Friday, July 03, 2009

நட்சத்ரவாசியின் கவிதைகள்


உடைந்த நாற்காலி
*******

-- நட்சத்ரவாசி


ஒரு பழைய நாற்காலியின்
உடைந்த காலொன்று
மிகவும் கவனத்துடன்
பொருத்தப்பட்டிருக்கிறது
உடைந்த நாற்காலி என்று
சொல்லிக் கொள்ளவில்லை
ஆயினும்
உடைந்து விடும் என்பது
நிச்சயமே
உன் இருப்புக்கும்
அதன் இருப்புக்கும்
இடையில்
இருப்பின் தவிப்பாய்
என்னொரு மனம்.

No comments:

ஞானபீடம்:சர்ச்சைகள், விமர்சனங்கள், விவாதங்கள்

தக்கலை இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த ‘ஞானபீட விருது குறித்த சர்ச்சை’ தொடர்பான விவாதக் கூட்டம் மிகவும் காரசாரமாக அமைந்த நிலையில், வ...