Newyork : Ointer 1998)
4. J. E. T. Elderge, ed: Max Weder : The Interpretation of Social Reality (London : Michae Hoseph 1971)

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...